Jump to content

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்


Recommended Posts

வணக்கம் குட்டிமாமா பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும்

குட்டிதம்பி உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?யாழில் உங்களை வர தூண்டிய காரணம் என்ன?

2)யாழில் நீங்க வந்த புதிதில் எத்தகைய மனநிலையில் இருந்தனீங்கள்?எவ்வாறு பழைய உறுப்பினர்கள் உங்களை வரவேற்றனர்?யாழில் எந்த பகுதி உங்களை பெரிதும் கவர்ந்தது?யாழின் நீங்கள் குருவாக நினைப்பது யாரை?

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?ஜம்மு,வானவில் யாழுக்கு தேவையில்லை அவர்களால் யாழின் புனித தன்மை போய் உள்ளது என்று சிலர் கூறி இவர்கள் யாழுக்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள் இதை பற்றிய தங்களின் கருத்து என்ன?

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?

5)யாழில் தற்போது பல மாற்றங்கள் கொண்டுவரபட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்து இருப்பீர்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இதனால் எல்லா பகுதியிலும் எல்லாரும் எழுத முடியாமல் உள்ளது இது யாழின் வளர்சிக்கு தேவையா இதை பற்றிய தங்களின் கருத்து?

Link to comment
Share on other sites

  • Replies 160
  • Created
  • Last Reply

6)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

7)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் திருட்டு தம் அடித்து பிடிபட்ட சந்தர்ப்பம் ஏதாவது இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கோ?

8))தற்போது நீங்கள் புலத்தில் இருக்கிறீங்க உங்களை கேட்டா இருக்கும் நாடு நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?இங்கே நீங்கள் செய்யும் குழப்படிகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?

9)காதலை பற்றி யாழில் பல கருத்துகள் நிலவி வருகிறது காதலை பற்றி எல்லாருக்கும் தெறியும்(ஜம்முபேபியைதவிர) காதலை பற்றிய உங்கள் கருத்து என்ன?காதலி வெறுப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?உங்களுடைய காதல் அநுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்களில் யார் முதலில் காதலை வெளிபடுத்தினீங்கள்?நீங்கள் இதுவரை எத்தனை பேரை காதலித்து இருக்கிறீங்கள்?

10)திடிரேன ஒரு நாள் உங்களுக்கு திரிஷாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குது என்று வைத்து கொள்ளுங்கோ அப்போது உங்களுடைய மனநிலை எவ்வாறிருக்கும்?காதலிக்கு பிடிக்காது அவாவுடன் நடிக்க அப்போது நீங்கள் என்ன செய்வீங்கள்?

Link to comment
Share on other sites

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)சகி கேசரி கடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)தூயா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Link to comment
Share on other sites

11)காதல்,நட்பு இதில் சிறந்தது எது என்று நினைக்கிறீங்க அதற்கான காரணத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?உங்கள் நண்பர்கள் யாருக்காவது காதலுக்கு உதவி செய்ய போய் யாரிடமும் மாட்டுபட்ட அநுபவம் இருக்கா இருந்தால் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

12)யாழில் தூய தமிழ் சொற்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் வாதாடுகிறார்கள் இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா இதை பற்றிய உங்கள் கருத்து?தூய தமிழ் தெறியாதவை யாழில் எழுத தேவையிலை என்ற தொணியில் ஒரு நண்பர் கதைத்தார் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

13)பல சாதனைகள் செய்து வரும் எங்கள் தலைவரின் வான்படையை பற்றி உங்கள் கருத்து என்ன?புலத்தில் நம்மவர் கூட்டங்கள் வைக்கீனம் இந்த கூட்டங்களால் பிரயோசனம் ஏதாவது இருக்குது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா அவ்வாறாயின் அதற்கான காரணம்?

14)பெண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?ஆண்கள் தான் காதலில் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினம் அதற்கு உங்கள் கருத்து என்ன?பெண்களை இன்னும் ஆண்கள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

15)நீங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று நினைக்கும் நாள் என்ன?அதற்கான காரணம்?நாளை உலகம் அழிய போகுது என்று வைத்து கொள்ளுங்கோ உங்கள் மனநிலை என்ன?நீங்கள் எவ்வாறு அந்த ஒருநாளை பயன்படுத்துவீர்கள்?

இவர்கள் பற்றி

1)வானவில்-

2)இன்னிசை-

3)கர்ணண் -

4)லீசண்-

5)கலைஞன் -

6)வெண்ணிலா -

7)டங்கு -

8)அனிதா -

9)பிரியசகி-

10)தூயா -

11)ஜன்னி-

12)புத்தன் -

13)இனியவள் -

14)கறுப்பி -

15)சுண்டல்-

16)கங்கா -

17)யாழ்பிரியா-

18)சித்தன்

19)கஜந்தி -

20)ஜம்முபேபி-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?

2)யாழின் கிளசுகள்?

3)யாழின் இளசுகள்?

4)யாழின் பலம்?

5)யாழின்பலவீனம்?

6)யாழில் ஜம்மு,வானவில்?

7)யாழில் சாதனை?

8)யாழில் மறக்கமுடியாதவர்?

9)யாழின் வால்கள்?

10)யாழில் போக்கிரி?

11)ஆசைக்கு?

12)அறிவுக்கு?

