Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று

May 12, 2019

1 Min Read

ipl-2019.png?resize=800%2C43112 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி, ஹைதராபத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ளது.

ஐபிஎல்லின் இந்தக் சீசனில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டி உட்பட 3 போட்டிகளிலும் மும்பை அணியே வென்றுள்ள நிலையில் இவ்விரு அணிகளும் நான்காவது தடவையாக போட்டியிடவுள்ளன.

சென்னை அணி இதுவரை 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ள அதேவேளை மும்பை அணி 5 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/121410/

 

  • Replies 106
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

IMG-0613.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலார்ட் அதிரடி – சென்னை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

polard.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு 150 ஓட்டங்களை மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இன்று சென்னை சுப்பர் கிங் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நாணய வென்ற மும்பை அணி தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பெடுத்தாட தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து மும்பை அணி களமிறங்கியது.

அதன்பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 8 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக பொலார்ட் அட்டமிழக்கத்து 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் குயின்டன் டி கொக் 29 ஓட்டங்களையும் ஈசன் ஹிசான் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணி சார்பாக பந்து வீச்சில் தீபக் சஹார்3 விக்கெட்களையும் ஷர்டுல் தாகூர் இம்ரான் தஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

mu-csk3.jpg

mu-csk2.jpg

mu-csk1.jpg

mu-csk.jpg

 

 

http://athavannews.com/பொலார்ட்-அதிரடி-சென்னை-அ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் 

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.  வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.
 

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது.  

 

கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி.

 

https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/12233544/1241380/ipl-2019-final-MIvsCSK.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

                  Résultat de recherche d'images pour "mumbai indian cricket team gif"

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.vikatan.com/news/sports/157362-can-you-guys-see-blood-on-watson-knee.html?fbclid=IwAR1jN0Y-EvLwvkH6Si89dMW-jvAnuk3zfCIB4nrutUUcJ3T3xUeRCLny5Yc

 

``வாட்சன் காலில் ரத்தக்கறையைக் கவனித்தீர்களா?"- இன்ஸ்டாகிராமில் படத்துடன் கேள்வியெழுப்பிய ஹர்பஜன்!

வாட்சன்

வாட்சன் எதுக்கு பாஸ் மேட்ச்ல வச்சிருக்காங்க. ஐபிஎல் ஃபைனல் போட்டி வரை இந்தக் கேள்வி இருந்தது. இந்தக் கேள்விக்கு ஃபைனலில் பதிலடி கொடுத்தார் வாட்சன். போராட்ட குணமே ஒரு போர் வீரனுக்கான அடையாளம். வாட்சன் களத்தில் இருக்கும் வரை போராடிக்கொண்டே இருந்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்டிக்கொண்டு இருக்க வாட்சன் வெற்றியை நோக்கிப் பயணப்பட்டார். சில தருணங்களில் அதிர்ஷ்டமும் வாட்சனுக்குக் கைகொடுத்தது. சில கேட்ச்களை மும்பை வீரர்கள் கோட்டை விடவும் செய்தனர். ஃபிட்னஸ் பிரச்னையாக இருந்தாலும் நாம் விளையாடிக்கொண்டிருப்பது ஃ பைனல். இந்த நாளை தவறவிடக் கூடாது என விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் களமிறங்கிய வீரர் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தால் எதிரணிக்கு பயம் இருக்கத்தான் செய்யும். மும்பை அணியிடம் அந்த பயம் இருந்தது. கடைசியில் விதி விளையாடியது ரன் அவுட்டில் வீழ்ந்தார் வாட்சன்.  போட்டி கைமாறியது மும்பை கோப்பையை ஏந்தியது.

ஐபிஎல்

 

 

 

 

கோப்பையை இழந்தாலும் வாட்சனின் போராட்ட குணத்தைப் பாராட்டி சி.எஸ்.கே ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருந்தனர். வாட்சனின் ஒரு புகைப்படத்தில் அவரது காலில் ரத்தம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இந்தப் புகைப்படம் குறித்து ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ``நேற்றைய போட்டியின் போது வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.