Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நà¯à®±à¯à®±à¯ மாலà¯

காஷ்மீர் எல்லையில் பாக். தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.. தொடரும் பதற்றம்!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து நேற்று தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் என்று கூறியது. அதன் ஒருகட்டமாக தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தà¯à®à®°à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯

நேற்று மாலையில் இருந்தே பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று காஷ்மீரின் சோபியான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இன்றும் அந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் 12-15 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாக சோபியான் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பாக். ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலியாகாத வகையில் இந்திய ராணுவம் பாதுகாப்பாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மிகவும் உயர் ரக ஆயுதங்களை வைத்து தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

நேற்று மாலை 6.30 மணியில் இருந்து பாக். தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய ராணுவமும் தொடர்ந்து திருப்பி தாக்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/pakistan-violates-ceasefire-kashmir-border-again-5-army-peronnel-injured-342529.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ceasefire-story_647_110216021748_110816060530_041717094146_0-720x450.jpg

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய இராணுவம் வீரர்கள் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் இன்று காலை (புதன்கிழமை) அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

அதேநேரம், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தீவிரவாதிகள் மீது இந்தியா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் தீவிரவாதளபதிகள் உள்ளிட்ட சுமார்  300க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 

 

http://athavannews.com/ஜம்மு-காஷ்மீர்-எல்லை-பகு/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்... எல்லையில் பயங்கரம்..!

gffdsg_1200x630xt.jpg

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி தாக்கி அழித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் மறுநாளே காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பொறுப்பேறுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை சென்று தாக்குதல் நடத்தி ஒரு நாள் ஆகிறது. இந்த தாக்குதலில் இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக 12 விமானங்கள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் இந்தியா தற்போது தீவிரமாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என கொக்கரித்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் தாக்கி வருகிறது.

இதனால்,இந்தியா தீவிரமாக போர் பயிற்சி செய்து வருகிறது. இந்த போர் பயிற்சியில் தற்போது எதிர்பாராத வகையில் பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது.

காஷ்மீரில் பியிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகினர். பயிற்சி செய்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. விமானமே வெடித்து சிதறிய காரணத்தால் விமானத்தில் இருந்து விமானிகள் வெளியேற முடியவில்லை.

நேற்று தாக்குதல் நடந்த புட்காம் பகுதிக்கு 7 கிமீ தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த மறுநாளே இந்த விபத்து ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

https://tamil.asianetnews.com/india/two-iaf-pilot-dead-after-jet-crashed-budgram-pnkobf

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்... எல்லையில் பயங்கரம்..!

 

Edited by adsharan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

அதேநேரம், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதெல்லாம் நம்பிறமாதிரியா இருக்கு?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

இதெல்லாம் நம்பிறமாதிரியா இருக்கு?!

Image may contain: one or more people

உலகிலேயே... இந்திய ஊடகங்கள் தான், மிக  அதிகமான பொய்  செய்திகளை...  கூறுபவர்களாம். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.