Link to comment
Share on other sites

குட்டிதம்பி இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

av3557cd0.jpg

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

:P :wub: :P

Link to comment
Share on other sites

வணக்கம் குட்டிமாமா பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

ம்.. முதலில் நேயர்களுக்கும், சக அறிவிப்பாளர் ஜம்முவுக்கும்.. இந்த குட்டிதம்பியின் அன்பான வணக்கம். :wub:

டைகர் குடும்ப அங்கத்துவரான நான், டைகர்வானொலியின் அறிவிப்பாளராகவும் உள்ளேன்.(எல்லாம் நானாக புடுங்கிகொண்டது...தேடி வரலைங்கோ :D )

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும்

குட்டிதம்பி உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?யாழில் உங்களை வர தூண்டிய காரணம் என்ன?

இங்கு வர முன்னர் நான் பேரினவாதிகளின் களம் ஒன்றில் அங்கத்துபவராக இருந்து..தமிழர்களின் உரிமைக்காக கத்திக்கொண்டிருந்தேன்..அப்போ

Link to comment
Share on other sites

6)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குங்கள்..இவர்கள் பாவப்பட்ட பிறப்புக்கள் இயன்றளவு திருத்த முயற்சி செய்வோம்.

7)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் திருட்டு தம் அடித்து பிடிபட்ட சந்தர்ப்பம் ஏதாவது இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கோ?

ஈழத்தின் வடகோடியிலே பிறந்து வளர்ந்த நான் ..அதே ஊரில் ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன்..

பள்ளிக்காலம் உண்மையிலேயே கனாக்காலம்தான்

நல்ல காலம் நம்ம பள்ளி கலவன் பாடசாலையல்ல, காதல் செய்ய

அப்பாவிற்கு நான் நல்ல பிள்ளை , அம்மாவிடம் அடிவாங்கியதால தான் இவ்வளவு தூரம் படிச்சன்

தம்மடிப்பதில்லை

8))தற்போது நீங்கள் புலத்தில் இருக்கிறீங்க உங்களை கேட்டா இருக்கும் நாடு நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?இங்கே நீங்கள் செய்யும் குழப்படிகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?

நம்ம ஊரு போல ஒன்றும் வராது. வேப்பமர நிழலிலே படுப்பது போன்று எந்த நாட்டு மெத்தையிலும் கிடைக்காது.

வந்த புதிதில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்..போனில் அலட்டுவதும்..வலைப்பின்னலில. நேரத்தை போக்காட்டுவதாகவும் இருந்தேன். எனது கல்வியும், வேலையும் ... புதிய நண்பர் வட்டத்தை தந்ததுடன் இலகுவாக என்னை புதிய சூழலுக்கு இசைவாக்கமடைய உதவியது.

குழப்படி செய்யக் கூடிய நாட்டில் நானில்லை.

9)காதலை பற்றி யாழில் பல கருத்துகள் நிலவி வருகிறது காதலை பற்றி எல்லாருக்கும் தெறியும்(ஜம்முபேபியைதவிர) காதலை பற்றிய உங்கள் கருத்து என்ன?காதலி வெறுப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?உங்களுடைய காதல் அநுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்களில் யார் முதலில் காதலை வெளிபடுத்தினீங்கள்?நீங்கள் இதுவரை எத்தனை பேரை காதலித்து இருக்கிறீங்கள்?

முதலில ஜம்முபேபிக்கு எனது அனுதாபங்கள் . இப்பவாவது தெரிஞ்சு கொள்ளும்..காதலில பல வகை உண்டு..நீங்கள் கேட்பது வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள காதலை எனறு நினைக்கிறன் . உது எல்லாருக்கும் கிடைக்காது..கிடைச்சவங்க மனதைப்பொறுத்து அந்த காதல் மாறுபடலாம் ...ஆனால் பொதுவாக காதல் புனிதமானது.

சொந்த அனுபவங்களாளோ அல்லது அறியாமையினாளோ காதல் வெறுக்கப்படலாம்..ஆனால் உண்மையை ஒரு நாள் உணர்வார்கள்

நட்புடன்தான் எனது காதல் வளர்ந்தது..கண்டதும் காதலல்ல..

எனது காதலி இலங்கை தொலைக்காட்சி நேயர்களுக்கு மிகவும் பரீட்சயமானவர்.நானோ படிப்பு காரணமாக தொலைக்காட்சி பார்ப்பதில்லை..ஆனாலும் இருவரும் நண்பர்களாக பழகும் வாய்ப்பை பெற்றோம் :wub: . கால ஓட்டம் எமது நட்பை காதலாக்கியது.

காதலை யார் முதலில் வெளிப்படுத்தியவர் என்பது முக்கியமில்லை..சரியான தெரிவும் சரியான நேரமும்தான் முக்கியம்..அதை முதலிலே தெரிவு செய்தபின் எனது வெளிப்பாடு, காதலிக்கு சங்கடத்தை ஏற்படுத்தா வண்ணம் மின்னஞ்சலை தெரிவு செய்தேன் (இதன் மூலம் நேரடியாக பார்க்கும் சங்கடத்தையும் யோசிச்சு முடிவெடுக்க கூடிய போதிய அவகாசமும் காதலிக்கு கொடுக்கிறம் :P )

முதல் காதல் வேற்றி பெற்றதால் வேறை ஒன்றையும் முயற்சி பண்ண வில்லை. :P

10)திடிரேன ஒரு நாள் உங்களுக்கு திரிஷாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குது என்று வைத்து கொள்ளுங்கோ அப்போது உங்களுடைய மனநிலை எவ்வாறிருக்கும்?காதலிக்கு பிடிக்காது அவாவுடன் நடிக்க அப்போது நீங்கள் என்ன செய்வீங்கள்?

