Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலிக்குள் புலிகள் வானூர்தி நுழைவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் தகவல் கிடைத்துவிட்டது: அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலிக்குள் புலிகள் வானூர்தி நுழைவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் தகவல் கிடைத்துவிட்டது: அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 20:25 ஈழம்] [செ.விசுவநாதன்]

பலாலிப் பிரதேசத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்துவிட்டது என்று சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் இன்று அதிகாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலாலி இராணுவத் தளத்துக்கோ அல்லது வான்படைத் தளத்துக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.

மகிந்தவின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகிய மூவரும் பலாலி இராணுவத்தளத்தின் நிலைமையை அவதானிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை மாலை பயணம் மேற்கொண்டனர்.

ஏ.பி, ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர் உட்பட 25 உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடகவியலாளர்களையும் தம்முடன் அவர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு என்ன நடந்தது என்பதனை அதிகாரிகளும் படை வீரர்களும் ஊடகவியலாளர்களிடம் விவரித்தனர்.

பலாலிப் பிரதேசத்துக்குள் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்தது.

உடனடியாக நாம் செயலில் இறங்கினோம். படைத்தளத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. புலிகளின் வானூர்தியை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இத்தாக்குதல் காரணமாக அப்பிரதேசத்திலிருந்து தப்பியோடிய வானூர்தி மயிலிட்டி கரையோரப் பகுதியில் மூன்று குண்டுகளைப் போட்டுவிட்டு சென்றுள்ளது.

தமது பாதுகாப்பிடங்களில் இருந்து வெளியே வந்து புலிகளின் வானூர்தியைச் சுட்டுவீழ்த்த முயன்ற ஆறு இராணுவத்தினர், புலிகள் வீசிய ஒரு குண்டில் பலியானார்கள்.

மயிலிட்டி பகுதியில் கைவிடப்பட்ட பழைய கட்டடம் ஒன்று குண்டுத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதனை அங்கு பயணம் செய்த ஊடகவியலாளர்கள் அவதானித்தனர்.

இது தவிர பலாலி இராணுவத்தளத்துக்கோ அல்லது வான்படைத் தளத்துக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறிலங்கா வான்படை, இராணுவம் மற்றும் கடற்படையின் முக்கிய தளபதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று இன்று பலாலிக்கு அவசரமாக விரைந்து சென்றது.

அங்கு யாழ். பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா மீது தாக்குதல் நடத்திய போதே இளந்திரையன் கூறியிருந்தாரே

தாக்குதல் தொடருமென்று.

பாவம் இந்த யாப்பாவிற்கு யாரும் அதை கூறவில்லையா?

5நிமிடத்திற்கு முன்புதான் கேள்விபட்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேயப்பா...இந்த யாப்பா"..எப்படிக் கதை அளக்கிறார்?!!..

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்து விமானத்தைச்சுடுறதுக்காக நிண்ட நேரத்தில போட்டகுண்டு ஆறுபேரையும் பதம்பார்த்துப் போட்டுதாம். கொஞ்சம் கலைஞ்சு நிண்டு சுட்டிருக்கலாம்.

விழுந்தாலும் மீசையில மண்படவில்லையாம் :P

ஏ.பி, ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர் உட்பட 25 உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடகவியலாளர்களையும் தம்முடன் அவர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு என்ன நடந்தது என்பதனை அதிகாரிகளும் படை வீரர்களும் ஊடகவியலாளர்களிடம் விவரித்தனர்.

கட்டுநாயக்க விமானதளம் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுபோது ஊடகவியலாளர்களை அங்கு அழைத்துச்செல்ல சிங்கள அரசு இவ்வளவு அவசரம் காட்டவில்லையே ஏன்?

இது நியாயமான கேழ்வி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது தான் சொல்ல வந்திருப்பார். அடக்கிக் கொண்டு வேறை மாதிரிச் சொல்லி விட்டார்:

உடனே விளக்குகள் அணைக்கப்பட்டன. விமான எதிர்ப்புத் துப்பாக்கியில் பணியிலிருந்த சிப்பாய்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிக் கொண்டிருந்த மற்றையவர்களுடன் இணைந்து கொண்டனர். ஓடும் போது தமது கோவணத்தைத் தவற விட்ட சிப்பாய்கள் சிலர் பின் தங்கிய போது அருகிலே தரை தொட்ட குண்டுகளுக்குப் பலியானார்கள். கோவணம் தேடி மரணம் அடைந்ததால் அவர்களுக்கு "வீர கோவண லங்கா" விருதை மரணத்திற்குப் பிந்திய விருதாக மகிந்து மந்தி வழங்கி வைக்கும்.

:rolleyes:

பரந்த நிலப்பரப்பை கொண்ட பலாலி இராணுவ முகாமுக்கு அழைத்துச்சென்ற பத்திரிகையாளர்களை அவர்களாகவே சுத்திப்பார்க்க அனுமதித்திருக்க மாட்டார்கள். ஒரு சில அலுவலகங்க கட்டடங்களைக்காட்டி விட்டு மதுவுடன் கூடிய விருந்து வைத்திருப்பார்கள். அதன்பின் போய்வாருங்கள் என்று திருப்பி அனுப்பியிருப்பார்கள்.

