Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அமெரிக்காவின்  தேவைக்காக காணி கொள்வனவு சட்டத்தை கொண்டு வர பிரதமர் முயற்சி  - தயாசிறி 

 

நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்க விதிகள் சட்டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அமெரிக்காவின்  வசதிக்கேற்பவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். 

ranil.jpg

காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையான பொருளதார வலய திட்டத்திற்கு மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு இடங்களை தாரை வார்ப்பதே பிரதமரின் நோக்கமாகும். இதற்காக அமெரிக்காவிடமிருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இந்த நிதி எதற்காக , ஏன் பெறப்படுகிறது என்ற ஒரு திட்டமிடலும் இல்லை. 

இவ்வாறு உள்நாட்டு இடங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றோம். அவ்வாறில்லையென்றால் மக்கள் இதற்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60088

தேசிய  வளங்களை பிற நாடுகளுக்கு விற்கும் சூழ்ச்சியாக   காணி திருத்த சட்ட மூலம்  - பந்துல

காணி திருத்த சட்ட மூலம் வெற்றிப்பெறுவதற்கு  ஒருபோதும் இடமளிக்க முடியாது.மக்களுக்கு  நன்மை புரிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து தேசிய வளங்களை  பிற நாடுகளுக்கு விற்கும் சூழ்ச்சியினையே  முன்னெடுக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷரம விகாரையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

 விசேட காணி திருத்தச்சட்ட மூலம்  நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 இந்த   மசோதாவிற்கு எதிராக   பல  மனுக்கல்  நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே  இந்த   மசோதாவை   ஒருபோதும்  பாராளுமன்ற  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. ஒருபோதும் இந்த சட்டம் வெற்றிப் பெறுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60095

 

  • தொடங்கியவர்

காணி வழங்குவதை எவராலும் நிறுத்த முடியாது - ரணில்

இலங்கை மக்களுக்கு சொந்தமாக காணி உரிமைகளை வழங்குவதை தடுக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
அம்பாறையில் தயா எப்பரல் மண்ட பத்தில் நேற்று நடைபெற்ற 10 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் வைபவத்தில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
 
மக்களுடன் வீதியில் இறங்கி, போராட்டம் நடத்தி, மக்களுக்கு காணி உரிமை அவசியம் என்ற செய்தியை நாட்டுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
 
மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்கும் சட்டமூல வரைவை தயாரித்து அமைச்சரவை அனுமதியை பெற இரண்டு ஆண்டுகள் சென்றது.
 
 அந்த சட்டமூலத்திற்கு அனுமதி பெற்று, வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்குவதற்கு எதிராக இரண்டு அமைப்புகள் செயற்பட்டுள்ளன. இவர்கள் யார்? இந்த அமைப்புகள் என்ன? மக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்ப்போர் எதிரணியில் இருக்கின்றனர்.
 
மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதை நிறுத்த வழக்கு தொடரபோகிறார்களாம். இந்த போராட்டத்தை கைவிட முடியாது. 
 
நாம் சிறிது தூரம் வந்து விட்டோம். கடந்த முறை இப்படியான சட்ட மூலத்தை முன்வைத்தபோது பலவகையில் எதிர்த்தனர். அப்போது சந்திரிகா குமார துங்க ஜனாதிபதியாகவும் நாங்கள் அரசாங்கமாகவும் இயங்கினோம்.
 
பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. முதலமைச்சர்கள் எதிர்த்தனர். அதனை தடுத்து நிறுத்தினர். 
 
எனினும் இம் முறை அதனை தடுத்து நிறுத்த இடமளிக்க முடியாது. இப்படியான புரட்சிகரமான திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.