Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெங்காய மருத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்தின் மருத்துவ குணம்பற்றி:-

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இந்தவெங்காயத்தின் மூலம் நமக்குச் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தான் உண்மை. வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்


1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் ஆராய்ந்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும், எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.


மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள், அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எறிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.


மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்ததில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது. அந்த இரண்டாக அரிந்த அந்த வெங்காயமானது அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரசுகள் போன்றவற்றை ஈர்த்துத் தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை பயன்படுத்திய ஒருவர் “நான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன், இதனால் சில நாட்களிலேயே எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.“ எனக் கூறினார்.


பயன்படுத்தும் முறை:-
நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து உங்களது தலை மாட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் அந்த வெங்காயம் ஈர்த்துத் தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் அதனைக் காலையில் எடுத்து வெளியில் எறிந்து விடலாம்.


குறிப்பு:-
நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறானஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விடவேண்டியது அவசியம். அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமைஏற்படும். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீதமான வெங்காயத்தினை பாலித்தின் பைகளில் அடைத்து,அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

Edited by Paanch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து உங்களது தலை மாட்டில் வைத்து உறங்குவதால்,

வெங்காயத்தை தலைமாட்டில் வைச்சால் ரொமான்ரிக் கெட்டுப்போகாதோ? 💔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, குமாரசாமி said:

வெங்காயத்தை தலைமாட்டில் வைச்சால் ரொமான்ரிக் கெட்டுப்போகாதோ? 💔

பரிமளாக்காவும் பக்கத்தில் படுத்தால் ஒன்றும் கெட்டுப்போகாது சாமிகளே.!!

Romance Couples GIF - Romance Couples Anime GIFs

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

வெங்காயத்தின் மருத்துவ குணம்பற்றி:-

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இந்தவெங்காயத்தின் மூலம் நமக்குச் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தான் உண்மை. வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்


1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் ஆராய்ந்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும், எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.


மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள், அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எறிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.


மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்ததில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது. அந்த இரண்டாக அரிந்த அந்த வெங்காயமானது அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரசுகள் போன்றவற்றை ஈர்த்துத் தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை பயன்படுத்திய ஒருவர் “நான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன், இதனால் சில நாட்களிலேயே எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.“ எனக் கூறினார்.


பயன்படுத்தும் முறை:-
நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து உங்களது தலை மாட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் அந்த வெங்காயம் ஈர்த்துத் தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் அதனைக் காலையில் எடுத்து வெளியில் எறிந்து விடலாம்.


குறிப்பு:-
நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறானஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விடவேண்டியது அவசியம். அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமைஏற்படும். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீதமான வெங்காயத்தினை பாலித்தின் பைகளில் அடைத்து,அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

நல்ல கதை பாஞ்ச்! ஆனால் "சிரிக்க சிறக்க" என்ற பகுதியில் ஏன் இதை நீங்கள் இணைக்கவில்லை என யோசிக்கிறேன்! (கோவிக்காதீர்கள், பகிடி!)

வெங்காயம் 1918 இல் பரவிய fப்ளூ  காய்ச்சலைத் தடுத்ததாக  ஒரு கதை சில ஆண்டுகளாக சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.  இது வரை அறியப் பட்ட விஞ்ஞானத்தின் படி, வெங்காயத்திற்கு நோய்க்கிருமிகளை உறிஞ்சிக் கொள்ளும் எந்த சக்தியும் இல்லை! இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ அது பற்றி அந்த நேரம் மருத்துவர் ஒருவர் ஆய்வு செய்ததாகவோ எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை (அந்த நேரம் முகநூல் இல்லாமை காரணமாக இருக்கலாம்!). கிருமித் தொற்றுகளில் இருந்து தப்ப வேண்டுமானால், உடலையும் வதிவிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பதாலும், தடுக்கக் கூடிய கிருமிகளுக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்வதாலும் பெருமளவு தப்பிக் கொள்ளலாம்!

இப்படியான வெங்காய வழிகள் எல்லாம் பெயருக்கேற்ற மாதிரி "வெங்காய வழிகள்" மட்டுமே! உள்ளீடு எதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

இப்படியான வெங்காய வழிகள் எல்லாம் பெயருக்கேற்ற மாதிரி "வெங்காய வழிகள்" மட்டுமே! உள்ளீடு எதுவும் இல்லை!

அப்ப வெங்காயத்திலை ஒரு பலனும் இல்லை....அப்பிடித்தானே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.
ஜேர்மனியில் வெங்காயத்தை மருத்தவ பொருள் என்று கூறுவார்கள்.


இவங்கள் எங்கடை ஆக்கள்     மாதிரி பெரிசாய் அலசி ஆராய்ச்சி செய்து   படிச்சிருக்க மாட்டாங்கள் தானே...

  • 1 year later...

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.