தாக்குதல் நடந்த இடம் காட்டபட்டிருக்காது என் எனின் பலாளி அடிக்கடி அட்லெறி தாக்குதலுக்கு உள்ளாகும் இடம் அது மட்டுமல்ல விமானத்தாக்குதலுடன் ஆட்லெறி தாக்குதலும் நடந்தது அதவது மயிலிட்டி தளம் நோக்கியதாகவே அட்லெறி தாக்குதல் நடை பெற்றது அவ் சேதத்தில் 3 குண்டுகள் விழுந்த இடங்களை ஊடகவியளாளர்களுக்கு காட்டி ஏமாற்றி இருக்கீனம்.ஆனால் ஒன்றை அரசு ஒத்துகொண்டுள்ளது புலிகள் விமானம் மீது தாக்குதல் நடத்திய இராணுவ பங்கருக்கு விமானம் குண்டு வீசியதாக ஆக இதன் மூலம் தெரிவதன் மூலம் இலக்கை பதம் பார்த்து குண்டு வீசும் திறன் புலிகளிடம் இருக்குது என்பதே.இதனை தன் வயால் தானறியாமல் கூறிவிட்டது.இளந்திரையன் அண்ணாவின் கூற்றுப்படி 10 குண்டுகள் வீசப்பட்டிருகின்றன மக்களின் கூற்றுபடி பயங்கர குண்டு வெடிப்புகள் கேட்டிருகிறது ஆகவே இதன் மூலம் தெரிவது என்னவென்றால் ஆயுதகளஞ்சியம் நாசம் என்பதே.சிலர் கேட்ககூடும் ஏன் கட்டுநாயக்கா படைத்தலத்தின் தக்குதலின் போது பத்திரிகையாலரை கூட்டி செல்லவில்லை பலாலி தாக்குதலின் போது மட்டும் பத்திரிகையாளரை கூட்டி சென்றிருகிறது இதன் மூலம் பலாலி தாக்குதல் தோல்விதானே என ஆனால் பலாலி போர் சூழலில் இருக்கும் ஒரு தளம் இதில் பத்திரிகையாளர்களை பிழையான இடங்களை காட்டி ஏமாற்றலாம் ஆனால் கட்டுநாயக்கா தளத்தில் ஏமாற்ற முடியாதே.

நேற்றைய பி பி சி கேட்டுப்பாருங்கோ மச்சான் மகிந்தவின்ர மந்தி குட்டத்தின் பெர்ணாண்டோ பிள்ளையின்ர நகைச்சுவைப் பேட்டியை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய பி பி சி கேட்டுப்பாருங்கோ மச்சான் மகிந்தவின்ர மந்தி குட்டத்தின் பெர்ணாண்டோ பிள்ளையின்ர நகைச்சுவைப் பேட்டியை

யாராப்பா இந்த யாப்பா? என் கொழும்பு நண்பர் ஒருவர் கூறினார் ஜெயரத்தின மலர்ச்சாலையில் பல படையினரது சடலங்களும் அதனைவிட வேறு சில தனியார் மலர்ச்சாலைகளிலும் சடலங்கள் இருப்பதாக. அதனைவிட கொழும்பி கோத்தபாயவுக்கு நன்றி தெரிவித்து யாரோ சாமய மித்ரோ( சமாதான நண்பர்கள்) சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும். அதில் உள்ள விடயம் புலிகளை அழித்து ஒழித்த கோத்தபாயாவுக்கு அவரது அண்ணனுக்கும் மற்றும் படை வீரர்களுக்கும் நன்றிகள்.

ஆமா இந்த முறை ராடருக்கு என்ன நடந்தது...........? இந்த முறையும் வேலை செய்யலியா.........? 5நிமிஷம் இல்லை 5 மணித்தியாலத்துக்கு முதல் தெரிஞ்சாக் கூட வாலெல்லாம் ஆட்ட முடியாது உங்களுக்கு

அடுத்த தடவை அடிக்கும்போது சொல்லிட்டே அடிகிறோமே, நம்ம சீ மஹிந்தட பேய்-புள்ள நேரடியாய் பார்து கதிகலங்கி போயிருகிறார் பிந்திகிடைத்த செய்தியின்படி பெர்னாண்ட புள்ளே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக உறுதிபடுத்தபடாத செய்தி.

வல்வை மைந்தன்

யாப்பாதான் சந்திரிக்காவின்ர ஆட்சியில கல்வி அமைச்சராகவும் பின்பு ஊடகத்தின் அமைச்சராகவும் மகிந்தவின்ர மந்திக் குட்டத்தில இருக்குது. வேற விசேடமாய் எதுவும் இல்லை இவரைப்பற்றிச் சொல்ல

சரி தப்பி தவறி 2000 ஆம் ஆண்டில யாழ் குடாநாட்டிற்கு சொல்லிப்போட்டு அடிச்ச மாதிhத் தான் அடிச்சாலும் இனNனொரு எருமை வந்து சொல்லும் கோழைத்தனமான தாக்குதல் எண்டு வேற என்ன சொல்லுக்கா பஞ்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.