ம் ....என்னைப் போல ஒருத்தனோட நடிக்க திரிஷா கொடுத்து வைச்சிருக்கிறாள் :D

காதலியிடம் திரிஷா அனுமதி கோரி வெற்றி கொண்டால் உண்மையிலலே திரிஷா கொடுத்து வைச்சவதான் :P

11)காதல்,நட்பு இதில் சிறந்தது எது என்று நினைக்கிறீங்க அதற்கான காரணத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?உங்கள் நண்பர்கள் யாருக்காவது காதலுக்கு உதவி செய்ய போய் யாரிடமும் மாட்டுபட்ட அநுபவம் இருக்கா இருந்தால் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

காதல் நட்பு ..யார் பெரியவர் என்று அடி..நுனி தேடிய கதையாகத்தான் அமையும்

இங்கு காதல் இன்றி நட்பு இல்லை, நட்பு இன்றி காதல் இல்லை.

ம்.. கொழும்பு வெள்ளவத்தயில நண்பருக்கு களவாக எழுத்து முடிச்சு, சாட்சி கையொப்பமும் போட்டேன்..இந்தக்காதல் ஜோடி லண்டனில் நலமாக உள்ளார்கள். :)

12)யாழில் தூய தமிழ் சொற்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் வாதாடுகிறார்கள் இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா இதை பற்றிய உங்கள் கருத்து?தூய தமிழ் தெறியாதவை யாழில் எழுத தேவையிலை என்ற தொணியில் ஒரு நண்பர் கதைத்தார் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

புலம் பெயர் நாடுகளில் வாழும் சிறார்கள் தூய தமிழில் எழுதமுடியாமல் உள்ளார்கள் . காரணம் போதிய பயிற்சி இல்லை. இவர்கள்தான் கூடுதலாக யாழை பயன்படுத்துகிறார்கள். அவர்களை எழுதாதே என்றால் அவர்களின் ஊக்கத்தை தடுப்பதாக அமையும்.

ஆனால் தழிழ் தெரிந்தவர்கள் தூய சொற்களை பாவிப்பது நன்று.

13)பல சாதனைகள் செய்து வரும் எங்கள் தலைவரின் வான்படையை பற்றி உங்கள் கருத்து என்ன?புலத்தில் நம்மவர் கூட்டங்கள் வைக்கீனம் இந்த கூட்டங்களால் பிரயோசனம் ஏதாவது இருக்குது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா அவ்வாறாயின் அதற்கான காரணம்?

தலைவரின் வான்படையை விமர்சிக்கும் தகுதி அடியேனுக்கு இல்லை.

பிரயோசனம் இல்லாமலா கூடுகிறார்கள் :unsure:

14)பெண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?ஆண்கள் தான் காதலில் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினம் அதற்கு உங்கள் கருத்து என்ன?பெண்களை இன்னும் ஆண்கள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பெண்மை இன்றி ஆண்களேது.. :unsure:

மறுப்பதற்கில்லை..ஆனாலும் முற்று முழுதாக ஆமோதிக்கவும் முடியாது

இல்லை..பெண்களுக்காக எவ்வளவோ சலுகை சட்டங்கள் உண்டு..ஆனால் ஆண்களுக்கென்று எங்காவது தனிச்சலுகை சட்டங்கள் இருந்தால் சொல்லுங்களேன். என்னை ப் பொறுத்த வரை பெண்கள்தான் பெண்களை அடக்குகிறார்கள்

15)நீங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று நினைக்கும் நாள் என்ன?அதற்கான காரணம்?நாளை உலகம் அழிய போகுது என்று வைத்து கொள்ளுங்கோ உங்கள் மனநிலை என்ன?நீங்கள் எவ்வாறு அந்த ஒருநாளை பயன்படுத்துவீர்கள்?

நாட்டை விட்டு வெளியேறிய நாள்...காரணம் பெற்றோரை உறவுகளை பிரிந்து வந்தது(கண்கலங்கிடிச்சுல்லே :D )

போனால் போகுது போடா :blink:

குடும்பத்துடன் ஒருவேளையாவது சேர்ந்திருந்து உணவருந்துவேன்

இவர்கள் பற்றி

1)வானவில்-துடிப்பான இளைஞன்

2)இன்னிசை-லொள்ளு தாத்தா

3)கர்ணண் - எனது சிஷ்ஜன்

4)லீசண்- புக்குடுவுடன் மல்லுக்கட்டியவர்

5)கலைஞன் -நல்ல மாப்பி

6)வெண்ணிலா - அச்சா பிள்ளை

7)டங்கு -ராயல் புல நாய்

8)அனிதா - அடக்கமான பிள்ளை

9)பிரியசகி-முன்-கோபக்கார அக்கா

10)தூயா -சமயலுக்கு தூயா

11)ஜன்னி- நல்ல பிள்ளை ஜம்முவின் அக்கா

12)புத்தன் - சிட்னி கோசிப் இன்னும் வம்பு பண்ணலவில்லை

13)இனியவள் -கவிதைகள் பிடிக்குமோ

14)கறுப்பி -பெயர்தான் கறுப்பியாம் ஆனால் காப்பின பிடிக்காது

15)சுண்டல்-யாழுக்கே சுண்டல் தந்தவர்..இப்ப குறைச்சிட்டார்

16)கங்கா - முந்தாநாள் முளைச்ச கங்காதரனோ?

17)யாழ்பிரியா-கத்திரிப்பதில் வல்லவர்

18)சித்தன்- சித்தனேதான்

19)கஜந்தி - வம்பு செய்யாதவள்

20)ஜம்முபேபி- ரொம்ப ஓவர் பேபி..சீச்சீ..பையா..

