Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது; மக்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது; மக்கள் விசனம்

வவுனியா சாந்தசோலைக்கு நேற்று மாலையில் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் இருவர் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொண்ட கடன் பணத்தையும் தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் தவறினால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து அடாவடி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

lon.jpg

 நுண்நிதி நிறுவனப்பணியாளர்களிடம் மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால்  தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்த குடும்பப்பெண்களிடம் அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

நேற்று மாலை 5.50மணியளவில் சாந்தசோலைக் கிராமத்திற்குச் சென்ற வவுனியா 2ஆம் குறுக்கு தெரு வீதியிலுள்ள கம்பனியின் நிறுவனப்பணியாளர்கள் இருவர் அப்பகுதியில் கடன் பெற்றுக்கொண்ட குழுத் தலைவி வீட்டிற்குச் சென்று நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இறுதி நினைவூட்டல் கடிதம் ஒன்றினை வழங்கியதுடன் பணத்தை தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் கோரியுள்ளனர்.

இதன்போது இவ்வாறு மாலை 5.50மணியளவில் வீடுகளுக்குச் சென்று கடன் பணம் அறவிடுவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டபோது அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைகளினால் அப்பெண்மணியிடம் நடந்து கொண்டதாகவும் அப்பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 6.15மணிவரையும் அங்கிருந்த குறித்த நிறுவனப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் சென்றதை அவதானித்ததும் தப்பிச் சென்றுள்ளனர்.

hentrcg.jpg

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் சாந்தசோலைப்பகுதிக்குச் சென்று நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்கும் வீடுகளுக்குச் சென்று பணம் அறிவிடுவதையும் தமது கிராமத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடன் பெற்றுக் கொண்ட சிலரினால் செலுத்தப்படாமலிருந்த நிலுவைப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில தினங்களாக அப்பகுதிகளுக்குச் சென்ற நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அப்பகுதிப் பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சாந்தசோலை பெண்களின் இக்குற்றச்சாட்டுக் குறித்து நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கி.ஸ்ரீபிரசாத்திடம் தொடர்புகொண்ட கேட்டபோது,

நேற்று மாலை சாந்தசோலைக்கிராமத்திற்கு பணம் அறவிடுவதற்காக எமது நிறுவனத்தின் பணியாளர்கள் செல்லவில்லை இறுதி நினைவூட்டல் கடிதத்தினை வழங்குவதற்காக அங்குள்ள வீடுகளுக்குச் சென்றதாகவும், பிரதேச செயலகத்தினால் நிறுவனங்களுக்கு மாலை 5மணியின் பின்னர் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடவேண்டாம் என்று கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முகாமையாளர் என்ற ரீதியில் தமது நிறுவனத்தில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/61249

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெரும் பெரும்பான்மையானோர் குடும்ப கஷ்டத்திற்காய் கடன் பெறுவதை விட கார ,மோ.சைக்கிள்,நகைகள் வாங்க கடன் பெறுபவர்கள் தான் அதிகம்... 18 வந்தவுடன் பிள்ளைகளுக்கு கடன் பட்டு மோ .சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறது ஒன்று அடிபட்டு சாகுங்கள் அல்லதுயாரையும் சாகடிக்குங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

இந்த நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெரும் பெரும்பான்மையானோர் குடும்ப கஷ்டத்திற்காய் கடன் பெறுவதை விட கார ,மோ.சைக்கிள்,நகைகள் வாங்க கடன் பெறுபவர்கள் தான் அதிகம்... 18 வந்தவுடன் பிள்ளைகளுக்கு கடன் பட்டு மோ .சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறது ஒன்று அடிபட்டு சாகுங்கள் அல்லதுயாரையும் சாகடிக்குங்கள் 

