Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!

Featured Replies

examsmall3wjkb8.gif

பரீட்சை(பிரசவம்!)

தாய்மார்கள் மாத்திரமே

பிரசவ வலியுடன்

பிள்ளைகள் பெறுவதாய்

எவர் சொன்னார்?

பள்ளியில் கற்கின்ற

மாணவர் நாமுந்தான்

வருடத்தில் மூன்றுமுறை

மகப்பேறு அடைகின்றோம்!

கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு

எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ

இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை!

தைமாதம் பள்ளியில்

தொடங்கும் தேனிலவு

சித்திரை புது வருடத்தில்

பிரசவ வலியாகி எமது

உயிரைக் கொல்லும்!

தொடர்ந்து தேனிலவு

தொழிலாளர் தினத்துடன் தொடங்கி

மூன்று மாதங்களில் எமக்கு

மறுபடியும் பிரசவம்!

மார்கழியில் குழந்தை யேசுவின்

பிறப்பு வரும்வரை

தேனிலவும் பிரசவமும் பள்ளியில்

எமைச் சக்கரமாய் சுற்றிவரும்!

மூன்று மாதங்களில் வருந்திச் சுமந்து

நாம் பிரசவிக்கும் குழந்தைகள் ஐந்து!

ஆக, வருடத்தில் மொத்தம் பதினைந்து!

இதில் எத்தனை உயிர் தப்புமென்று...

எத்தனை ஆரோக்கியமாக பிறக்குமென்று...

பரீட்சைக்கு புள்ளிகள்போடும்

பேராசிரியர்களிற்கே தெரியும்!

சுகப்பிரசவமாக அமையவேண்டி தினமும்

கடவுளிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வது,

தியாகம் செய்வது... அன்னையர் மட்டுமல்ல

பரீட்சைக்கு தூக்கமின்றி படிக்கும் மாணவர்களுமே!

பேற்றுக் காலத்தில் அன்னையருக்கு

வயிறு மாத்திரமே வீங்குகின்றது!

ஆனால் சோதனைக் காலத்தில்

எமதுவீடு புத்தக வண்டிகளால் நிறைவதோடு

நம் முதுகுமல்லவா பாரம் சுமக்கிறது!

பத்துமாதங்கள் சுமந்து

ஓரிரு குழந்தைகளை பெறும்

தாய்மாரை விடவும் மேலாக...

பன்னிரண்டு மாதங்கள் சுமந்து

பதினைந்து குழந்தைகள் பெறும்

மாணவர்களாகிய எமக்காக...

அன்னையர் தினம் போல்..

ஆசிரியர் தினம் போல்..

மாணவர் தினத்தையும்

மகிழ்வுடன் கொண்டாடி

எம்மை நீர் கெளரவிப்பீர்!

குறும்பாக எழுதப்பட்டது!

தாய்க்குலமே இந்த அப்பாவி

மாணவனை மன்னிப்பீர்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞன் பன்றி பரவாயில்லை போல.

பத்துமாதங்கள் சுமந்து

ஓரிரு குழந்தைகளை பெறும்

தாய்மாரை விடவும் மேலாக...

பன்னிரண்டு மாதங்கள் சுமந்து

பதினைந்து குழந்தைகள் பெறும்

மாணவர்களாகிய எமக்காக

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிரசவ வேதனை ஒன்றும் வேண்டாம் என்று தான் சின்னனிலேயே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோம்.

அன்னையர் தினம் போல்..

ஆசிரியர் தினம் போல்..

மாணவர் தினத்தையும்

மகிழ்வுடன் கொண்டாடி

எம்மை நீர் கெளரவிப்பீர்!

ஹிஹி .....

நல்லாயிருக்கே .... நல்லா தான் கேட்டிருக்குறீங்க...... :)

குறும்புத்தனமாக எழுதிய கவி சூப்பர்..... ! :P

தொடர்ந்து பல கவிகளை எழுதுங்கோ.... ! :(

examsmall3wjkb8.gif

பரீட்சை(பிரசவம்!)

குறும்பாக எழுதப்பட்டது!

தாய்க்குலமே இந்த அப்பாவி

மாணவனை மன்னிப்பீர்!