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது? மனதுக்கு மகிழ்ச்சி

2)யாழின் கிளசுகள்? யாழை வளர்த்தவர்கள்

3)யாழின் இளசுகள்? துடிப்பானவர்கள்

4)யாழின் பலம்? அங்கத்தவர்கள்

5)யாழின்பலவீனம்? தெரிஞ்சா தூக்கிடுவனில்லே

6)யாழில் ஜம்முஇவானவில்? ஓவர் அரட்டையாளர்கள்

7)யாழில் சாதனை? எங்களை கட்டிக் காக்கிறதுதான்

8)யாழில் மறக்கமுடியாதவர்? மோகன் அண்ணா( ரொம்ப ஐஸ்சோ )

9)யாழின் வால்கள்? இளம் அங்கத்தினர்

10)யாழில் போக்கிரி? லொள்ளு பாட்டி

11)ஆசைக்கு? அரட்டையடி

12)அறிவுக்கு? வாசி

Link to comment
Share on other sites

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி தந்த குட்டிமாமாவுக்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளும் வாழ்துகளும்.

நேயர்கள் இதுவரை நடந்த பேட்டியை கண்டு இரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,இத்துடன் உங்களிடம் இருந்து விடைபெறுவது வானவில்லுடன்,ஜம்முபேபி மீண்டும் மற்றுமொரு இனிய வெள்ளி பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திபோம்

Link to comment
Share on other sites

பேட்டியை கொடுத்த குட்டிதம்பிக்கும்

பேட்டிபக்கத்தை சிறப்பாக நடாத்தும் ஜம்முவுக்கும் டைகர் பமிலி சார்பாக நன்றிகள்

Link to comment
Share on other sites

தவிர்க்க முடியாத காரணங்களினால் இன்று பேட்டி நடைபெறமாட்டாது என்று நேயர்களுக்கு அறிய தருகிறோம்,இந்த பேட்டி விரைவில் உங்களுக்கா கொண்டுவரபடும் புதுபொலிவுடன்.

நன்றி நேயர்களே

டைகர்பமிலி

டைகர்வானொலி

:rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று பேட்டி காணபடுபவர் உங்களுக்கு தெறிந்த நபர் தான் ஆமாம் பூமிக்கு ஒரு நிலவு யாழுக்கும் ஒரு நிலவு அவா தான் வெண்ணிலா......................எல்லாரும் நிலா என்று அழைக்க ஒரு காலத்தில் சுட்டி என்று சிலர் அழைப்பார்கள் அந்த நிலவை தான் நாங்கள் இன்று பேட்டி காணபோகிறோம்.........

வணக்கம் நிலா அக்கா

nilasadue1.jpg

:lol: :P :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் வெண்ணிலா அக்கா பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெறிவித்து கொண்டு பேடிக்கு சொல்வோமா...................

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா??

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் வெண்ணிலா என்பது உங்கள் சொந்த பெயரா அல்லது அதை விரும்பி வைக்க ஏதாவது காரணங்கள் இருகின்றனவா?

2)யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்ற வகையில் புதிய உறுப்பினர்களின் வருகையை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?யாழில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இது ஆரோக்கிய வளர்ச்சியா இல்லையா பற்றி சில வரிகள்?

3)தற்போது மட்டுநுறுத்தினர்கள் பற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அதிலும் குறிபிட்ட ஒருவர் பலதரபட்ட விமர்சனதிற்கு உள்ளாகி உள்ளார் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?உங்கள் பார்வையில் இது யாழின் வளர்ச்சிக்கு தடையா அல்லது ஆரோக்கியாமா?

4)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரட்டை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அவதாரில் சினிமா கலைஞர்களின் படம் போடகூடாது என்று நீக்கியது சிறந்தக்டு என்று நினைக்கிறீங்களா இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

5)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?

6)யாழில முன்னொரு காலத்தில் நிலா எப்போதும் ஒளி வீசி கொண்டிருக்கும் தற்போது ஒளி குறைந்துள்ளது அதற்கு காரணம் என்ன?யாழில் வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் இருந்தீங்கள்,தற்போது எவ்வாறான மனநிலையில் இருக்கிறீங்கள்?

7)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் ஒரு துன்பியல் நிலை அதாவது புதிய உறுப்பினர்,பழைய உறுப்பினர் என்று பாகுபடுத்துவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் இது யாழின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம் தானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

8)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?யார் அந்த புண்ணியவான் என்று எங்களுக்கு சொல்லலாமே?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது காதல் திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

9)வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?வாழ்கையில் மறக்கமுடியாத நாள் என்று ஏதாவது என்றா எங்களுடன் பகிர்ந்க்டு கொள்ளமுடியுமா?வாழ்கையில் இதுவரை சாதித்தது என்ன சாதிக்க போவது என்ன?

10)உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பிகளுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

Link to comment
Share on other sites

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) சகி தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)தூயா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Link to comment
Share on other sites

10)உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பிகளுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

11)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?

12)பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிகடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?அத்துடன் பல பெண்களுக்கு தற்போது சமைக்க தெறியாது நீங்கள் எப்படி ?எவ்வாறான உணவுகளை சமைப்பீர்கள்?உங்கள் கண்ணோட்டத்தில் ஆண்கள் பற்றி?

13)ஒரு நாள் இந்த வெண்ணிலாவுக்கு அந்த வெண்ணிலவுக்கு போக சந்தர்பம் கிடைகுது அப்போது உங்கள் மனநிலை என்ன?வெண்ணிலவுக்கு செல்வீர்களா??யாரை உங்களுடன் கூட்டி கொண்டு செல்வீர்கள்??

