Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1.jpg

கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது.

இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அநுரகுமார திஸநாயக்கவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கோட்டாவிற்கு-எதிராக-களம-2/

ஒரு நாள் இந்த தீவில் இராணுவ ஆட்சி அமையலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது. 

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/65827

 

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள தேசிய அடையாள அட்டை, கள்ள கடவுச்சீட்டு, சட்ட விரோத தேர்தல் பிரச்சாரம், இலங்கை குடியுரிமை இல்லாமல் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரியாக செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் காரணமாக கோத்தபாய தேர்தலில் பங்குபற்ற முடியாத நிலை உருவாகும். தமிழருக்கு எதிரான, முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு அஞ்சும் சிங்களவர் வாக்களிக்க இப்போது ஒரு முன்னாள் இராணுவ தளபதி இறக்கப்பட்டு இருக்கிறர். இந்த வாக்குகளில் பெருமளவிலனவை, இராஜபக்ச கட்சிக்கான வாக்குகளாகும். மிஞ்சிய வாக்குகளே இந்த கட்சியின் வேட்பாளராக இறங்க போகும் பசில் அல்லது சாமலுக்கு கிடைக்கும். மைத்திரி சஜித்துக்கு ஆதரவளிப்பார். சந்திரிக்காவும் இறுதி நேரத்தில் சஜித்தை ஆதரிப்பார். அன்ன சின்னம் இவ்வாறாக சுதந்திர கட்சியின் ஆதரவையும் பெற்று கொள்ளும். முஸ்லிம்கள் ஏற்கனவே சஜித்துக்கு தமது ஆதரவை உறுதியாக்கி விட்டனர். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் ஆதரவை சஜித் பக்கம் ஏற்கனவே திருப்பி விட்டார். கூட்டமைப்பும் இறுதியில் சஜித்துக்கே ஆதரவளிக்கும். சஜித்தின் வெற்றி நிச்சயம். இது அமெரிக்க அரசின் திட்டமிடல் வளங்களை கொண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தின் சாயலை கொண்டுள்ளது.

5 hours ago, Jude said:

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் ஆதரவை சஜித் பக்கம் ஏற்கனவே திருப்பி விட்டார். கூட்டமைப்பும் இறுதியில் சஜித்துக்கே ஆதரவளிக்கும். சஜித்தின் வெற்றி நிச்சயம். இது அமெரிக்க அரசின் திட்டமிடல் வளங்களை கொண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தின் சாயலை கொண்டுள்ளது.

கோத்தாவின் ஆதரவை திசை திருப்ப மகேஸ் களம் இறக்கப்பட்டுள்ளார் என பொதுவாக நம்பப்படுகின்றது. 

ஆனால், மகேசை கோத்தாவே இறக்கியிருக்கலாம்? கடைசி நேரத்தில், கோத்தாவிற்கு வாக்களிக்க இவர் (மகேஸ்) கூறி விலகலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கோத்தாவின் ஆதரவை திசை திருப்ப மகேஸ் களம் இறக்கப்பட்டுள்ளார் என பொதுவாக நம்பப்படுகின்றது. 

ஆனால், மகேசை கோத்தாவே இறக்கியிருக்கலாம்? கடைசி நேரத்தில், கோத்தாவிற்கு வாக்களிக்க இவர் (மகேஸ்) கூறி விலகலாம்.   

கோத்தபாய தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் எப்படி அவருக்கு வாக்களிப்பது?

நேற்று 

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1.jpg

இன்று 
 

IMG_5719.jpg

(செ.தேன்மொழி)

அரசியலினால் இலங்கை பாழ்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியிருக்கும் ஓய்வுப்பெற்ற இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சுயாதீனமான சக்தியொன்று தேவையென வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அவரை அறிவிப்பதற்கான நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தன்னிடம் புத்தி ஜீவிகளும் சிவில் சமூக அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக முன்வந்திருப்பதையும் இலங்கைக்கு மாற்று சக்தியொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே என்றும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட்டில் இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்ற அவர் இராணுவத்தில் இருந்துக் கொண்டு சிறந்த சேவையை நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கியதாகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் காமின் நந்த குணவர்தன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமையாளர் டாக்டர் அனுரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், நிபுணர்கள், ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர். 

https://www.virakesari.lk/article/65843

கொலைக்கள மார்ஷல் சரத் பொன்சேகா போன்று இன்னொருவர் அரசியல் களத்தில் இறங்க முயற்சிக்கிறார்.

மகேஷின் வரவு ஒரு புதிய கிளையை திறந்து விட்டுள்ளது.

தமிழர் தலைமைகள் இவர் வரவு, அதன் உள் நோக்கம் பற்றி ஆராய வேண்டிய தேவை உள்ளது. இவர் வெல்ல மாட்டார், ஆனால் யாரின் வாக்குகளை பிரிப்பார் என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவது நன்று.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.