Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்”

May 24, 2019

 

TNA-meet-MODI.jpg?resize=800%2C573

இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:  நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய முயலும் நிலையில் உங்களையும், உங்கள் அரசையும் நாங்கள் வாழ்த்துகிறோம். வரக்கூடிய ஆண்டுகளில் உங்கள் தலைமையின் கீழ் புதிய மைல்கற்களை எட்டுவதற்கு உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.

இலங்கைக்கும், அதன் மக்களுக்கும், குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் உங்கள் அரசாங்கமும், இந்தியாவும் அளித்த எல்லா ஆதரவுக்கும் உண்மையான பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையில் தேசியப் பிரச்சனைக்கு நீதி, சமத்துவம், எல்லோரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காணவும், தெற்காசியாவில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை அடையவும் வரும் ஆண்டுகளில் உங்களோடு நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்.

மீண்டும் ஒரு முறை, தமிழ் பேசும் மக்கள் சார்பில் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், உங்கள் உயர்ந்த பதவியில் வரும் ஆண்டுகளில் சிறப்படைவதற்கு நல்வாழ்த்துகளும். என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் சம்பந்தன். #பாரதிய ஜனதாக் கட்சி #இராசம்பந்தன் # தமிழ்தேசியக்கூட்டமைப்பு #TNA #NarendraModi

 

http://globaltamilnews.net/2019/122572/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வடகிழக்கின் நிலமையில் இலங்கை அகபட்டுள்ள  இருக்கிற தேசிய சர்வதேசிய  இக்காடுகளில்  எங்கள் வல்லமை மட்டத்தில் சர்வதேச மற்றும் இந்திய உறவு அபிவிருத்தி அடைந்தே ஆகவேண்டும்.  எப்படிப் பார்த்தாலும் என்ன விமர்சனங்கள் இருந்தாலும் கழத்தில் சம்பந்தரை பல்லபடுத்துவது முக்கியமாகியுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, poet said:

இப்ப வடகிழக்கின் நிலமையில் இலங்கை அகபட்டுள்ள  இருக்கிற தேசிய சர்வதேசிய  இக்காடுகளில்  எங்கள் வல்லமை மட்டத்தில் சர்வதேச மற்றும் இந்திய உறவு அபிவிருத்தி அடைந்தே ஆகவேண்டும்.  எப்படிப் பார்த்தாலும் என்ன விமர்சனங்கள் இருந்தாலும் கழத்தில் சம்பந்தரை பல்லபடுத்துவது முக்கியமாகியுள்ளது.  

தோழருக்கு  தமிழ்  தடக்கலாமோ?????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இலங்கையில் தேசியப் பிரச்சனைக்கு நீதி, சமத்துவம், எல்லோரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காணவும், தெற்காசியாவில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை அடையவும் வரும் ஆண்டுகளில் உங்களோடு நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்.

இதுவரை இந்திய உளவுப்பிரிவோடு மட்டும் தான் நெருங்கி பணியாற்றினோம் 

இனி உங்களுடனும் நெருங்கி பணியாற்ற விரும்புகிறோம்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதுவரை இந்திய உளவுப்பிரிவோடு மட்டும் தான் நெருங்கி பணியாற்றினோம் 

இனி உங்களுடனும் நெருங்கி பணியாற்ற விரும்புகிறோம்.

மொத்ததிலை தமிழனை தொடர்ந்து ஏமாத்த நினைக்கும் சிலர் இந்திய புராணத்தை மீண்டும் பாட நினைக்கினம்!

