Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சீனர்களின் கலாசார நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chinese-Cultural-Program-in-Kilinochchi-720x450.jpg

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சீனர்களின் கலாசார நிகழ்வு

சீனாவின் கலாசாரத்தை பறைசாற்றும், ஹுபேய் கலாசார நிகழ்வுகள் கிளிநொச்சியில் வெகு விமர்சையாக இடம்பெற்றன.

கலாசார சுற்றுலா வாரத்தின் நிகழ்வுகளாக ஹுபேய் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.

சீனாவின் கலை, கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையிலும், சீன-இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.

அதற்கிணங்க, கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சீன கலாசாரத்தை எடுத்து இயம்பும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வை பார்வையிட பெருமளவான மக்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Chinese-Cultural-Program-in-Kilinochchi-3.jpg

http://athavannews.com/கிளிநொச்சியில்-சிறப்பா-2/

5 hours ago, தமிழ் சிறி said:

குறித்த நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது

சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை கூறி இந்த நிகழ்வை அரங்கேற்றி இந்திய அரசிற்கு ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. 

தமிழர்கள் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்க செய்யப்பட்டு, சிங்கள சீன கால்கள் வலுவாக பதியப்பட்டு வருகின்றது. 

நாளடைவில் இந்தியாவும் பல நாடுகளாக சிதறும்.   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை கூறி இந்த நிகழ்வை அரங்கேற்றி இந்திய அரசிற்கு ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. 

தமிழர்கள் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்க செய்யப்பட்டு, சிங்கள சீன கால்கள் வலுவாக பதியப்பட்டு வருகின்றது. 

நாளடைவில் இந்தியாவும் பல நாடுகளாக சிதறும்.   

தமிழர்கள் ஏன் சீனாவை ஆதரிக்காமல் இந்தியாவை இன்னமும் ஆதரிக்கிறார்கள் - இந்து என்பதாலா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

தமிழர்கள் ஏன் சீனாவை ஆதரிக்காமல் இந்தியாவை இன்னமும் ஆதரிக்கிறார்கள் - இந்து என்பதாலா?

எதற்காக சீனாவை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்????

உலகம் சீனா என பொருளாதார வல்லரசை நோக்கி நகர்கின்றது. சிலருக்கு சீனாவின் வரர்ச்சியை எதிர்க்க வேண்டிய  தேவை.

அதில் சிலர் இலாபம் அடைவர். அதாவது, சீனாவிற்கு தலையையும் அதை எதிர்ப்பவர்களுக்கு வாலையும் காட்டுபவர்களுக்கு இலாபம் கிடைக்கலாம். அவ்வாறு ஒரு நாட்டு இலங்கை. இன்னொன்று பாகிஸ்தான். 

இரண்டும் கலாச்சார ரீதியாக இந்தியாவுடன் இணைந்தவை. அதனால், நாளை என்ன நடக்கும் என சரியாக கணிப்பவர்கள் வெற்றி அடைவார்கள். 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதற்காக சீனாவை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்????

சீனா உலகில் வேகமாக முன்னேறி வரும் நாடு. ஆசியாவின் பலமிக்க சக்தியாகவும், உலகின் இரண்டாவது பலமிக்க நாடாகவும் 2040இல் உலகின் முதல்தர நாடாகவும் உள்ளது சீனா. தனது வளர்ச்சிக்கு தேவையான கடற்போக்குவரத்துக்கு வழியில் உள்ள நாடுகளின் ஆதரவை சீனா நாடி நிற்கிறது. தனக்கு உதவுபவர்களுக்கு பிரதியுபகாரம் செய்கிறது. தனக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தந்த சிங்களவர்களுக்கு போரில் வெற்றி பெற உதவியது சீனா. ஆகவே சீனா வேண்டி நிற்கும் ஆதரவை தமிழரும் வழங்கினால் இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழர் பாதுகாப்பாக பொருளதார வளர்ச்சி அடைய சீனா உதவ கூடும். ஆனால் இந்துக்கள் என்ற காரணத்துக்காக தமிழர் இந்தியாவை கட்டி பிடித்து கொண்டு சீனாவை கண்டுகொள்ளாமல் இருந்தால் ... இந்து வர்ணாசிரம தர்மப்படி ஒடுக்கப்படும் தலித்துகளாக அழிய வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:
3 hours ago, Jude said:

 ... இந்து வர்ணாசிரம தர்மப்படி ஒடுக்கப்படும் தலித்துகளாக அழிய வேண்டியது தான்.

 

இப்படித்தான் சோழன் படை எடுத்த காலத்தில் சைவர்களாகவும்,ஐரோப்பியர் படை எடுத்த காலத்தில் கிறிஸ்தவர்களாகவும் மாறி கடைசியில் தனிநபர் பொருளாதரத்தை யும் ,கூட்டாக மதங்களை தழுவிய மாதிரி சீனா கலாச்சாரத்தை பின்பற்றி இன்னும் ஒர் பிரிவை உருவாக்காலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படித்தான் சோழன் படை எடுத்த காலத்தில் சைவர்களாகவும்,ஐரோப்பியர் படை எடுத்த காலத்தில் கிறிஸ்தவர்களாகவும் மாறி கடைசியில் தனிநபர் பொருளாதரத்தை யும் ,கூட்டாக மதங்களை தழுவிய மாதிரி சீனா கலாச்சாரத்தை பின்பற்றி இன்னும் ஒர் பிரிவை உருவாக்காலாம்....

இந்த மனித வரலாறு, இந்து வர்ணாசிரம தர்மப்படி ஒடுக்கப்படும் தலித்துகளாக அழிவதிலும் சிறப்பானது. சிங்களவர்கள் சீனாவின் ஆதரவுடன் தமிழரை வென்றார்கள். இந்தியாவின் இந்து தலைவர்களை நம்பி அவர்களின் காலை பிடித்த தமிழரை தலித்துகள் என்று தள்ளிவைத்து இந்திய இந்து தலைவர்கள் அழித்து விட்டார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Jude said:

 இந்தியாவின் இந்து தலைவர்களை நம்பி அவர்களின் காலை பிடித்த தமிழரை தலித்துகள் என்று தள்ளிவைத்து இந்திய இந்து தலைவர்கள் அழித்து விட்டார்கள்.

நம்பினார்கள்......இந்தியாவிடம் அந்த ஆயுதகுழு முழுமையாக சரணடைந்திருந்தால் தலித்துக்கள் என்று பார்க்காமல் உறவாடியிருப்பார்கள்.....
எமது போராட்டம் அழிக்கப்பட்டமைக்கு காரணம் நாங்கள் தலித்துக்கள் என்பதையும் தாண்டி......வேறு அரசியல் காரணங்கள் உண்டு......என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.....
சீனாவுக்கு இப்ப கொங்கொங்க் எப்படியோ அது போன்று தான் சிறிலங்கா இந்தியாவுக்கு ......
கொங்கொங்கை உறுப்பட சீனா விடாது அது போல சிறிலங்காவை உறுப்பட இந்தியா விடாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.