இப்ப இலங்கையில் இந்த நுண்கட நிதிநிறுவங்கள் தான் கொடிகட்டி ப்பறக்கிறது ஐந்து  பேர் சேர்ந்து கூட்டாக போய் கடன் எடுப்பது அதற்கு பொறுப்பாக ஒருவர் இருப்பார் ஒரு வர் கட்டிய பிறகே மற்றவருக்கு கடன் கொடுப்பார்கள் கடன் கட்ட முடியாதவர்கள் தூக்கிலும் அல்லது கடன் வழங்கிய நிறுவனத்தின் அறவீட்டாளர்கள் படுக்கை வரைக்கும் அழையாத குறையாக ஏன் அழைத்த சம்பவங்களும் உண்டு அது தெரிந்து பல குடும்பங்கள் பிரிந்த சம்பவங்களுமுண்டு 

பெரும்பாலும் பேராசை பிடித்த பெண்களே இந்தக் கயவர்களிடம் அகப்படுகிறார்கள்.

தங்களால் பெற்ற கடனை மீளச் செலுத்தும் வலுவில்லாத நிலையில், கிடைக்கும் வருமானத்துக்கு ஏற்ப சீவியம் நடத்த முடியாத பேராசை பிடித்த பெண்களும், அல்லது தேவைக்கு ஏற்ப வருமானத்தை உயர்த்த முடியாத பேராசை பிடித்த பெண்களும் இருக்கும் குடும்பம் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இதில் பேராசை பிடித்த பெண்கள் மட்டுமல்ல பேராசை பிடித்த ஆண்கள் சிலரும் இந்தக் கயவர்களிடம் அகப்படுள்ளார்கள்.

 

’நுண்நிதி கடனால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து’

யாழ்ப்பாணம் - கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் மட்டும் அண்மைய நாள்களில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்துக்கு சென்றுள்ளதுடன், பெற்றோர்கள் தலைமறைவாகியாமையினால் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என, கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.தயாரூபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில், நுண்நிதி கடன் நிறுவனங்களினால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது பிரதேச செயலக அண்மைய தகவலின் படி இந்த கடன் நிறுவனங்களினால் 14 குடும்பங்கள் விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் கூறினார்.

அவ்வாறு சென்றுள்ள அனைத்து குடும்பமும் 32 வயதுக்கு உட்படட இளம் குடும்பங்களாகவே காணப்படுவதாகவும், அவர் கூறினார்.

மேலும், நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்ற பெற்றோர்கள் கடன் வசூலிப்பளர்களுக்கு பயந்து வீடுகளை விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அந்த குடும்பங்களின் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூகத்தில் பாரிய சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர், எனவும், அவர் தெரிவித்தார்.

கடன் நிறுவனங்களால், இவ்வாறான பாதிப்புக்களுக்கு அப்பால் கடன் பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றன. ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளியில் வந்தாலும் பல சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாது நடைபெறுகின்றது. இதனால் எமது பெண்கள் உள, உடல் ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன் பெறுவதை கட்டுப்படுத்த பாதிப்புக்களை எதிர் கொள்ளாமல் இருக்க சட்ட ஏற்பாடுகளை அல்லது கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நுண்நிதி நிறுவனங்களில் ஒருவரே பல கடன்களை பெறுகின்றனர். மேலும் ஒரு குடும்பத்தில் பல அங்கத்தவர்கள் கடன்களை எடுக்கின்றனர். அப்படியானால் அவர்களால் எவ்வாறு இந்த கடன்களை கட்டிட முடியும். இதனால் தான் சமூகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இது தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு பலமுறை கூறியதன் பயனாக, 46 ஆயிரத்து 500 பேரின் நுண்நிதி கடன்களை அரசு செலுத்தியது. எனினும், இந்தப் பிரச்சினை முடிந்தபாடில்லை. அப்படியாயின் நாம் இந்த நிறுவனங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என நிதி அமைச்சுடன் கலந்துரையாடி ஓர் முடிவெடுக்கலாம் என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நுண்நிதி-கடனால்-14-இளம்-குடும்பங்கள்-விவாகரத்து/71-236042

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.