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய விசுக்கு, ஈழப்பிரியன் ராஜேஸ், நலமா? ஈழத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் நம்மைப்போல்ல. பிரச்சினைகளுக்கு தப்பித்து ஓடிப்போய்  ஐரோப்பாவிலோ கனடாவிலோ குடியேறும் வாய்ப்பு அவர்களுக்கில்லை. நம்மைப்போல எட்டியிருந்து அரசியல் பேசும் ஆடம்பர வசதி அவர்களுக்கு இல்லை. ஈழத்தில் வாழும்தமிழர் ஈழத்தின், இந்துசமுத்திரத்தின் சதிகள் நிறைந்த  வல்லரசுப் போட்டிகள் மத்தியில் தான் வாழ்வும் காய்நகர்த்தி  அரசியல் செய்து நிமிரவும் வேண்டியுள்ளது. இந்து சமுத்திர அரசியலில் சீனா + இலங்கை அணி அமரிக்கா+ இந்தியா அணி மட்டும்தான் உள்ளது. மூன்றாவது அணி என்று பேர்சொல்ல வேறு ஏதும் இல்லை. நம்மக்கள் அடிமைபடுதல் அடிக்கும்  இனக்கொலை அந்தலைக்கும் அகப்படாமல்  நடுவே  அவர்கள் தங்கள் கொடியை நடவேண்டும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

.

விசுக்கு, நான் தமிழ் ஓரளவுக்கு தெரிந்தவன்தான். சந்தேகம் வேண்டாம்.  தடக்கலல்ல . பல்துறை தேடலால் மூளைக்கு ஓவில்லை. பல்வேறு சோலிகளின் மத்தியில் மன வேகத்தில் எழுதுவது. சின்னவயசில் இருந்தே   ’போட்டொகிறாபிக் மெமறி’ (photographic memory)என்கிற பிரச்சினை தீவிரமாக (நோயென்று வேண்டுமானால் சொல்லுங்க)  இருப்பதால் திரும்ப வாசிக்கும்போது முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் தவிர வேறு பிழைகள் புலபடாது. மன்னிக்கவும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

இப்ப வடகிழக்கின் நிலமையில் இலங்கை அகபட்டுள்ள  இருக்கிற தேசிய சர்வதேசிய  இக்காடுகளில்  எங்கள் வல்லமை மட்டத்தில் சர்வதேச மற்றும் இந்திய உறவு அபிவிருத்தி அடைந்தே ஆகவேண்டும்.  எப்படிப் பார்த்தாலும் என்ன விமர்சனங்கள் இருந்தாலும் கழத்தில் சம்பந்தரை பல்லபடுத்துவது முக்கியமாகியுள்ளது.  

நிட்சயமாக கிழக்கில் இல்லை குறிப்பா அம்பாறை , மட்டக்கள்ப்பு மாவட்டம்  இவர்களை தொலைக்க காத்திருக்க்கும் மக்கள் 

அப்படி பலப்படுத்தினால் இவர்களால் என்னத்தை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள் ஒன்று மட்டும் முடியும் வாகனங்கள் சொகுசு  வீடுகள் வாங்கிக்கொள்ள முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

macro and micro politics of Eelam 

தனிக்காட்டு ராஜா ஈழத்தின் பெரும்பாக அரசியலைத்தான் நான் பேசுகிறேன். அம்பாறை மாவட்டத்தின்  micro politics குறும்பாக அரசியலில் எனக்கும் உங்களுக்கும் பெரும்பாலும் ஒத்த கருத்தே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் சம்பந்தர் செய்யும் பெரும்பாக அரசியல்,  கிழக்கின் குறும்பாக அரசியல் நெருக்கடிகளை கண்டுகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் வடகிழக்கில் குறிப்பாகக் கிழக்கில்  சீனாவையும் பாகிஸ்தானையும் கொண்டுவந்து குவிக்கும் இலங்கை அரசின் நோக்கத்துக்கு இதுவரை சம்பந்தரின் பெரும்பாக அணுகுமுறை மூலம்தான் அமரிக்க இந்திய அழுத்தங்கள் மூலம்தான் இதுவரை  தடுக்க முடிந்துள்ளது. அதனையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அஞ்சவேண்டாம் நண்பா கிழக்கின் குறும்பாக அரசியலில் நிலமை மெதுவாகவும் பெரும்பாலும் கட்புலனாகாத வகையிலும் மேம்பட்டு வருகிறது.   

 

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.