Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வான் தாக்குதல்களின் போது தமிழர் பட்ட துன்பங்களை இன்று எங்களால் உணரமுடிகிறது': ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்

Featured Replies

'வான் தாக்குதல்களின் போது தமிழர் பட்ட துன்பங்களை இன்று எங்களால் உணரமுடிகிறது': ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்

"அரசாங்கப் படைகள் வடக்கு கிழக்கில் வான் தாக்குதல்களை மேற்கொண்ட போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை. யதார்த்தத்தை புரிந்துகொண்டு பௌத்த மத தர்மத்தின்படி இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதய சுத்தியுடன் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களை விடுத்து சிங்கள இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான என்னால் கூட இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. 30-க்கும் மேற்பட்ட வருடங்களை கடந்து சென்று சுதந்திர கட்சி யோசனையை தயாரித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிவருவதற்கு முன்னரே குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டது" என்றும் அவர் மேலும் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கொழும்புத் தமிழ் நாளேட்டுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

"~இனங்களுக்கிடையில் நிலவுகின்ற நம்பிக்கையீனமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். எனவே இனங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நீண்டகால வேலைத் திட்டங்களை உருவாக்கவேண்டும். இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் இடம்பெறவில்லை. இது ஒரு நாட்டின் இரண்டு இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை யால் இடம்பெறுகின்ற மோதலாகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெயரளவில் இனப்பிரச்சினை தீர்வு யோசனையை முன் வைத்துள்ளது. எந்தவிதமான நேர்மைத்தன்மையும் இன்றி இந்த யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட சபை என்பது பல வருடங்களுக்கு முன்னர் விவாதிக் கப்பட்டவிடயமாகும். இந்த திட்டத்தினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிவருவதற்கு முன்னரே குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டது. தற்போதுநடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முயற்சிப்பது நகைச்சுவைக்குரிய விடயமாகும்.

குறைந்த பட்சம் பௌத்த மத கோட்பாடுகளின் படி அரசாங்கம் செயற்படவேண்டும். அடித்தால் திருப்பி அடிக்கவேண்டும் என்று பௌத்த மதத்தில் கூறப்பட்டுள்ளதா? என்று அண்மையில் நான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை அரசாங்கம் எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அடித்தால் திருப்பியடிக்கக்கூடாது. ஏன் அடிக்கின்றனர் என்பது குறித்து ஆராயவேண்டும். பௌத்த மதத்தின் கோட்பாடுகள் தற்போது திரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக விடுதலை புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் வடக்கு கிழக்கில் வானூர்திக் குண்டுகளை போட்டபோது அப்பகுதி மக்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்பதனை தற்போது எங்களால் உணரமுடிகின்றது. கேட்டால் பதில் தாக்குதல் என்று கூறுகின்றனர். இதற்கும் ஐக்கிய தேசிய கட்சியே குற்றஞ்சாட்டபடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான விமானத் தாக்குதலும் இடம்பெறவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

நாட்டில் இரவு நேரத்தில் திடீரென மின்சாரத்தை துண்டிப்பதே மகிந்த சிந்தனையாகும். அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டும். இந்த நாட்டில் கடந்த பல வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்பதனை அனைவரும் உணரவேண்டும். வன்முறைகள் வேண்டாம் என்றே பௌத்த மதம் கூறுகின்றது. இந்நிலையில் நாங்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்தால் பழிவங்கும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும். நாட்டில் சமானத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி விரைவில் ஆட்சியைக் கைப்பற்றும்."

இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறவுகள்

. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை.

85 லிருந்தே ஜ.தே.கயினர் ஆட்சியின் போது உலங்குவானூர்தியில் இருந்து தாக்குதல் நடந்தது. 86ல் முதன் முதலாக தமிழர்பகுதியில் தாவடியில் விமானத்தாக்குதல் நடைபெற்றது. இப்படி ஜ.தே.க ஆட்சியில் இருக்கும் போது பல அப்பாவி பொதுமக்கள் விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்டதை இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியாதோ

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா வஜிர அபேவர்தன அவர்களே நீங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் நடந்திருப்பதே விபரிதமாக இருந்திருக்கும். பொறுக்கி உங்களுடைய ஆட்சி காலத்திலை நடந்ததெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆட்சியை பிடிக்கும் மட்டும் கத்துவீங்கள் அதுக்கப்புறம்? எங்க தலைவரை ஒருதராலும் ஏமாற்ற முடியாது புரிந்து நடவுங்கோ. நாம் எல்லாம் தீர்மானித்துவிட்டோம் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கோ என்ன நடக்குதென்று.