14)தமீழிழ தேசிய போராட்டம் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளது இந்த சந்தர்பத்தில் புல தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிபார்கிறீர்கள்?தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா?

15)உங்களுடன் கோபம் போட்டு தம்பி சென்று விட்டார் என்று கவலைபட்டீர்கள் தற்போது தம்பி வந்துவிட்டாரா??உங்களுக்கு சந்தோசமா?இவ்வாறு கோபித்து செல்லும் உறவுகளுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

16)இறுதியாக சிறிய விண்ணப்பம் நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீங்கள் எங்களுக்கா ஒரு சிறிய கவிதையை தரமுடியுமா?

இவர்கள் பற்றி

*வானவில்-

*இன்னிசை-

*குட்டிஸ்-

*அனிதா-

*தூயா-

*ஜனனி-

*பிரியசகி-

*இனியவள்-

*டங்கிளஸ்-

*ரசிகை-

*முகத்தார்-

*நாரதர்-

*மணிவாசகன்-

*கறுப்பி-

*வினித்-

*வடிவேல்-

*சின்னப்பு-

*வலைஞன்-

*நெடுக்காலபோவான்-

*ஆதிவாசி-

*ஜம்முபேபி-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?

2)யாழில் கிளசுகள்?

3)யாழின் இளசுகள்?

4)யாழில் கவிதை?

5)யாழில் நிலா?

6)யாழில் மறக்கமுடியாதவர்?

7)யாழின் பலம்?

8)யாழில் டைகர்பமிலி?

9)யாழில் ஜம்மு,வானவில்?

10)ஆசைக்கு?

11)அறிவுக்கு?

Link to comment
Share on other sites

நிலா அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

nilasadue1.jpg

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

:P :lol: :P

Link to comment
Share on other sites

ஜம்மு ;- வணக்கம் வெண்ணிலா அக்கா பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெறிவித்து கொண்டு பேடிக்கு சொல்வோமா...................

வெண்ணிலா :- வணக்கம் ஜம்மு. உங்கள் அழைப்புக்கு நன்றி. அதேன் ஜம்மு நீங்கள் சில சில இடங்களில் தமிழ் உச்சரிப்பை தப்பாக உச்சரிக்கின்றீங்க? வாயுக்குள்ளை ஏதாசும் இருக்குதா? ( மனசுக்குள்....அட சீ நான் பேட்டி கொடுக்க எல்லோ வந்தேன்.) ம்ம்ம் வணக்கம் ஜம்மு..

ஜம்மு ;- உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா??

வெண்ணிலா :- என்னைப் பற்றியா? எனது பெயர் வெண்ணிலா. எனக்கு 1 அம்மா 1 அப்பா 3 அண்ணா. நான் படிச்சிட்டு இப்ப வீட்ல இருக்கிறேன். வேறை என்ன இவ்வளவும் போதுமே. ஹாஹா.

ஜம்மு :- யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் வெண்ணிலா என்பது உங்கள் சொந்த பெயரா அல்லது அதை விரும்பி வைக்க ஏதாவது காரணங்கள் இருகின்றனவா?

வெண்ணிலா:- சும்மா இணையத்தில் பொழுதுபோக்க வந்த என்னை அரட்டை மூலம் கிடைத்த ஒரு நண்பர் யாழுக்கு அழைத்து வந்தார். அவருக்கு இந்த நிமிடத்திலும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். வெண்ணிலா இணைய பாவனைக்காக வைத்த பெயர். கிட்டத்தட்ட 7 வருடமாக இப்பெயர் பாவனையில் இருக்கின்றது. தற்போது இணையத்தில் மட்டுமல்ல வீட்டிலும் இப்பெயர் தான் பாவனையில். காரணம் என்று சொல்லிக்கிற அளவுக்கு எதுவும் இல்லை. ரொம்ப பிடிச்ச பெயர்.

ஜம்மு :- யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்ற வகையில் புதிய உறுப்பினர்களின் வருகையை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?யாழில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இது ஆரோக்கிய வளர்ச்சியா இல்லையா பற்றி சில வரிகள்?

வெண்ணிலா :- யாழில் தற்போது இணையும் உறுப்பினர்களை அன்போடு வரவேற்கின்றேன். ஆனால் நான் இணைந்தபொழுது இருந்த உறுப்பினர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு பெயர் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய யாழ்களத்தில் ஒருவர் பல்வேறு பெயர்களில் நுழைகிறார்கள். அதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றும்படி கலகல என பேசுறார்கள். சிரிக்கிறார்கள் சிரிக்க வைக்கிறார்கள். ம்ம் சுவாரசியமாகவே செல்கின்றது.

மாற்றங்கள் என்றால் (மனசுக்குள்...யாழ் வடிவமைப்பை பற்றி கேட்கிறானா? தமிழ் தலைப்புடனான பிரிவுகளாஇக் கேட்கிறானா ஜம்மு ஒண்ணுமே புரியல்லையே.) ம்ம் மாற்றங்கள் ம்ம் புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கையின் நியதி தானே. மாற்றங்கள் வருவது நல்லதுதானே. :angry: (மனசுக்குள்ளே..ஒருமாதிரி சமாளிச்சுட்டேன். ஜம்மு வெளில வா இருக்குது ஆமா)

ஜம்மு :- தற்போது மட்டுநுறுத்தினர்கள் பற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அதிலும் குறிபிட்ட ஒருவர் பலதரபட்ட விமர்சனதிற்கு உள்ளாகி உள்ளார் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?உங்கள் பார்வையில் இது யாழின் வளர்ச்சிக்கு தடையா அல்லது ஆரோக்கியாமா?