கவிதை நன்றாக இருக்கு இருந்தும் ஒரு தாயின் பிரசவம் மறுபிறப்பு அனுபவித்தால் மட்டும் தான் வலி தெரியும் இனி எழுதும் போது குறும்புக்கு கூட தாய்யின் பிரசவ வலியை வெறு எதுக்கும் ஒப்பிடாதீர்கள் இது சின்ன வேண்டுகோள்

அப்பு மாப்பி காக்கி கவிதை நல்லாத்தானிருக்கு

படிக்கிற காலத்தில படிக்காம லப் டப்ப வச்சு கேம் விளையாடுறது, கல்லூரிக்கு வார சோனியா, சிந்துயா, அனுஜா என்று யாரையும் விடுறல்ல. கல்லூரிக்கு வெளியில குப்பம்ம, முனியம்ம எண்டு யாரையும் விடுரதில்ல, வீட்டுக்கு பகதில இருக்க சாந்தி ஆண்டி, கஸ்தூரி அக்கா எண்டு யாரையும் விடுறதில்ல எல்லாருக்கும் கடலை போடுறது, பரீட்சை வார நேரத்தில பாதி நேரம் கோவில் குளம், பாதி நேரம் வாசிக சாலை எண்டு அலையிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு மாப்பி காக்கி கவிதை நல்லாத்தானிருக்கு

படிக்கிற காலத்தில படிக்காம லப் டப்ப வச்சு கேம் விளையாடுறது, கல்லூரிக்கு வார சோனியா, சிந்துயா, அனுஜா என்று யாரையும் விடுறல்ல. கல்லூரிக்கு வெளியில குப்பம்ம, முனியம்ம எண்டு யாரையும் விடுரதில்ல, வீட்டுக்கு பகதில இருக்க சாந்தி ஆண்டி, கஸ்தூரி அக்கா எண்டு யாரையும் விடுறதில்ல எல்லாருக்கும் கடலை போடுறது, பரீட்சை வார நேரத்தில பாதி நேரம் கோவில் குளம், பாதி நேரம் வாசிக சாலை எண்டு அலையிறது

என்ன உங்கட சொந்த அனுபவம் போல இருக்கு வில்லு. :P

மாப்பு...நகைச்சுவையா எழுதிய கவைதை நல்லா இருக்கு. :)

என்ன உங்கட சொந்த அனுபவம் போல இருக்கு வில்லு. :P

மாப்பு...நகைச்சுவையா எழுதிய கவைதை நல்லா இருக்கு. :(

அனுபவமா..................? நாம இப்படி யெல்லாம் புலம்பமாட்டோம் படிக்காட்டிலும் பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடுவம்ல :)

மாப்பு...கவிதை அருமையாக இருக்கிறது.

நல்ல கவிதை..குறும்பு தான் :)

மாப்பி கவிதை நல்லா இருக்கு

அப்பு மாப்பி காக்கி கவிதை நல்லாத்தானிருக்கு

படிக்கிற காலத்தில படிக்காம லப் டப்ப வச்சு கேம் விளையாடுறது, கல்லூரிக்கு வார சோனியா, சிந்துயா, அனுஜா என்று யாரையும் விடுறல்ல. கல்லூரிக்கு வெளியில குப்பம்ம, முனியம்ம எண்டு யாரையும் விடுரதில்ல, வீட்டுக்கு பகதில இருக்க சாந்தி ஆண்டி, கஸ்தூரி அக்கா எண்டு யாரையும் விடுறதில்ல எல்லாருக்கும் கடலை போடுறது, பரீட்சை வார நேரத்தில பாதி நேரம் கோவில் குளம், பாதி நேரம் வாசிக சாலை எண்டு அலையிறது

நீர் சொல்லுற ஆட்கள் எல்லாம் என்னோட படிக்கினம் மாப்பி அவையை கூட விட்டு வைக்கவிலையா

அனுபவமா..................? நாம இப்படி யெல்லாம் புலம்பமாட்டோம் படிக்காட்டிலும் பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடுவம்ல :)

அது தானே தலை நாங்கள் மட்டும் பாஸ் ஆகமாட்டோம் எங்களோடு சேர்ந்து கூத்தடித்த எல்லாரையுமே பாஸ் பண்ண வைத்திடுவோம்

:(

ஆஹா குறும்போடு எழுதிய கவிதை ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது. ரொம்பதான் சுமக்குறீங்க போல. நல்லாக படியுங்க. பரீட்சை பிரசவத்தில் 15 பிள்ளைகளையும் நலமோடு பெற்றெடுக்க வாழ்த்துக்கள். :P

  • தொடங்கியவர்

அனைவரினதும் கருத்துக்களிற்கு நன்றி!

கொஞ்ச நாட்களாக களத்தில் எல்லோரும் கவிதை எழுதித் தள்ளுகின்றார்கள், நாமும் ஏதாவது ஒரு கவிதை எழுதி மற்றாவர்களிற்கு துன்பம் :P கொடுப்போம் என்று மனதில் எண்ணி, கவிதை :unsure: ஒன்று எழுதுவதற்கு ஒரு தலைப்பு சொல்லும்படி நேற்று தற்செயலாக ஒன்லைனுக்கு வந்த யாழ் கள உறவு ஒருவரிடம் கேட்டேன்.

அவர்தான் 'பரீட்சை' என்ற தலைப்பில் ஒரு கவிதை :lol: எழுதுமாறு சொன்னார்.

