Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில பழமொழிகளும் பொன் மொழிகளும்

Featured Replies

  • சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும்
  • சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்
  • இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
  • தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
  • கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
  • கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
  • அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
  • அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
  • அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
  • ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
  • இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
  • ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
  • அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
  • அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
  • தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
  • அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
  • படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
  • அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
  • ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
  • ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

  • தொடங்கியவர்

[*]அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

[*]அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்

[*]புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்

[*]அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

[*]பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்

[*]பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்

[*]நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

[*]பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்

[*]அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

[*]ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்

[*]பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

[*]நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

[*]ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

[*]மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

[*]உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

[*]முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

[*]சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

[*]சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

[*]எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டா

  • தொடங்கியவர்

  • செவிடன் இருமுறை சிரிப்பான்
  • ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
  • பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
  • ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்
  • பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
  • தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்
  • குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
  • அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
  • பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
  • குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
  • அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
  • ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
  • அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
  • தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
  • காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
  • கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
  • மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
  • செல்லத் துள்ளி ஓடுகிறான்
  • வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
  • தோண்டிக்கொள்கிறான்
  • இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
  • உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
  • ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
  • மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
  • உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
  • நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
  • மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
  • பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
  • மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
  • தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
  • பழமொழியில் உமி கிடையாது
  • கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
  • மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
  • சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
  • அதிகமாய்க் குத்தும்
  • உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
  • ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

புல்லரிக்க வைக்கும் பழ(புது) மொழிகள்.

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் இது அரட்டை இல்லைத்தானே

வானவில் இது அரட்டை இல்லைத்தானே

இல்லை புத்தரே, நூற்றுக்கு நூறுவீதம் பிரயோசனமான பொன்மொழிகள்.

(எல்லாத் திரிகளிலும் அரட்டை அடிக்கக் கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறது :o )

//அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது//

ம்ம் அஸையுன்மென்ட் கடைசியில செய்யும் போது..இதே தான்...

அருமையான பழமொழிகள் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு நண்பர்களிடம் அவ்வப்போது எடுத்துவிட ஆசையா இருக்கிறது.

[q

  • தொடங்கியவர்

வானவில் இது அரட்டை இல்லைத்தானே

இல்லை புத்தரே அரட்டைகளை அரட்டைகளம்2 என்ற பக்கதில் தாரலமாக அடிக்கலாம் எந்தக் கட்டுப்பாடுமில்லி. இப்படி பயனுள்ள திரிகளிள் அரட்டை அடிப்பதை முற்றாக நிறுத்தினால் நல்லது

  • தொடங்கியவர்

பழமொழிகள்

  1. அகத்தின் அழகு முகத்திலே.
  2. அடி உதவுறாப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
  3. ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  4. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  5. இக்கரைக்கு அக்கரை பச்சை.
  6. இனம் இனத்தையே சாரும்.
  7. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  8. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  9. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  10. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
  11. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
  12. உளவு இல்லாமல் களவு இல்லை.
  13. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
  14. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
  15. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  16. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
  17. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
  18. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
  19. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
  20. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
  21. பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
  22. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
  23. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
  24. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  25. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
  26. எங்கே பர வாசனை?
  27. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
  28. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
  29. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
  30. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  31. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
  32. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
  33. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
  34. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
  35. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
  36. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
  37. கரும்பு தின்னக் கூலியா?
  38. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  39. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
  40. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  41. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
  42. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
  43. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  44. குடல் காய்ந்தால் குதிரையும் புல்லைத் தின்னும்.
  45. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  46. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
  47. கெண்டையைப் போட்டு வராலை இழு.
  48. கெடுவான் கேடு நினைப்பான்.
  49. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
  50. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
  51. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
  52. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  53. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  54. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
  55. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  56. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
  57. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  58. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
  59. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
  60. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
  61. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
  62. சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
  63. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
  64. தன் கையே தனக்கு உதவி.
  65. தன் முதுகு தனக்கு உதவி.
  66. தன் வினை தன்னைச் சுடும்.
  67. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  68. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
  69. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
  70. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
  71. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
  72. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
  73. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
  74. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  75. துணை போனாலும் பிணை போகாதே.
  76. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
  77. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
  78. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
  79. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
  80. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
  81. நிறை குடம் நீர் தளும்பாது.
  82. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
  83. நெருப்பு இல்லாமல் புகையாது
  84. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  85. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  86. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.
  87. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
  88. பாம்பின் கால் பாம்பு அறியும்
  89. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
  90. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி
  91. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
  92. பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
  93. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  94. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
  95. விளையாட்டு வினையாயிற்று.
  96. விளையும் பயிர் முளையிலே தெரியும்
  97. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
  98. வெறுங்கை முழம் போடுமா?
  99. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
  100. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
  101. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
  • தொடங்கியவர்

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
  • இரைச்சல் இலாபம்.
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அறச் செட்டு முழு நட்டம் .
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
  • தான் தியாகம் வாங்கவேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அற்ப அறிவு அல்லற் கிடம்.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

  • தொடங்கியவர்

  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

  • தொடங்கியவர்

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  • இராச திசையில் கெட்டவணுமில்லை
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • இளங்கன்று பயமறியாது
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

  • தொடங்கியவர்

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • '' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
  • தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
  • [ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
  • இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

  • தொடங்கியவர்

  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
  • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  • எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எறும்பு ஊர கல்லுந் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்



  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
  • ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம்.

  • தொடங்கியவர்

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  • ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

  • தொடங்கியவர்

  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

  • தொடங்கியவர்

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

  • தொடங்கியவர்

  • கிட்டாதாயின் வெட்டென மற
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

  • தொடங்கியவர்

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  • கெடுவான் கேடு நினைப்பான்
  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  • கையிலே காசு வாயிலே தோசை
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்ன

  • கருத்துக்கள உறவுகள்

வில்சார்! வரிசைக்கிரமமாக எழுதுகிறீர்கள். மிக நன்றாகவுள்ளது. :lol::lol:

ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்க மாட்டாள்.

  • தொடங்கியவர்

வில்சார்! வரிசைக்கிரமமாக எழுதுகிறீர்கள். மிக நன்றாகவுள்ளது. :lol::lol:

ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்க மாட்டாள்.

ஹாஹா நன்றி தாத்தா

அண்ணே சொன்னீங்கள் போன போகட்டும் எண்டு பாத்தா இப்போ சார் ஆக்கிட்டீங்களே? :angry:

இடம் கொடுத்தா மடம் கட்டூறது எங்கிறது இதுதான :P

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

  • தொடங்கியவர்

'' கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் ''

[* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்*]

'' கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும் ''

[* மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப்

பழகுவதே கோடிப் பெருமை*] இது ஒளவையாரின் பொன்மொழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.