Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்கேதீஸ்வர சம்பவம் – சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர சம்பவம் – சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம்

March 4, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

0-6.jpg?resize=720%2C405

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முரண்பாடுகளைத்தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னார் காவல்துறையினர்; வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர்.

பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மாலை ஈடுபட்டிருந்தனர்.

எனினும் அப்பகுதிக்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குள் உள் நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் உட்;பட பலர் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததுடன் புதிதாக வளைவை அமைக்கவிடாது அதனை உடைத்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு சென்ற மன்னார் காவல்துறையினர் இரு தரப்புனரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேறுவதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முழு முதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது.

எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயல்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்துக்குருமார் பேரவை இந்துக் குருமார்கள் வெளியேறிக் கொள்ளுகின்றோம் என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0-2-1.jpg?resize=720%2C4050-3-1.jpg?resize=720%2C405  0-8.jpg?resize=720%2C4050-9.jpg?resize=720%2C405sarma.jpg?resize=720%2C480

 

http://globaltamilnews.net/2019/115032/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தில் இந்த அந்தணர்களே குருக்களாக வர முடியும்.
எனவே இவர்கள் இங்கு ஆளுமை செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் அதனால்த்தான் வளைவை உடைத்தார்களோ????

  • கருத்துக்கள உறவுகள்

வளைவை உடைத்தது யார்? கிறீஸ்த்தவர்களா? அல்லது பெளத்த சிங்களவர்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.