Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிலிப்பைன்ஸ்-பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பிலிப்பைன்ஸ்: பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் பெற்றோர்

குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது.

மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர்.

 

பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள்.

ஆறு மாத குழந்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நீதி திட்டம் அமைப்பு கூறுகிறது.

இதனை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது பிலிப்பைன்ஸ் அரசு.

என்ன நடக்கிறது?

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் என்ற அளவில் இருந்தது. கடந்தாண்டு இது 18 மில்லியனாக உயர்ந்துள்ளது என்கிறது காணாமல் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மையம்.

பிலிப்பைன்ஸில்தான் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

தன் தாயாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறுகிறார் ஜோனா எனும் பதின்பருவ வயது பெண். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"ஒரு முறை நானும் என் நண்பரும் ஒன்றாக குளித்து, ஆடை அணிந்தோம். அந்த அறையில் என் அம்மாவும் இருந்தார். அவர் அதனை படம் எடுத்தார்" என்கிறார்.

"எதற்காக படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை... சும்மாதான்' என்று அவர் கூறினார்" என்கிறார் ஜோனா.

ஆனால், அந்த படங்கள் இணையத்தில் விற்கப்பட்டது. பின்பு, போலீஸ் மூலம் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன.

500 குழந்தைகள் மீட்பு

எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டன் தேசிய குற்றவியல் மையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணி செய்த சர்வதேச நீதி மையம் என்ற அமைப்பு இதுவரை 500 பிலிப்பைன்ஸ் குழந்தைகளை மீட்டுள்ளது.

69 சதவீத வழக்குகளில் குழந்தைகள் பெற்றோர் அல்லது உறவினர்களாலேயே துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் Image caption சாம்

69 சதவீத வழக்குகளில் குழந்தைகள் பெற்றோர் அல்லது உறவினர்களாலேயே துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் சாம், "நாங்கள் ஆறு மாத குழந்தை ஒன்றையு மீட்டுள்ளோம். மீட்கப்பட்டவர்களில் 50% பிள்ளைகளுக்கு 12 வயது அல்லது அதற்கு குறைவாகதான் இருக்கும்." என்கிறார்.

'தெரிந்தே செய்கிறோம்'

பிபிசியிடம் பேசிய பிலிப்பைன்ஸை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தாம் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் அந்த படங்களை எடுக்கவில்லை என்கிறார்.

அவர், "உங்களுக்கு 12 அல்லது 13 வயது குழந்தைகள் பிடிக்குமா என்று ஒரு வெளிநாட்டினரிடம் கேட்டேன். அவர், 'சரி' என்று தெரிவித்தார்" என்கிறார்.

"நான் அந்த படங்களை வாங்கி கொடுத்தேன். எங்கு எடுத்தது என்பதெல்லாம் அந்த வெளிநாட்டவருக்கு தேவையில்லை" என்கிறார்.

போலீஸ் இவரை விசாரித்து வருகிறது.

திருச்சபைகள்

ஸ்டீஃபன் Image caption ஸ்டீஃபன்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான இவ்வாறான காணொளிகள் இணையத்தில் பரவுவது மற்றும் பார்க்கப்படுவது குறித்து கண்காணிக்குமாறு சில திருச்சபைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.

வறுமையின் காராணமாக இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.

மணிலா புறநகர் பகுதியில் உள்ள சர்ச்சின் பாஸ்டர் ஸ்டீஃபன், வறுமையை ஒரு காரணமாக கூற முடியாது என்கிறார்.

வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பிழைப்பதற்காக குழந்தைகளை விற்க வேண்டிய தேவையில்லை என்கிறார்.

குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிரான மையத்தை பிலிப்பைன்ஸ் போலீஸ் மணிலாவில் அமைத்துள்ளது. பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போலீசார் இது குறித்து பிலிப்பைன்ஸ் போலீஸுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

"இது மறைமுகமாக நடக்கும் குற்றம். கணிசமான அளவில் இதனை குறைத்துவிட்டோம்" என்கிறார் பிலிப்பைன்ஸ் ஆணையங்களுக்கான செயலாளர் லொரன் படோய்

https://www.bbc.com/tamil/global-48767918

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பிலிபினோக்கள் திறமையானவர்கள். இங்கும் அரசியல்வாதிகளாலேயே பிரச்சினை. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே குறிப்பிடப்படும் பெற்றோர் தெரிந்தே இந்த குற்றங்களை செய்கிறார்கள்.. ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்  தாங்கள்  அறியாமல் சிலவற்றை செய்கின்றனர்.. உதாரணமாக சமூக வலைத்தளங்களில் தமது குழந்தைகளின் அல்லது உறவினரின் பிள்ளைகளின் படங்களை ஆசையில் தரவேற்றம் செய்துவிடுகிறார்கள்.. ஆனால் மனிதர்களில் சிலர் அதை மிகவும் கெட்ட எண்ணங்களோடு பார்ப்பதை அறிவோமா??

  • கருத்துக்கள உறவுகள்

கூடுமானவரை குழந்தைகள்,  சிறுவர்கள் சம்பந்தமான படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவிடுவதை தவிர்ப்பதே நன்று.. ஏனெனில் இன்று நம்மிடைய பலவகையான மனிதர்கள் உலாவுகிறார்கள்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/26/2019 at 8:23 AM, colomban said:

பிலிபினோக்கள் திறமையானவர்கள். இங்கும் அரசியல்வாதிகளாலேயே பிரச்சினை. 

சுயமாய் சிந்திக்கும்
மக்கள் இல்லாத வரையில்... 
சுயநலமாய் சிந்திக்கும்
அரசுகளுக்குப் பஞ்சமில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.