Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொன்ஸ்பிரஸி தியரியை நானும் கேட்டிருக்கிறேன். இதுபோலவே பரனைட் 911 என்றும் ஒன்று வந்தது.

அநேகமாக இவர்கள் வாதத்திற்காக முன்வைக்கும் விடயங்கள் எவராலும் கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை.  

உதாரணத்திற்கு, விமானம் இடித்த கட்டிடங்களுக்கு அருகிலிருந்த கட்டிடங்கள் எந்தவிதமான தாக்குதலுக்கும் முகம் கொடுக்காமலேயே வெடிகுண்டுகளை நேர்த்தியாக வைத்து கட்டம் கட்டமாக விழுந்து நொருங்குகிறதென்பது. 

அதேபோல, உயர் வெப்பநிலைகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய உருக்கிரும்பினால் ஆன கட்டிட தூண்கள் வெறுமனே 800 டிகிரீ செல்ஸியஸில் உருகியதென்பது.

அவ்வாறே, கட்டிடங்களுடன் மோதும் விமானங்களில் ஒன்று பயணிகள் விமானம் போல் அல்லாது பொதிவிமானமாக இருப்பதென்பதும், விமானம் கட்டிடத்துடம் மோதுவதற்கு முன்னமே விமானத்தின் அடியில் நெருப்புப் பிழம்பு தென்படுவதும், அது ஒரு ஏவுகணையாக இருக்கலாம் என்பதும்.

அவ்வாறே, பென்ரகன் தளத்திற்கருகில் இருந்த எந்தக் கமராவிலும் விமானம் ஒன்று தாழ்வாகப் பறப்பது பதியப்படவில்லை என்பதும், அண்மையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் சி சி டீவீ கமெராவின் ஒளிப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது.

நெடுநாட்களுக்காக கொடுக்கப்பட்ட மக்களின் அழுத்தத்திற்குப் பின்னர், அரசு வேண்டா வெறுப்பாக வெளியிட்ட பென்ரகன் தாக்குதல் சம்பவத்தில் சடுதியாகத் தோன்றி மறையும் பொருள் விமானம் அல்ல, மாறாக ஏவுகணையென்பது.

இப்படி, தாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு பல நிபுணர்களையும் பேட்டி கண்டு தாம் கூறுவதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க முற்படுகிறார்கள்.

ஆனால், இறுதியில், நீங்களே சிந்தித்துப் பாருங்கள் என்று உங்கள் தலைக்குள் போட்டுவிடுகிறார்கள்.

அமெரிக்காவின் தலைவராக இருந்த புஷ் மற்றும், டிக் செனி, டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோர் பற்றிய நம்பகத்தன்மையும் இந்த கொன்ஸ்பிரஸி தியரிகள் வேகமாகப் பரவுவதற்கு இன்னுமொரு காரணம். ஏனென்றால், தாக்குதல் நடந்தவேளை, புஷ் ஒரு சிறுவர் பள்ளியில் சிறார்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரது உதவியாளர் தாக்குதல்பற்றி அவரின் காதில் மெதுவாகச் சொல்லும்போது, அவரது முகத்திலுள்ள உணர்ச்சிகள் பற்றிப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதாவது, தாக்குதல்பற்றி முன்னமே தெரிந்திருந்ததினால்த்தான், அவரது முகத்தில் எந்தவித அவசரமோ, அதிர்ச்சியோ இருக்கவில்லை என்பது. ஆனால், சிறுவர்கள் முன்னால் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்த அவர் முனையவில்லை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.

அதேபோன்று, ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், மசகு எண்ணெய் வியாபாரக் கம்பெனிகள் என்பவற்றில் முதலீட்டாளர்களாக அல்லது பங்குதாரர்களாக இருந்த டிக் செனி மற்றும் ரம்ஸ்பீல்ட் போன்றவர்கள் புஷ்ஷுடன் தமக்கிருந்த நெருக்கத்தைப் பாவித்து இத்தாகுதலை நடத்தி ஒரே நேரத்தில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் இரு சண்டைகளை நடத்தத் தீர்மானித்தார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

ஒஸாமாவின் தோழர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவே நான் நம்புகிறேன். சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல தனது சொந்த மக்களில் 3000 பேரைக் கொல்லவேண்டிய தேவையோ அல்லது அதற்கான கொடூரக் குணம்கொண்டவர்களாகவோ நான் புஷ்ஷையோ அல்லது அவரது சகாக்களையோ பார்க்கவில்லை.

ஆனால், பதில்த்தாக்குதல்களாக புஷ்ஷும் அவரது சகாக்களும் ஆரம்பித்த இரு யுத்தங்களில் கொல்லப்பட்ட மில்லியன்கணக்கான பொதுமக்கள், இதுவரையுமே கண்டுபிடிக்கமுடியாமல்ப் போன சதாமின் பாரிய அழிவைக் கொடுக்கும் ஆயுதங்கள் என்று பார்க்கும்போது, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்கர்களால் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த அனைத்துமே அமெரிக்கர்களால், ரெட்டைக் கோபுரத் தாக்குதலிற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டவை. சரியான தருணம் வரும்வரை பார்த்திருந்தார்கள் என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ragunathan said:

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்கர்களால் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த அனைத்துமே அமெரிக்கர்களால், ரெட்டைக் கோபுரத் தாக்குதலிற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டவை. சரியான தருணம் வரும்வரை பார்த்திருந்தார்கள் என்பதுதான் எனது கருத்து.

இந்த இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்திருக்காவிட்டால் எமது விடுதலைப் போராட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கணவன் சனிக்கிழமை வெளிநாடு போய் பின்னர் திங்களோ செவ்வாயோ கோல் எடுக்க மனுசி answer பண்ணவில்லை . பக்கத்து வீட்டுக்காரருக்கு அடித்து விசாரிக்கச் சொன்னால் வீட்டில் துணைக்கு வந்து படுக்கும் பெண்ணும் இரண்டு பிள்ளைகளும் வீட்டுக்குள் மனுசிக்காரி கத்திகுத்துக் காயங்களுடன் கிணத்துக்குள் பிணமாக - இது அண்மைய செய்திகளில் ஒன்று

   இதை எனது மனுஷியிடம் சொன்னேன் அவ சொல்லுறாஆருக்கப்பா சுத்துறாங்கள் துணைக்கு வந்த மனுசியும் பிள்ளைகளும் அப்பிடியே வீட்டுக்குள் இருக்கினம் இவ மட்டும் எப்படி கிணத்துக்குள்ள”  எண்டு …

" கான்ஸபிரசி தியரி  "   ??  எல்லா இடங்களிலும் எல்லா தரங்களிலும்  !!

“ நடந்த விடயத்தை , நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு என் நடந்தது, இனி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறதை விட்டு விட்டு உம்மட மூளை ஏனப்பா இப்படி திருக்கீஸ்  காட்டுது”      எண்டதோடு அப்பால் நகர்ந்தேன்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.