Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் இனிய மலையாளப் பாடல்

Featured Replies

என்னை கவர்ந்த இந்த இனிய பாடல் உங்களையும் நிச்சயமாக கவரும்..

எங்கள் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள நெருக்கத்தையும் அவதானியுங்கள்..

:unsure::unsure::unsure:

  • Replies 72
  • Views 10.5k
  • Created
  • Last Reply

நல்லாதானிருக்கு இணைப்புக்கு நன்றி

என்னை கவர்ந்த இந்த இனிய பாடல் உங்களையும் நிச்சயமாக கவரும்..

எங்கள் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள நெருக்கத்தையும் அவதானியுங்கள்..

:o:lol::lol:

அழகாத்தானிருக்கு பொன்னி :P

அழகாத்தானிருக்கு பொன்னி :P

எது???

:o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எது???

:D

ஜம்முகுட்டி.. அவர் காட்சி அழகு என்றார். அதில் தப்பென்ன..

B)

Edited by Ponniyinselvan

ஜம்முகுட்டி.. அவர் காட்சி அழகு என்றார். அதில் தப்பென்ன..

B)

வணக்கம் தாத்தா எப்படி சுகம் அவர் என்னத்தை அழகு என்று சொல்லி இருப்பார் என்று எனக்கு தானெ தெறியும்

:D

  • தொடங்கியவர்

வணக்கம் தாத்தா எப்படி சுகம் அவர் என்னத்தை அழகு என்று சொல்லி இருப்பார் என்று எனக்கு தானெ தெறியும்

:blink:

குட்டிகள் உங்களுக்கு தெரியும் அழகு எனக்கு தெரியாமல் போனதேன்?

:blink:

குட்டிகள் உங்களுக்கு தெரியும் அழகு எனக்கு தெரியாமல் போனதேன்?

:lol:

ஒவ்வொரு அழகும் ஒவ்வொரு வயசில தான் தெறியும்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகாலத்துக்குப்பிறகு வணக்கம் பொன்னு!பாட்டுக்களெல்லாம் நல்லாத்தான் கிடக்கு.அதுசரி தங்களுக்கு என்ன நடந்தது?இவ்வளவு கேவலமாய் வந்துட்டியள்?தண்ணி கிண்ணியேதும் சரியில்லையோ இல்லாட்டி கரண் வயரிலை ஏதும் கையைகிய்யை வைச்சிட்டீரோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்து கணணியைத் திறந்ததும் ஓரு அழகான பாடலை கேட்க வைத்தீர்கள். நன்றி பொன்னி..

இதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள். (என் ஞாபகத்திலிருந்து).

என்ட ஜென்மம் நீ யெடுத்து

நின்ட ஜென்மம் ஞானெடுத்து!

நம்மிள் மேகம் பூ சொரிஞ்சு

நம்மிள் தம்மிள் தேன் சொரிஞ்சு

ம்..ம்..ம் (முனகலான ஹம்மிங்)

கைகளென்ன தொட்டிலாக்கி பாடினால் ஞான் தாலேலோ!!

கைகளென்ன தொட்டிலாக்கி பாடினால் ஞான் தாலேலோ!!

என்ட பொன்னு மோளுறங்கு

ஞென்ட மார்பிள் நீ யுறங்கு!

என்ட பொன்னு மோளுறங்கு

ஞென்ட மார்பிள் சேர்ந்துறங்கு!!

என்ட ஜென்மம்.....

இதுகூட மிகவும் பழைய பாடல். றேடியோவில் கேட்க நன்றாயிருக்கும்

அப்பொதெல்லாம் எனது பிள்ளையை தூங்கவைக்க இதை நான் பாடுவதுன்டு. பிள்ளை இரண்டு மாதக்குழந்தையாய் இருந்தப்பகூட பாடலை நன்றாக விளங்கி உறங்குவாள்ளென்றால் பாருங்களேன்.. :P :P ... ..

  • தொடங்கியவர்

கனகாலத்துக்குப்பிறகு வணக்கம் பொன்னு!பாட்டுக்களெல்லாம் நல்லாத்தான் கிடக்கு.அதுசரி தங்களுக்கு என்ன நடந்தது?இவ்வளவு கேவலமாய் வந்துட்டியள்?தண்ணி கிண்ணியேதும் சரியில்லையோ இல்லாட்டி கரண் வயரிலை ஏதும் கையைகிய்யை வைச்சிட்டீரோ? :lol:

வணக்கம் குமாரசாமி ஐயா.. நான் நலமாகத்தானே இருக்கிறேன்.. கேவலம் என்றவுடன் நான் மற்ற கேவலத்தை நினைச்சுப் பயந்திட்டன். ஆனால் நீங்கள் அந்த மாதிரி சொல்லமாட்டீங்கள் எண்டு தெரிஞ்சதாலை ஆறுதல்.. நீங்களும் நலந்தானே..

