Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ACJU1.jpg

குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா

தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிருஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தினர் அவர்களின் மத வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும், அதற்கான பாதுகாப்பை அகில இலங்கை ஜமியத்துல் உலமா வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கிருஸ்தவ தேவாலயங்களில் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாவிடன் மசூதி அல்லது கிருஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலமையில் பெண்கள் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

http://athavannews.com/குண்டு-தாக்குதலை-நடத்திய/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாதானே வாங்குவதற்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடுவது தவறென்று சில கடும் சிங்கள போக்காளர்கள் அறிக்கைகள் விட்டபோது அதை கடுமையாக எதிர்த்ததும் நீங்கள்,

இப்போ முகத்தை மூடவேண்டாம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அறிக்கை விடுவதும் நீங்கள்.

இந்துக்களினதும் கிறிஸ்தவர்களினதும் சிலை வழிபாடுகளை கடுமையாக விமர்சித்து அவர்கள் நல்லவர்களாய் இருந்தாலும் பரவாயில்லை  அவர்களை கொல்வது இஸ்லாத்தின் பார்வையில்  தப்பில்லை என்று  சஹ்ரான் காசிம் அறிக்கை அறிக்கையாக வீடியோவில் விட்டபோது  அதனை உள்ளூர ரசித்துகொண்டே இலங்கை பாதுகாப்பு படையிடம் இவர்களை அடக்க சொல்லி கேட்டிராத இஸ்லாமிய சமூகம்  இத்தனை பெரிய பதிலடி கிடைக்குறதை பார்த்து சிறுநீர் கழிக்குது,

தமிழர்கள் ஒரு காலம் பட்ட அவஸ்தைபோல் இனிமேல் நாங்களும் அனுபவிக்கபோகிறோம் என்றதும் பயம் வருகிறது.

உள்ளூர் தமிழர்கள் சக மனிதர்கள்போல் நாங்களும் வாழவேண்டும் என்று போராடியது பயங்கரவாதம் என்று சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்ற நீங்கள், எங்கோ இருக்கும் சிரியாகாரனுக்காக ஒட்டுமொத்த சிங்களவனின் இது சிங்கள தேசம் எனும் அவன்  தேச திமிரை  அசைத்து பார்த்தால் சும்மாவா இருப்பான்?

அழிய போகிறோம் என்று தெரிந்ததும் எந்த மாதிரியெல்லாம் உங்களை நல்லவனா காட்டிக்க முயல்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

 

உயிர் நீங்கிய உடலத்தில் அரசியல் செய்வதுவும் ஒருவித வெறித்தனமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.