Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோத்­தா­வுடன் பேசு­வதில் என்ன நியாயம்? - கஜேந்­திரன் கேள்வி

Featured Replies

IMAGE-MIX.png
 

(தி.சோபிதன்)

மஹிந்த -மற்றும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வினர் இன அழிப்பை செய்­த­வர்கள் என்­பதால் அவர்­களை வெற்றி பெறச்செய்­யக்­ கூ­டாது என்று கடந்த காலங்­களில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இப்­போது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வு­டன் ­பேசு­வதில் என்ன நியாயம் இருக்­கின்­றது எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செயலர் செ.கஜேந்­திரன் இது­வ­ரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்­பா­டு­க­ளையும் இப்போது எடுத்­தி­ருக்­கின்ற நிலைப்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்­டு­மெனவும் கோரி­யுள்ளார்.

யாழ். கொக்­கு­விலில் உள்ள கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம் மாலை நடத்­திய ஊடக சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

gajenderan.jpg

இவ்­வி­டயம் தொடர்­பாக அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஜனா­தி­பதித் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென நாங்கள் தற்­போது கூறு­கின்­றது கோத்­த­பா­யவை வெல்ல வைப்­ப­தற்கு என சிலர் எம் மீது குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். தேர்­தலை பகிஷ்­க­ரிப்­ப­தென்ற எங்கள் நிலைப்­பா­டுகள் நாங்கள் யாரை­யும்­ ஆ­த­ரிப்­ப­தாக அல்ல. இத் தேர்தல் பூகோளப் போட்­டியை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நலன்­களின் அடிப்­ப­டை­யில் ­தமிழ்த் தேசத்தை அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென்­பதே எங்கள் நிலைப்­பாட்டு கோரிக்­கை­யாகும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் இந்தத் தேர்­தலில் எத்­த­கைய முடி­வு­களை எடுப்­பது என்­பது தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையே பல்­வே­று­பட்ட வாதப்­பி­ரதி வாதங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.அதிலும் இத் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, யாரை ஆத­ரிப்­ப­தில்லை, பொது வேட்­பா­ளரை நிய­மிப்­பது, தேர்­த­லை ­ப­கிஷ்­க­ரிப்­பது என்­பது குறித்­தான கருத்­துக்கள் பர­வ­லாகப் பேசப்­பட்டு வரு­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலை­மையில் சில கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­வித்தும் இருக்­கின்­றன.

இந் நிலையில், தமிழ்த் தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவுடன் பேச இருப்­ப­தாக செய்­திகள் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. அதா­வது கோத்த­பாய தரப்­பினர் கூட்­ட­மைப்பை சந்­திக்க கேட்டிருந்­த­தா­கவும் ஆனாலும் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து மஹிந்த ராஜ­பக் ஷ­வோடு பேசு­மாறு கூறி­ய­தா­கவும் அதற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள ஏற்­பா­டுகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கி­ன்றன.

கோத்த­பாய ராஜபக் ஷவும் மஹிந்த ராஜ­பக் ஷவும் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை கட்­ட­விழ்த்து விட்­ட­வர்கள் என்­பதால் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவை ­தோற்­க­டிப்­ப­தற்­காக மகாத்மா காந்தி, நெல்சன் மண்­டேலா அல்­லது மார்டின் லூதர் சிங் என்று சொல்லி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெல்ல வைக்­கின்ற நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இந்த இடத்திலிருக்­கின்ற கேள்வி என்ன­வென்றால் இன­ அ­ழிப்பை செய்­த­வர்கள் மஹிந்த மற்றும் கோத்­த­பாய என்­று­கூ­றி­ய­வர்கள் இப்­போது கோத்­த­பா­ய­வுடன் பேசு­கின்­றார்கள் என்றால் அதில் என்ன நியா­யம் இருக்க முடி­யும்­ என்­பது தெரி­ய­வில்லை.

தமிழ் மக்­களின் நலன்­களின் அடிப்­ப­டையில் தமிழ்த் தேசத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தமிழ்த் தேசத்­திற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். 

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்.
 

  • தொடங்கியவர்
17 minutes ago, ampanai said:

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்

இதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் ? 

29 minutes ago, ampanai said:

ஜனா­தி­பதித் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென நாங்கள் தற்­போது கூறு­கின்­றது கோத்­த­பா­யவை வெல்ல வைப்­ப­தற்கு என சிலர் எம் மீது குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்க கோருவது கோத்தாவை வெல்ல வைக்க என நானும் கருதுகிறேன். 😀

29 minutes ago, ampanai said:

இந்த இடத்திலிருக்­கின்ற கேள்வி என்ன­வென்றால் இன­ அ­ழிப்பை செய்­த­வர்கள் மஹிந்த மற்றும் கோத்­த­பாய என்­று­கூ­றி­ய­வர்கள் இப்­போது கோத்­த­பா­ய­வுடன் பேசு­கின்­றார்கள் என்றால் அதில் என்ன நியா­யம் இருக்க முடி­யும்­ என்­பது தெரி­ய­வில்லை.

1) அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என மக்களுக்கு காட்டுவதற்கு.

2) மகிந்த & கோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐதேக இடம் பெரிய பணப்பெட்டியை பெற்றுக்கொள்ளலாம்.

3) அல்லது அமெரிக்கா, இந்தியா சொல்லி பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அதை பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? நீங்கள் தேர்தலை பகிஷ்கரிக்க கோருவதும் கோத்தாவை வெல்ல வைக்க தானே?

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ampanai said:

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்.

யாரப்பா அந்த சக்திகள் ....?
கஜேந்திரா ..கஜேந்திரா ...
முடிந்தால் கோத்தாவை தடுத்து நிறுத்த போராடுங்கள், இல்லை வெளிப்படையான ஆதரவை தெரிவித்து காய்களை நகர்த்துங்கள் ...இப்படி மொள்ளமாரித்தனம் செய்து தமிழர்களை நட்டாத்தில் கொண்டுபோய் விட்டது போதும்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

யாரப்பா அந்த சக்திகள் ....?
கஜேந்திரா ..கஜேந்திரா ...
முடிந்தால் கோத்தாவை தடுத்து நிறுத்த போராடுங்கள், இல்லை வெளிப்படையான ஆதரவை தெரிவித்து காய்களை நகர்த்துங்கள் ...இப்படி மொள்ளமாரித்தனம் செய்து தமிழர்களை நட்டாத்தில் கொண்டுபோய் விட்டது போதும்  

சவுக்கடி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.