வெண்ணிலா :- மட்டுறுத்தினர்கள் விமர்சனத்திற்கு உள்ளாவது எதனால் என பார்க்கையில் தற்போது மட்டுறுத்தினர்கள் உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை முன்வைப்பதில்லை இதனால் தான் என நினைக்கின்றேன். காரணம் முந்தி மட்டுறுத்தினர்களே உறுப்பினர்களோடு உறுப்பினர்களாக அதாவது தாங்கள் முதலில் ஒரு உறுப்பினர் அதன் பின்னர் தான் மட்டுறுத்தினர் என்பதை எண்ணத்தில் கொண்டு கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கணும் வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டுதல் நீக்குதல் இப்படியான வேலைகளை உறுப்பினர்களாக இருந்து கொண்டு செய்தார்கள். அப்போ எந்த விமர்சனங்களும் வரவில்லை. தற்போது உறுப்பினர்கள் மட்டுறுத்தினரை அதாவது நிர்வாகத்திடம் சில பதில்களை எதிர்பார்த்து கருத்துகளை முன் வைத்தாலும் நிர்வாகம் பதில் சொல்லாமையால் விமர்சனத்திற்குள்ளாகின்றார

Link to comment
Share on other sites

சிறிய விளம்பர இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.............................

Link to comment
Share on other sites

ஜம்மு :- நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?

வெண்ணிலா :- ஆமாம் தமீழத்தில் தான் பிறந்தேன். உங்கள் நினைப்பு சரிதான். ஹீஹீ. தமிழீழத்தில் என்னை மிகவும் கவர்ந்தது என்றால் கடற்கரை மணலில் ஓடிப்பிடிச்சு விளையாடுறது. அட பாவமே கொடிய யுத்தத்தால் பாதித்த சந்தர்ப்பம் என்றால் அது ஜம்முவுக்கு விசேடமாம். ஜோவ் நேயர்கள் பார்க்கிறாங்க. இல்லையேல் இதிலேயே ஒரு கொலை ஆமா. ம்ம்ம்ம் கொடிய யுத்தத்தால் பாடசாலை மீதான குண்டுத்தாக்குதலின் போது என் சொந்த தங்கையினதும் உறவுகளினதும் இறப்புக்கள் என்னை பாதிச்சவைகள். வேறொரு நாட்டில். அதாவது கொழும்பில்.

ஜம்மு :- பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிகடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?அத்துடன் பல பெண்களுக்கு தற்போது சமைக்க தெறியாது நீங்கள் எப்படி ?எவ்வாறான உணவுகளை சமைப்பீர்கள்?உங்கள் கண்ணோட்டத்தில் ஆண்கள் பற்றி?

வெண்ணிலா :- பெண்களுக்கு கோபம் அடிக்கடி வரும் என்று சொல்ல தெரியல்லை. எல்லோரும் ஒரே போல இல்லைதானே. ஆனால் எனக்கு பயங்கரமாக கோபம் வரும். அதுவும் மற்றவர்களால் தான் வருது. கோவம் வரும்போது முகம் சிவந்துடும். அப்புறம் அழுகையே வந்துடும். ஏதாவது போட்டு உடைக்கணும் போல இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த முயல்வேன் முடியாமல் போயிடும். அழுதுகொண்டே இருப்பேன் சிலமணி நேரங்கள்.

பல பெண்களுக்கு சமைக்க தெரியாதெனில் சில பெண்களுக்கு சமைக்க தெரியும். அப்படி தானே ஜம்மு. அப்படியாயின் அச்சில பெண்களுக்குள் நானும் அடங்குவேனே. சாப்பிட்டு பார்த்தால் தானே தெரியும்.

ஜம்மு :- ஒரு நாள் இந்த வெண்ணிலாவுக்கு அந்த வெண்ணிலவுக்கு போக சந்தர்பம் கிடைகுது அப்போது உங்கள் மனநிலை என்ன?வெண்ணிலவுக்கு செல்வீர்களா??யாரை உங்களுடன் கூட்டி கொண்டு செல்வீர்கள்??

வெண்ணிலா :- அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ என் மனநிலை அட எவண்டா இவன் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தான். வெண்ணிலாவையே வெண்ணிலாக்கு அனுப்புறானே. முட்டாளாக இருப்பானோ என்று எண்ணத்தோணுமே. ஹீஹீ செல்ல மாட்டேன். ஆனால் ஜம்மு பேபியை கூட்டிச்சென்று நிலாவை காட்டுறேன் னு சொல்லிட்டு அங்கிருந்தே கீழே தள்ளி விடுறதுக்காக கூட்டிட்டு போவேனே.

ஜம்மு :- தமீழிழ தேசிய போராட்டம் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளது இந்த சந்தர்பத்தில் புல தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிபார்கிறீர்கள்?தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா?

வெண்ணிலா :- தமிழர்கள் தங்களால் செய்யக்கூடிய உதவிகளை செய்யணும். ஏதாவது வழிமுறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். அவர்கள் தேவைகளை நிவர்த்தி செய்யலாம். ஆட்பலம் நிதியுதவி தொழிநுட்ப உதவிகள் இபப்டி பல உதவிகளை செய்யலாம். மாட்டிக்காமல்.

அவர்கள் ஒரு துரோகிகள்.

தடை ஏற்பட்டாலும் நம் படைகள் அத்தடைகளை உடைக்கும் என நினைக்கின்றேன்.

