Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வல்வெட்டித்துறையில் பதட்டம் வங்கி முகாமையாளரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வல்வெட்டித்துறையில் பதட்டம் வங்கி முகாமையாளரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

யாழ் வல்வெட்டித்துறையில் பதட்டம் வங்கி முகாமையாளரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.11 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.வங்கி முகாமையாளரின் மனைவி ஆசிரியர். முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவையாளர். அவரும் அங்கிருந்து கடமைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள் அங்கு கூடியுள்ளனர்.

வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகவும் அவர்கள் பயணித்த ஜீப் வாகனமும் அங்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்துக்கு வடமராட்சிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று காலை வருகை தந்தானர். அவரிடம் தனது வீட்டுக்குள் சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவுடன் வருமாறு வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு சென்றுள்ளார்.வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முகாமையாளரின் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகத் தெரிவித்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)23

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-வல்வெட்டித்துறையில/

15 hours ago, கிருபன் said:

தனது வீட்டுக்குள் சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவுடன் வருமாறு வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சொறிலங்காவின் போலீஸ் சிவில் உடையில் திரிவதால், சட்டவிரோதமாக மக்களின் வீடுகளுக்குள் நுழைவதால் அவர்கள் சொறிலங்காவின் போலீஸ் காடையர்கள் என அழைக்கப்படுவது பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

சொறிலங்காவின் போலீஸ் சிவில் உடையில் திரிவதால், சட்டவிரோதமாக மக்களின் வீடுகளுக்குள் நுழைவதால் அவர்கள் சொறிலங்காவின் போலீஸ் காடையர்கள் என அழைக்கப்படுவது பொருத்தமானது.

இவ்வளவிற்கும்... பொலிஸார்  தேடி வந்த வாகனம் அது அல்ல என்றும், 
பொலிஸாரின் கடமைக்கு... ஊறு  விளைவித்தமையால், 
இரு சகோதரர்களை, கைது செய்துள்ளார்களாம். :shocked:

யாழில் வங்கி முகாமையாளர் வீட்டில் பொலிஸார் நள்ளிரவில் சோதனை – இருவர் கைது!

IMG_4291-720x450.jpg

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றின் முகாமையாளரின் துணைவியின் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொண்டைமானாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை வங்கி ஒன்றின் முகாமையாளரின் வீட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

எனினும் பொலிஸார் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸார் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் பயணித்த ஜீப் வாகனம் குறித்த முகாமையாளரின் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாம் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர்.

அத்துடன் இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

01-1.jpg

http://athavannews.com/யாழில்-வங்கி-ஒன்றின்-முக/

8 hours ago, தமிழ் சிறி said:

எனினும் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாம் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர்.

அதெப்படி ஒரு ஜீப்பை வீட்டுக்குள் ஒளித்து வைக்க முடியும்?

சிங்கள-பௌத்த நீதிதுறைப் பயங்கரவாதம் சொல்லும் செய்தி தமிழீழ தனிநாடே தமிழர்களுக்கு நியாமான ஒரு குறைந்தபட்ச தீர்வைத் தரும் என்பதையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.