எனவே, கவிதைக்கான தலைப்பை தெரிவு செய்துதந்த அவருக்கு நன்றி! உங்கள் பாராட்டுக்கள் அவருக்கே செல்ல வேண்டும்.. :(

அவரை யார் என்று இங்கு சொன்னால், பிறகு அவர் நம்மில் கோபிப்பார்.. எனவே இங்கு அவர் பெயரை நாம் சொல்லவில்லை! :(

என்னது அவரின் தலைப்புக்கு நீங்கள் கவிதை எழுதியதை அவர் பெருமைப்படணும். அவர் உங்கள் நண்பர் தானே. அதை பெருமையாக சொல்ல ஏன் தயக்கம்?

என்னது அவரின் தலைப்புக்கு நீங்கள் கவிதை எழுதியதை அவர் பெருமைப்படணும். அவர் உங்கள் நண்பர் தானே. அதை பெருமையாக சொல்ல ஏன் தயக்கம்?

நல்ல கேள்வி ...... B)

பேற்றுக் காலத்தில் அன்னையருக்கு

வயிறு மாத்திரமே வீங்குகின்றது!

ஆனால் சோதனைக் காலத்தில்

எமதுவீடு புத்தக வண்டிகளால் நிறைவதோடு

நம் முதுகுமல்லவா பாரம் சுமக்கிறது

படிப்பதும்

சாப்பிடுவதும்

டீவி பார்ப்பதும்

ஏன்

படுப்பது கூட

புத்தகத்தோட தான் :(

நல்லா இருக்கு உங்க கவிதை வாழ்த்துக்கள் மாப்பு

நான் ஒரு 3 வருடம் முன் (முதல் படிப்பின் இறுதி பரீட்சையின் போது) இப்படி பரீட்சை பற்றியொரு கவிதை எழுதினேன்.உங்கள் கவியை பார்த்ததும் எங்கென்று தேடினேன் போடுவம் என்று..கிடைக்கவில்லை :s

அன்னையர் தினம் போல்..

ஆசிரியர் தினம் போல்..

மாணவர் தினத்தையும்

மகிழ்வுடன் கொண்டாடி

எம்மை நீர் கெளரவிப்பீர்!

பாஸ் பண்ணினால் தான் கௌரவப்படுத்தவும்/கௌரவ படுத்தினாலும் பெருமையா இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கற்பனையுடன் எழுதியிருக்கிறிங்க . நல்லாருக்கு.

பாவம் நீங்க உங்களுக்குத்தான் எத்தனை பிரசவம் நடந்திருக்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பி காக்கி கவிதை சூப்பரோ சூப்பர் :)

மாப்ஸ் உண்மையைச் சொல்லுங்கோ இது முதலே எழுதி வைச்ச கவிதை தானே :-))

சரி சரி இந்தப்பெருமை எல்லாம் என்னையே சாரும்...ஓகே மாப்ஸ் 10 நிமிசத்தில எழுதினீங்கிளோ:-))) என்ர MSN ல ஏற்பட்ட கோளாறால offline messages இப்பத்தான் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடா நீங்கள் என்ன தலைப்புக் குடுத்தாலும் டக் டக்கென்று எழுதிறீங்கிள் :-)) இருங்கோ எனக்கின்னும் 2 பிரசவம் இருக்கு போட்டு வாறன் :-)))

மாப்ஸ் உண்மையைச் சொல்லுங்கோ இது முதலே எழுதி வைச்ச கவிதை தானே :-))

சரி சரி இந்தப்பெருமை எல்லாம் என்னையே சாரும்...ஓகே மாப்ஸ் 10 நிமிசத்தில எழுதினீங்கிளோ:-))) என்ர MSN ல ஏற்பட்ட கோளாறால offline messages இப்பத்தான் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடா நீங்கள் என்ன தலைப்புக் குடுத்தாலும் டக் டக்கென்று எழுதிறீங்கிள் :-)) இருங்கோ எனக்கின்னும் 2 பிரசவம் இருக்கு போட்டு வாறன் :-)))

ஆகா நீங்கள் தான் இப்பரீட்சைப் பிரசவத்தின் தலைப்பா? சினேகிதி கோபிக்கமாட்டாவே கலைஞன்.

தலைப்பு தெரிவும் கவிதையும் சூப்பர். மீண்டுமொருமுறை வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

கவிதையின் தலைப்பிற்கு உரிமை கோரியதற்கு மிக்க நன்றி! :o

உங்களிற்கு இந்தக் கவிதையின் Exclusive CopyRights வழங்கப்படுகின்றது. இந்தக் கவிதையை விற்று கார், வீடு, பங்களா வாங்கி சந்தோசமாக இருக்க வாழ்த்துகள்! :lol: (நிறைய கலக்சன் கிடைத்தால் எமக்கும் கொஞ்சம் தரவும்!) :o

வித்தியாசமான சிந்தனை நன்றாக உள்ளது

ஆனால் தாய்மை வருவதால் கொஞ்சம்

வலியாக உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.