Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவின் 2 து திருமணம்

Featured Replies

❤️❤️
தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.

என் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.  

அதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.

இதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து,  நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.

2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் குடும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று  உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.

என் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.

இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன. 

ஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணவனை இழந்த பல பெண்கள் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

❤️❤️
தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.

என் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.  

அதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.

இதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து,  நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.

2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் குடும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று  உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.

என் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.

இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன. 

ஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.

இணைப்பிற்கு நன்றி...இதை யார் எழுதியது?

  • தொடங்கியவர்
4 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி...இதை யார் எழுதியது?

லதா என்ற எழுத்தாளர்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

லதா என்ற எழுத்தாளர்

👏👏👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.