ஜம்மு :- உங்களுடன் கோபம் போட்டு தம்பி சென்று விட்டார் என்று கவலைபட்டீர்கள் தற்போது தம்பி வந்துவிட்டாரா??உங்களுக்கு சந்தோசமா?இவ்வாறு கோபித்து செல்லும் உறவுகளுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

வெண்ணிலா :- ம்ம் என்னோடு கோபம் போட்டு சென்ற தம்பி மீண்டும் வந்துவிட்டார். ம்ம் ரொம்ப ஹப்பியாக இருக்கின்றோம் நானும் தம்பியும். அவ்வாறு கோபித்து செல்லும் உறவுகளுக்கு நான் சொல்ல விரும்புவது ஏன் கோவம் எதற்கு கோபம் என்பதை விளக்கிட்டு செல்லுங்கோ. அக்கோபத்திற்கான காரணம் ஏற்கப்படுமாயின் அக்கோபத்தையும் ஏற்பேன். திருப்பி கதைகக்வே மாட்டேன். இதுதான் என் கொள்கை.

ஜம்மு :- இறுதியாக சிறிய விண்ணப்பம் நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீங்கள் எங்களுக்கா ஒரு சிறிய கவிதையை தரமுடியுமா?

வெண்ணிலா :- அட பாவி ஜம்மு கவிதையா? இந்த நேரத்திலா? :lol:

வெள்ளிமாலைப் பேட்டிக்கு

வெண்ணிலாவை பேட்டி கண்ட

ஜம்மு பேபியே உனக்கு

நன்றி கூறுவதுடன்

நீ நீடூழிகாலம் வாழவும்

நும் பணி தொடரவும்

வாயார வாழ்த்துகின்றேன்.

மற்றவர்களை சொல்லணும் ல. அப்போ அவர்கள் எல்லாம் என்னை பார்ப்பினம் ல. அப்பசரி ஒருக்கா மேக்கப் போட்டுட்டு வரட்டுமா? என்ன இளிப்பு. :angry:

ரேக் ஏ பிறேக்

Link to comment
Share on other sites

இவர்கள் பற்றி ஓரிரு வார்த்தையில் சொல்லணுமா?

*வானவில்- அறிவிப்பாளன்

*இன்னிசை- புதிய இசை

*குட்டிஸ்- பொய்க்காரன். :angry: (அவருக்கே புரியும்)

*அனிதா- சின்னக்குயில் (அதுக்காக கறுப்போ என்று கேட்க கூடாது ஆமா)

*தூயா- சமையல்கட்டு

*ஜனனி- அரட்டை மன்னர்களின் தோழி

*பிரியசகி- எல்லோருக்கும் சகிதான்.

*இனியவள்- அகத்தியனின் கவிதை ரசிகை

*டங்கிளஸ்- புலநாய்வு அதிகாரி

*ரசிகை- என் அக்கா

*முகத்தார்- பொன்னம்மாக்காவின் புருஸ்

*நாரதர்- கலகம் செய்வதில் நிபுணன்

*மணிவாசகன்- என் அத்தான்.

*கறுப்பி- கவிதை அந்தாதியின் ஆதி

*வினித்- வடிவேலுவின் மறுபக்கம்

*வடிவேல்- இம்சை அரசன்

*சின்னப்பு- அப்பு எப்பவும் மப்பு

*வலைஞன்- கலகலப்பற்ற மட்டுறுத்தினர்

*நெடுக்காலபோவான்- பொண்ணுகள் என்றால் அலேர்ஜி

*ஆதிவாசி- குறும்புவாசி

*ஜம்முபேபி- அம்முல்பேபி

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது? அழகான தமிழ்

2)யாழில் கிளசுகள்? இப்போ குறைவு

3)யாழின் இளசுகள்? கூடிட்டுது லொள்ளுகளோடை

4)யாழில் கவிதை? அடிக்கடி வருது. எதை வாசிக்க என புரியல்லை

5)யாழில் நிலா? எந்த நிலா? வெண்ணிலா? ஈழநிலா? தமிழ்நிலா? நிறைய நிலா இருக்கு

6)யாழில் மறக்கமுடியாதவர்? எல்லோரையும் தான்.

7)யாழின் பலம்? உறுப்பினர்கள்

8)யாழில் டைகர்பமிலி? தனி ராச்சியம். எப்ப உடையுதோ நானறியேன். ஹீஹீ

9)யாழில் ஜம்மு,வானவில்? ஜம்மு வந்தால் மறுநிமிடம் வானவில் வருவார். இரட்டை பிறவிகள்.

10)ஆசைக்கு? புத்தனின் கவிவரிகள்

11)அறிவுக்கு? எந்த அறிவுக்கு? கணணி அறிவுக்கு என்றால் தேவகுரு அங்கிள்.

:P நன்றி ஜம்மு. இப்பேட்டிக்கு என்னை அழைத்து நீண்ட நேர இடைவேளைகளை தந்து பேட்டிக்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களுக்கும் இதுவரை பொறுமை காத்து பார்த்து ரசித்த நேயர்களுக்கும்

டைகர் வானொலியினருக்கும் எனது அன்பான நன்றிகள் கூறி ஏதாவது பிழையாக உங்கள் உள்ளங்களை நோகும்படி பேட்டி அளித்திருப்பின் அதற்காக மன்னிப்பும் கோரி உங்கள் அனைவரிடமுமிருந்து விடைபெற்று செல்லும் நான் என்றும் உங்கள் வெண்ணிலா. :P

Link to comment
Share on other sites

எமக்காக தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி தந்த வெண்ணிலா அக்காவுக்கு டைகர்பமிலி மற்றும் டைகர் வானொலி சார்பாக நன்றிகளை தெறிவிக்து கொண்டு,மிகவும் நல்லதொரு பேட்டியை தந்த நிலா அக்காவுக்கு வாழ்த்துகள்................

