Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) சற்றுமுன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர், வாகரை, தொப்பிகல முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன்.

சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை. ஆனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றிகளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

நான் இராணுவத்தளபதியாக இருந்த போது, மாதம் நாலாயிரம் பேரை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி படையை பலப்படுத்தினேன். யாரும் எப்படியும் மோதலில் ஈடுபடலாமென கோத்தாபய நினைத்தார். ஆனால் மோதல் நடக்கும் இடத்தில் இடத்தை சுருக்கி பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளை கொல்லாமல் இடங்களை பிடிப்பதில் அர்த்தமில்லை. நேரகாலம் குறிப்பிட்டே நான் பயங்கரவாதிகளின் இடங்களை கைப்பற்றினேன்.

ரை, கோட் அணிந்து கோத்தாபய உத்தரவிட்டால் படையினர் அதற்கேற்றபடி செயற்பட மாட்டார்கள். தளபதி ஒருவர் சொன்னால் தான் செய்வார்கள். அது தான் நடந்தது. எனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்கினால் நான் அதனை திறம்பட செய்வேன். வெளிநாடுகளுடன் தேவையற்ற ஒப்பந்தங்களை செய்யமாட்டேன் – என்றார்.

https://newuthayan.com/?p=8134

"சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை."

அவைதான் போர்க்குற்றங்கள் ?

ஆனால், இவர் உயிர்த்த ஞாயிறு அரச விசாரணைக்குழுவில் உள்ளார் 😞 

'பயங்கரவாதிகளை அழிப்பதற்காகவே யுத்தம்; கோட்டா அறியாமல் பேசுகிறார்’

நிலத்தை மீட்கும் நோக்கில் தான் யுத்தம் செய்யவில்லை என்றும் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே தான் திட்டங்களை வகுத்து யுத்தத்தை வழிநடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,“முன்னதாக நிலத்தை மீட்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடன் எமது இராணுவத்தினர் யுத்தம் செய்து நிலத்தை கைப்பற்றினர். எனினும், பின்னர் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தி இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். இவ்வாறான நிலையில், நிலத்தை மீட்கும் நோக்கில் யுத்தம் செய்து அதனை மீண்டும் இழப்பதைவிட, பயங்கரவாதிகளை முழுமையாக அழித்தால் மாத்திரமே மீட்கப்படும் நிலத்தை பாதுகாக்க முடியும் என்று நினைத்தேன்”என்றார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தை வலுப்படுத்த முடிந்தமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது. 35 ஆயிரம் விடுதலை புலிகளில் யுத்தத்தின்போது 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர்.” என்றார்.

“இராணுவத்தில் இணைந்து 35 வருடங்கள் கடமையாற்றியதால் பாதுகாப்பு தொடர்பான தெளிவான விளக்கம் எனக்கு உண்டு. ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு இல்லை. 20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணம் என, கூறி இராணுவத்தில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

“யுத்தம் தீவிரமடைந்த 15 வருடங்கள் அவர் விடுமுறைக்கு கூட நாட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. நாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூட வெளியிடவில்லை. தனது சகோதரர் ஜனாதிபதியான பின்னர் நாடு திரும்பி பாதுகாப்பு செயலாளராகிவிட்டார்.

“யுத்தத்தை பாதுகாப்பு செயலாளரான தானே வழிநடத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது தவறான விடயம்.  யுத்தத்தை நானே வழிநடத்தினேன். மாற்று திட்டங்களை வகுத்து யுத்தத்தை வெற்றிக்கொள்ள போராடினேன. 

“யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ ஒரு முறை மாத்திரமே ஆலோசனையொன்றை கூறினார். எனினும், அவர் கூறிய விடயத்துக்கு தேவையேற்படாத நிலையில் அதனை செய்யப்படுத்த அவசியம் ஏற்படவில்லை. 

“யுத்தத் திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். பாதுகாப்பு சபை கூட்டங்களில் கூட முழுமையான விடயங்களை கூறவில்லை. அவ்வாறு கூறினால் ஊடகங்களில் வெளிவந்து திட்டம் சீர்குலைந்துவிடும். ஒரு வாரத்துக்குரிய விடயங்களை மாத்திரம் நான் தெளிவுப்படுத்தினே்.

“இராணுவத்தினருக்கு கூட எனது நோக்கம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை தெரியாது. நாங்கள் வழங்கிய உத்தரவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் திட்டங்களை வைத்திருந்து செயற்படுத்தியமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள எம்மால் முடிந்தது.

" 5 இலட்சம் படைவீரர்களை கொண்டு யுத்தத்தை நடத்தியதாலேயே வெற்றிப்பெற்றதாக கோட்டாபய இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளார். உண்மையில் அவ்வளவு வீரர்கள் எம்மிடம் இருக்கவில்லை. நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற போது, 1 இலட்சத்து 10 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். அதனை நான் இரண்டு இலட்சமாக அதிகரித்தேன். கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார். 

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தன் மீது நம்பிக்கை வைத்து பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

“அவ்வாறு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் நிலையை நிச்சயமாக நான் உருவாக்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பயஙகரவதகள-அழபபதறககவ-யததம-கடட-அறயமல-பசகறர/150-240164

  • கருத்துக்கள உறவுகள்

இவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது.

சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள். 

ஒரு பக்கம் மகிந்த அண்ட் கோ, தாங்கள் தான் நாட்டை பாதுகாக்கும் வல்லமை படைத்தவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்ட முனைகிறார்கள். அதற்கு கோத்தா, அவரின் கடந்த கால 'வரலாற்றை' முன்னிலை படுத்த முனைகிறார். அதை சாதாரண சிங்கள மக்களாலும் உள்வாங்க முடிகின்றது. இந்த தலைப்பில் கோத்தாவும் பேசும் 'வல்லமை' கொண்டவராகவும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது 'இலகுவானவராகவும்' காணப்படுகின்றார். (மற்றைய கேள்விகளுக்கு தடுமாறுகின்றார் போலுள்ளது). 

இதை சிங்கள மக்கள் மனதில் நன்றாக பதியமுன் சஜித் தரப்பு சரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்றும், தங்களாலும் பாதுகாப்பை 'உறுதிப்படுத்த' முடியும் என காட்ட முனைகிறார்கள். 

இதனால், தேர்தல் அரங்கத்தில் யார் தமிழர்களை அதிகம் கொன்றவர்கள், அழிக்கக்கூடியவர்கள் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.   

இந்த வாதம் தொடர்ந்தால், சில மறைக்கப்பட்ட  உண்மைகள்  சிலவேளைகளில் வெளிவரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அசையும் பொருளின்... இசையும் நானே!

ஆடும் படையின் நாயகன் நானே!

நான் அசைந்தால்..,அசையும் ஆமி எல்லாமே..!

அறிவாய் கோத்தா...!

உன் ஆணவம் பெரிதா?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2019 at 3:08 AM, ampanai said:

. கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார்.

அடேங்க அப்பா இவ்வளவு தொகை படையை வைத்து இலங்கையில்   ஒரு மூன்றாம் உலகப் போரையே நடத்தி முடித்து  விட்டார்கள் போலிருக்கிறதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.