:lol:

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

இன்று வந்து கணணியைத் திறந்ததும் ஓரு அழகான பாடலை கேட்க வைத்தீர்கள். நன்றி பொன்னி..

இதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள். (என் ஞாபகத்திலிருந்து).

என்ட ஜென்மம் நீ யெடுத்து

நின்ட ஜென்மம் ஞானெடுத்து!

நம்மிள் மேகம் பூ சொரிஞ்சு

நம்மிள் தம்மிள் தேன் சொரிஞ்சு

ம்..ம்..ம் (முனகலான ஹம்மிங்)

கைகளென்ன தொட்டிலாக்கி பாடினால் ஞான் தாலேலோ!!

கைகளென்ன தொட்டிலாக்கி பாடினால் ஞான் தாலேலோ!!

என்ட பொன்னு மோளுறங்கு

ஞென்ட மார்பிள் நீ யுறங்கு!

என்ட பொன்னு மோளுறங்கு

ஞென்ட மார்பிள் சேர்ந்துறங்கு!!

என்ட ஜென்மம்.....

இதுகூட மிகவும் பழைய பாடல். றேடியோவில் கேட்க நன்றாயிருக்கும்

அப்பொதெல்லாம் எனது பிள்ளையை தூங்கவைக்க இதை நான் பாடுவதுன்டு. பிள்ளை இரண்டு மாதக்குழந்தையாய் இருந்தப்பகூட பாடலை நன்றாக விளங்கி உறங்குவாள்ளென்றால் பாருங்களேன்.. :P :P ... ..

Suvy, ஒரு நல்ல கலாரசனை உள்ளவராக உங்களை இனம் கண்டு கொண்டது மிக்க சந்தோசமாக இருக்கிறது. அருமையான பாடல்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அர்ஜுனன் எதிரிகளின் படைகளை பிளந்துசெல்லும் யுக்தியை ஆசானிடம் பயிலும் வேளையில் தாயில் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யு அதைக் கேட்டிருக்கிறான். தாய் அந்த இடத்தை விட்டு சற்று அகன்றுவிட்டதினால் அவனால் முழுவதையும் கேட்க முடியவில்லை. இதனால் பாரத யுத்தத்தில் அவன் எதிரிகளின் அணியை பிளந்து சென்று மீழ வரமுடியாமல் போகிறது. இது காவியம்.

உண்மையில் குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போது வெளியில் ஒலிக்கும் ஒலிகளை, முக்கியமாக பாடல்கலை கேட்கிறதாம். உங்கள் மகளும் நிச்சயமாக இந்த பாடலை அப்படி கேட்டிருக்கும் சாத்தியம் உண்டு. என் மகளுக்கும் இப்படி ஒரு அபிமானப்பாடல் இருந்தது. என் மகள் வளர்ந்து இப்போ ஒரு மகனுக்கு தாயாகிவிட்டாள். இருந்தாலும் அந்த நினைவுகளில் கரைந்து, கலந்து போகிறேன்.

என் நெஞ்சைத்தொட்ட அந்த வரிகளுக்கு மீண்டும் நன்றி Suvy.

:lol:

  • தொடங்கியவர்

Suvy, ஒரு நல்ல கலாரசனை உள்ளவராக உங்களை இனம் கண்டு கொண்டது மிக்க சந்தோசமாக இருக்கிறது. அருமையான பாடல்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அர்ஜுனன் எதிரிகளின் படைகளை பிளந்துசெல்லும் யுக்தியை ஆசானிடம் பயிலும் வேளையில் தாயில் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யு அதைக் கேட்டிருக்கிறான். தாய் அந்த இடத்தை விட்டு சற்று அகன்றுவிட்டதினால் அவனால் முழுவதையும் கேட்க முடியவில்லை. இதனால் பாரத யுத்தத்தில் அவன் எதிரிகளின் அணியை பிளந்து சென்று மீழ வரமுடியாமல் போகிறது. இது காவியம்.

உண்மையில் குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போது வெளியில் ஒலிக்கும் ஒலிகளை, முக்கியமாக பாடல்கலை கேட்கிறதாம். உங்கள் மகளும் நிச்சயமாக இந்த பாடலை அப்படி கேட்டிருக்கும் சாத்தியம் உண்டு. என் மகளுக்கும் இப்படி ஒரு அபிமானப்பாடல் இருந்தது. என் மகள் வளர்ந்து இப்போ ஒரு மகனுக்கு தாயாகிவிட்டாள். இருந்தாலும் அந்த நினைவுகளில் கரைந்து, கலந்து போகிறேன்.