இதுவரை பேட்டியை கண்டு ரசித்து இருபீர்கள் என்று நினைகிறேன் மீண்டும் மற்றுமொரு இனிய வெள்ளிமாலை பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை வானவில்லுடன் விடை பெறும் நான் என்றும் உங்கள் ஜம்முபேபி.

வணக்கம் நேயர்களே..

Link to comment
Share on other sites

பேட்டி எடுத்த ஜமுனா, கொடுத்த வெண்ணிலா இருவரும் தங்களது திறமையை திறம்பட பண்ணியிருந்தார்கள்.

இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் பல மாற்றங்களை உருவாக்கிய இறுதி பேட்டி என்று யாவரும் அறிந்ததே அந்த வகையில் இறுதியாக பேட்டி காண்பட்ட நிலா அக்காவுக்கு நன்றிகள்...............எல்லா பெருமைகளும் டைகர் பமிலிக்கே செல்லும்.................. :D

இன்று பேட்டி காணபோகும் நபர் புரியாத புதிர்..........கடலை நாயகன்..........உலக நாயகன்....செய்தி மன்னன் என்று பலதரபட்ட பட்டங்களி கொண்ட முடிசூடா மன்னன் யார் என்று தெரியுமா...........ஆமாம் அவர் தான் சுண்டல் என்று அழைக்கபடும் சிட்னியின் நாயகன்...........இன்று அந்த நாயகனுடன் தான் பேட்டி............

பெயரை கேட்கவே சும்மா அதிருதிலலலலல.............

வெயிட் அன்ட் சீ.........COOL :)

Link to comment
Share on other sites

வணக்கம் சுண்டல் பல சிரமங்களுக்கு மத்தியிலும்(அது தான் கடலை போடுறதை சொன்னனான்) :P எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர்பமிலி சார்பாக நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து கொண்டு பேட்டிக்கு செல்வோமா.........................

*உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும்?யார் உங்களை இதில் இணைக்க தூண்டியவர் என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?சுண்டல் என்ற திருநாமத்தை :P உங்களின் திருநாமமாக இட ஏதாவது காரணங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்து கொள்ள முடியுமா?

2) யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்ற வகையில் புதிய உறுப்பினர்களின் வருகையை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?யாழில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இது ஆரோக்கிய வளர்ச்சியா இல்லையா பற்றி சில வரிகள்?

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரட்டை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அவதாரில் சினிமா கலைஞர்களின் படம் போடகூடாது என்று நீக்கியது சிறந்தக்டு என்று நினைக்கிறீங்களா இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?எத்தனை பேர் தற்போது கோபமகா இருக்கிறார்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?

5)அண்மையில் ஒரு கள உறவால் யாழில் பெண்கள் புறகணிக்கபடுகிறார்கள் என்று ஒரு தலைப்பு ஆரம்பிக்கபட்டு அது பலதரபட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது(பெண்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில்) :P இதற்கு உங்களி பதில் என்ன?இதை போல் இன்னொருவர் தலைப்பு அதாவது ஆண்கள் புறகணிக்கபடுகிறார்கள் என்று தொடங்கி சிறிது நேரத்தில் அத் தலைப்பு அகற்றபட்டது அதை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருகிறோம்?

6)யாழில் தற்சமயம் ஒரு குறை அதாவது பலர் சமய பிரச்சினைகளுக்கு தங்கள் சமயத்தை வளர்பதிலும் அக்கறை காட்டுகிறார்கள் இவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?அடுத்ததாக பலமுகங்களிள் தற்போது ஒருவர் வந்து கருத்து வைப்பது ஒரு நாகரீகமாக மாறி வருகிறது யாழில் அதை பற்றிய உங்கள் கருத்து?

7)சில வாரங்களுக்கு முன் மட்டுநுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்தாட வேண்டும் என்று ஒரு தலைப்பு தொடங்கபட்டு பலதரபட்ட பிரச்சினைகளுக்கு அத் தலைப்பு இட்டவர்கள் முகம் கொடுத்து இறுதியில் ஒரு சுமூகமாக அந்த பிரச்சினை தீர்விற்கு வந்தது யாவரும் அறிந்ததே இதை பற்றிய உங்கள் பார்வையில்?

8)இப்பொழுது யாழில் வெற்றிகரமாக பல பக்கங்களை தாண்டி வெற்றி நடை போடும் சிவாஜி புறகணிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?புறகணிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

9)அடுத்து பலதரபட்ட விமர்சனதிற்கு உள்ளான நட்பா,காதலா என்ற தலைப்பு பற்றிய உங்கள் சிந்தனையோட்டம் என்ன?உங்கள் பார்வையில் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது நட்புக்கா அல்லது காதலிற்கா?உங்கள் பார்வையை அறிய ஆசை?உங்கள் பார்வையில் நண்பியின் தோளிள் சாய்வது பற்றிய உங்கள் கருத்து?

10)நீங்கள் போடும் செய்திகள் அநேகமானவை வித்தியாசமாக இருகிறது அதாவது 70 பெரிசு பண்ணும் லொள்ளு,இதாண்டா தமிழ் நாட்டு பொலிஸ் என வித்தியாசமான செய்திகளை இடுவீங்கள் ஆனால்........தமிழ் தேசிய செய்திகளை விட இந்த செய்திகள் பல பக்கம் தாண்டி வெற்றி நடை போடும் இதன் இரகசியம் தான் என்ன என்பதை எங்களுக்கு சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.