Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க நீதிமன்றில், கோத்தபாயவுக்கு தண்டனை விதிக்க முடியாது – இழப்பீட்டை பெற முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
April 17, 2019

Gotta.jpg?resize=800%2C582
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து கோத்தாபயவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில், கடந்த 7ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டவரிடம் அதனை உரிய முறையில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் இரண்டு சமஷ்டி சட்டங்கள் இருக்கின்றன என்றும் வெளிநாட்டில் சேதத்தை ஏற்படுத்திய குற்றம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அல்லது வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு மனுவொன்றைத் தாக்கல் செய்யவோ பிரதிவாதி தரப்புக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதென்றும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், பிரதிவாதியின்றியே வழக்கை விசாரிக்க முடியும். எனினும் குற்றவியல் வழக்குப் போன்று இந்த வழக்கில் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படாது எனவும், நிதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/2019/118473/

  • கருத்துக்கள உறவுகள்

புரியாமல் கதை பேசுகிறார்கள்.

அமெரிக்க நீதிமன்றின் நஷ்டஈடு என்றால்..... இவர் சகலதும் இழந்து கோவணத்துடன் நிற்கும் அளவில் தான் இருக்கும்.

இலங்கை உள்பட, உலகம் முழுவதும் இவரது சொத்துக்கள் பறிமுதலாகும்.  நீதிமன்ற உத்தரவுடன், அமெரிக்காவில் அரசியல் விளையாட முடியாது.

அரசு தரும், வாராந்திர வாழக்கை கொடுப்பனவுடன் இருக்க வேண்டியது தான்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

புரியாமல் கதை பேசுகிறார்கள்.

அமெரிக்க நீதிமன்றின் நஷ்டஈடு என்றால்..... இவர் சகலதும் இழந்து கோவணத்துடன் நிற்கும் அளவில் தான் இருக்கும்.

இலங்கை உள்பட, உலகம் முழுவதும் இவரது சொத்துக்கள் பறிமுதலாகும்.  நீதிமன்ற உத்தரவுடன், அமெரிக்காவில் அரசியல் விளையாட முடியாது.

அரசு தரும், வாராந்திர வாழக்கை கொடுப்பனவுடன் இருக்க வேண்டியது தான்.   

ஆயுதக் கொள்வனவுகளிலும், தமிழ் மக்களிடமும், அமெரிக்க நலன்களை சீனாவுக்கு விற்றும் கோத்தா சேர்த்த கணக்கில் காட்டப்படாத சொத்து எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Jude said:

ஆயுதக் கொள்வனவுகளிலும், தமிழ் மக்களிடமும், அமெரிக்க நலன்களை சீனாவுக்கு விற்றும் கோத்தா சேர்த்த கணக்கில் காட்டப்படாத சொத்து எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

இங்கே தான், அமெரிக்க நீதிமன்றுக்கும், இலங்கை நீதிமன்றுக்கும் உள்ள வித்தியாசம்.

பொய் சொல்ல முனைந்தால், அதை, FBI, CBI கண்டறிய உத்தரவு போனால், சிவில் வழக்கு, கிரிமினல் வழக்காகி, ஆயுளுக்கும் உள்ளே போவார்.

இது தான் அமெரிக்க பிரஜையான அவரது பயத்துக்கு காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இங்கே தான், அமெரிக்க நீதிமன்றுக்கும், இலங்கை நீதிமன்றுக்கும் உள்ள வித்தியாசம்.

பொய் சொல்ல முனைந்தால், அதை, FBI, CBI கண்டறிய உத்தரவு போனால், சிவில் வழக்கு, கிரிமினல் வழக்காகி, ஆயுளுக்கும் உள்ளே போவார்.

இது தான் அமெரிக்க பிரஜையான அவரது பயத்துக்கு காரணம்.

5th amendment இற்குப் பின்னால் ஒளித்துக் கொள்வார் என நினைக்கிறேன்! ஆனால், இப்போது அமெரிக்க விசாரணையாளர்கள் தாங்களே incriminating evidence  ஐ எடுத்து வைத்துக் கொண்டு தான் பிறகு சந்தேக நபரைக் கேள்வி கேட்கிறார்கள்! மிக வினைத்திறனான அணுகுமுறை. அண்மையில் வலை போட்டுப் பிடித்த கம்பஸ் அனுமதிக்கு இலஞ்சம் கொடுத்த பணமுதலைகளின் கேஸ் நல்ல உதாரணம்! ஒறிஜினல் குற்றத்தில் தப்பி விட்டாலும் perjury எனப்படும் விசாரணையில் பொய் சொன்ன குற்றத்திற்குச் சிறைவாசம் செய்ய வேண்டிவரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.