என் நெஞ்சைத்தொட்ட அந்த வரிகளுக்கு மீண்டும் நன்றி Suvy.

:lol:

Suvy,

இதை தற்செயல் என்பதா? அல்லது ஒரே அலைவரிசை என்பதா? நான் உங்களுக்கு அபிமன்யுவை பற்றி குறிப்பிட்டு விட்டு மற்றப் பக்கம் போனால்.. கிருபன்.. சேர்த்திருக்கும் சிவசேகரம் கவிதைகள் என்ற தலைப்பில் (சம்பவாமி யுகே யுகே) அபிமன்யுபற்றி நான் குறிப்பிட்ட பகுதியை சமகால நிகழ்வுக்கு உவமானமாக கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார். வாசித்துப்பாருங்கள். நல்ல கவிதை

:lol:

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

Suvy,

மலையாளத் திரைப்படங்களான "பரதம்", "His Highness Abdulla" படங்களில் ரவீந்திரனின் இசையமப்பில் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா? அருமையான பாடல்கள்

:o

ஆ பாட்டு வளர நல்லாயிட்டு உண்டு.

ஞான் நன்றி பறையுதானா

எனக்கு குறைச்சூண்டு மலையாள காணம் கிட்டுமோ ?

  • தொடங்கியவர்

ஆ பாட்டு வளர நல்லாயிட்டு உண்டு.

ஞான் நன்றி பறையுதானா

எனக்கு குறைச்சூண்டு மலையாள காணம் கிட்டுமோ ?

பரணி.. தமிழ் மொழிபெயர்ப்பு தருவீர்களா?

:rolleyes:

பொன்னியின் செல்வன் பாடல் இணைப்பிற்கு நன்றி .... பாடல் நன்றாக இருக்கு கேட்பதற்கு.

ஆ பாட்டு வளர நல்லாயிட்டு உண்டு.

ஞான் நன்றி பறையுதானா

எனக்கு குறைச்சூண்டு மலையாள காணம் கிட்டுமோ ?

இதுதான் மலையாளமொ ? :rolleyes::)

ஆ பாட்டு வளர நல்லாயிட்டு உண்டு.

ஞான் நன்றி பறையுதானா

எனக்கு குறைச்சூண்டு மலையாள காணம் கிட்டுமோ ?

இதா மலையாளம் தமிழுக்கும் மலையாலத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை போல இருக்கு

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Ponniyinselvan' date='May 5 2007, 01:55 AM' post='297690']

Suvy,

இதை தற்செயல் என்பதா? அல்லது ஒரே அலைவரிசை என்பதா? நான் உங்களுக்கு அபிமன்யுவை பற்றி குறிப்பிட்டு விட்டு மற்றப் பக்கம் போனால்.. கிருபன்.. சேர்த்திருக்கும் சிவசேகரம் கவிதைகள் என்ற தலைப்பில் (சம்பவாமி யுகே யுகே) அபிமன்யுபற்றி நான் குறிப்பிட்ட பகுதியை சமகால நிகழ்வுக்கு உவமானமாக கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார். வாசித்துப்பாருங்கள். நல்ல கவிதை

:lol:

  • தொடங்கியவர்

quote name='Ponniyinselvan' date='May 5 2007, 01:55 AM' post='297690']

ஆம் பொன்னி எனக்கு மிகவும் பிடிக்கும். முடிந்தால் இனையுங்களேன். நான் மத்தியகிழக்கு நாடுகளில் வேலைசெய்தபோழுது நிறைய கேரளநன்பர்கள், பஞ்சாபிநன்பர்களுடன் நல்ல பரிச்சயம் இருந்ததுன்டு.

மேலும் இருநாட்களாக களத்துடன் உறவாட நேரமில்லை. அத்துடன் பிள்ளைகளும் லீவில் வந்துநிற்பதால் கணணியும் பிஸி..