இது ரெயிலர் இதுக்கே இப்படி எண்டால் மெயின் பிக்சருக்கு என்னப்பா செய்வீங்க பொறுமை காக்க அனுபவிக்கவும் அழவும் சிங்களவ்ருக்கு கனக்க இருக்கு

நாம் பட்ட துன்பத்ஹ்தின் 1 சதவீதம் கூட நீங்கள் அனுபவீக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வரும் கூற்றுக்களை வாசிக்கிறபொழுது இரண்டு விடயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன..

"அரசாங்கப் படைகள் வடக்கு கிழக்கில் வான் தாக்குதல்களை மேற்கொண்ட போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதைதான் பல காலமாக தமிழ்ச்செல்வன் அண்ணை சொன்னவர்.. எச்சரித்தவர்..

யாரும் கேட்டபாடில்லை.. இப்ப அவையே ஒத்துக்கொள்ளினம்..

வன்முறைகள் வேண்டாம் என்றே பௌத்த மதம் கூறுகின்றது. இந்நிலையில் நாங்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்தால் பழிவங்கும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும்.

இதைதான் தலைவர் ஒரு முறை "JR ஒரு உண்மையான பெளத்தவாதியாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி வந்திருக்காது" என்று சொன்னவர்.

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

புரிகிறதா?

நிற்பாட்ட முடியுமா?

நிற்பாட்டு

நிற்பாட்டுவாய்

நிற்பாட்ட வைக்கப்படுவாய்

ஐயா

நாங்கள் ஒன்றையும் மறக்கவில்லை

மறக்கவும் முடியாது

ஆரம்ப காலத்:தில்

எம்மீது உமது விமானத்தில் எதைக்கொண்டு வந்து தெளித்தீர்கள்

நாங்கள் மறக்கவில்லை

அன்றே நாம் உழைக்கத்தொடங்கினோம்

மனிதமே இல்லாத உம்முடன் உமது மொழியிலேயே பேசுவதென்று

ஆனால் ஐயா

நிச்சயமாக நீர் எம்மீது கொட்டியதை நாம் நினைத்துக்கூட பார்க்கமாட்டோம் உம்மீது கொட்ட

ஏனெனில் நாம் இன்னும் மனிதராய் இருக்கிறோம்

மனிதராய் இருக்கவே விரும்புகின்றோம்

அதற்காகவே போராடுகின்றோம்

என்ன மல குண்டை சொல்கிறீர்களா அப்படி கொட்ட என்ன தமிழன் சிங்களவனா

  • கருத்துக்கள உறவுகள்

மனிதராய் மாறமாட்டானா இந்த சிங்களவன்???

ஒரு நப்பாசை.

QUOTE(Iraivan @ May 3 2007, 01:06 AM)

"ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை"

85 லிருந்தே ஜ.தே.கயினர் ஆட்சியின் போது உலங்குவானூர்தியில் இருந்து தாக்குதல் நடந்தது. 86ல் முதன் முதலாக தமிழர்பகுதியில் தாவடியில் விமானத்தாக்குதல் நடைபெற்றது. இப்படி ஜ.தே.க ஆட்சியில் இருக்கும் போது பல அப்பாவி பொதுமக்கள் விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்டதை இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியாதோ

இல்லை கந்தப்பு - இவர் தனது கட்சி ஆட்சியிலிருந்தபோது தாங்கள் போட்ட குண்டை இம்மியளவும் கணக்கிலெடுக்காமல் கதைக்கிறார். அண்மைக் காலங்களில் தமிழீழ வான்படை சிறிலங்காவின் இலக்குகள் மீது போட்ட குண்டுகளைப் பற்றித் தான் வாய்கிழிய பினாத்துகிறார். U.N.P தமிழர்மீது போட்டது உயிர் கொல்லும் குண்டா அல்லது வேறு ஏதுமா என்று அவருக்கே தெரியவில்லை போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா வஜிர அபேவர்தன அவர்களே நீங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் நடந்திருப்பதே விபரிதமாக இருந்திருக்கும். பொறுக்கி உங்களுடைய ஆட்சி காலத்திலை நடந்ததெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆட்சியை பிடிக்கும் மட்டும் கத்துவீங்கள் அதுக்கப்புறம்? எங்க தலைவரை ஒருதராலும் ஏமாற்ற முடியாது புரிந்து நடவுங்கோ. நாம் எல்லாம் தீர்மானித்துவிட்டோம் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கோ என்ன நடக்குதென்று.

அட! அந்த மனுசன் சொல்ல வந்தது உங்களூக்குப் புரியேல்லை!!...அவர் சொன்னது அவேன்ற ஆட்சிக் காலத்தில் புலிகள் வான் தாக்குதல் செய்யேல்லை எண்டல்லே!! :D

ஆகா...... வெளிநாட்டுக்கு அனுப்பிற ஏஜென்சி ஒண்டைத் தொடக்க வஜீர பிளான் போட்டுட்டான் ஆனா அங்கையும் தமிழ் ஆட்களுக்கு இடம் கிடையாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.