அத்துடன் ஒரு விடயம் பொன்னி! மகாபாரதச் சம்பவம் குறிப்பிட்டிருந்தீர்கள்! சிறு திருத்தம்: அர்ச்சுனனின் மனைவி சுபத்திரை கர்ப்பமாக இருந்தபோது கன்னன் அங்கு வருகிறார். அவர் அவவுக்கு போரில் பத்மவியூகம் பற்றியும் அதனுள் புகுந்து போர் செய்வது பற்றியும்கூறுகின்றார். அதைக் கேட்டபடியே சுபத்திரை களைப்பில் உறங்கி விடுகிறார். ஆனால் தொடர்ந்து ம்....ம்....ம் என சத்தம்வர பகவான் கவனித்துப் பார்த்தபோது கர்ப்பத்திலிருந்த சிசு அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. உடனே கன்னன் அந்த இடத்திலேயே கதையை நிறுத்திவிடுகிறார். அதனால்தான் அபிமன்யுவுக்கு போரின்போது அந்த வியூகத்தினின்றும் வெளியே வர வழி தெரியவில்லை.

இப்போ சிவசேகரத்தின் கவிதைப்பக்கம் சென்று பார்க்கிறேன். நன்றி.

Suvy, அபிமன்யுவின் கதையில் எனக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

His Highness Abdulla விலிருந்து, "பிரமதவனம் வேண்டும்" பாடல் இணத்திருக்கிறேன்.

http://www.esnips.com/doc/4d9e884a-979a-4a...---Pramadavanam

"பரதம்" படத்திலிருந்து "ராமகதா கானலயம்" ,

http://www.esnips.com/doc/a91e290a-7432-4c...f66f/Rama-Kadha

"ஸ்ரீவினாயகம்" ஆகிய பாடல்கள் இணத்திருக்கிறேன்

http://www.esnips.com/doc/da7ba8bd-992e-48.../Srivinayakam-Y

:lol:

:huh:

ம் மலையாளம் கதைக்கும்போது தமிழ்போலத்தான் இனிக்கும்

நான் அரேபிய தேசம் சென்ற இரண்டாவது நாளே கதைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன் (ஆங்கிலம் கதைக்க பயம்).அதனால் ஓரு மாத இடைவெளியில் மலையாளம் தமிழ்போல் வந்துவிட்டது. இன்றும் எனது கேரள நண்பர்களுடன் மலையாளம்தான் கதைப்பதுண்டு. எனது வீட்டிலும் ரிரிஎன் மற்றும் ஏசியா நெற் காட் தான் வைத்திருக்கின்றேன்.

பாட்டு மிக நன்றாக இருக்கின்றது

நான் அதற்கு நன்றி கூறுகின்றேன்

எனக்கு இன்னும் கொஞ்சம் மலையாளப்பாட்டு கிடைக்குமா ?

மலையாளப்பாடல் படங்களிற்கு அணுகவேண்டிய தளம்

http://tamilsfront.net/movies/viewforum.php?f=18

  • தொடங்கியவர்

ம் மலையாளம் கதைக்கும்போது தமிழ்போலத்தான் இனிக்கும்

நான் அரேபிய தேசம் சென்ற இரண்டாவது நாளே கதைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன் (ஆங்கிலம் கதைக்க பயம்).அதனால் ஓரு மாத இடைவெளியில் மலையாளம் தமிழ்போல் வந்துவிட்டது. இன்றும் எனது கேரள நண்பர்களுடன் மலையாளம்தான் கதைப்பதுண்டு. எனது வீட்டிலும் ரிரிஎன் மற்றும் ஏசியா நெற் காட் தான் வைத்திருக்கின்றேன்.

பாட்டு மிக நன்றாக இருக்கின்றது

நான் அதற்கு நன்றி கூறுகின்றேன்

எனக்கு இன்னும் கொஞ்சம் மலையாளப்பாட்டு கிடைக்குமா ?

மலையாளப்பாடல் படங்களிற்கு அணுகவேண்டிய தளம்

http://tamilsfront.net/movies/viewforum.php?f=18

பரனீ.. நன்றி.. இதே பகுதியில் மேலே மூன்று மலையாளப்பாடல்கள் இணைத்திருக்கிறேன்.

:lol:

  • தொடங்கியவர்

பரனீ.. யாழ் கொம் மூலமாக நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் மலையாளம் சொல்லித் தரலாமே?

<_<

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

பரனி.. மலையாளம் சொல்லித்தரமுடியுமா என்று கேட்டேன்

:)

ம் மலையாளம்தானே சொல்லித்தந்தால் போச்சு

அள்ளி அள்ளி கொடுக்கத்தான் அறிவு வளரும் என்பார்கள். ம் நானும் கொஞ்சம் வளர்க்கலாம்.....

3வாரங்கள் பாரத மண் நோக்கிய பயணம் செய்ய இருக்கின்றேன். சென்று வந்து சொல்லித்தருகின்றேன்.

நட்புடன் பரணீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.