Jump to content

யுத்த காலத்தின் போதே கிழக்கில் ஜிஹாத் குழுவினர் செயற்பட்டனர் - பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஹிஜாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா இன்று சாட்சியமளித்தார்.  

குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறு பட்டதாக  காணப்பட்டது என அவர் இதன்போது கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் இன்று வியாழக்கிழமை 4 ஆவது நாளாக நடைபெற்றது.

இந் நிலையில் 3 ஆவது சாட்சியாளராக  கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் திலீப் திவாகர டி சில்வா சாட்சியளித்தார்.  

இதன்போதே  அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கும் ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த வண்ணம்  அவர் இந்த சாட்சியத்தை பதிவு செய்தார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்  இன்று முற்பகல் 11.35 மணி முதல் மேற்படி 4 ஆம் நஆள் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகின.

இதன்போது  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற முன்பு, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பட்ட  தேசிய தெளஹீத் ஜமாத் தலைவர் மொஹம்மட் சஹ்ரானினால் தர்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை தகவல் அடங்கிய உளவுக் கடிதம், உரிய முறையில் தன்னால் கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்தி உள்ளிட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் ஆவணங்கள் பல்வற்றை மையப்படுத்தி சாட்சி வழங்கினார்.

https://www.virakesari.lk/article/68484

Link to comment
Share on other sites

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ரிசார்ட் , ஹிஸ்புல்லா எல்லோருமே ஜிஹாதில் இருந்தவர்கள்தான். இவர்கள்தான் யுத்த காலத்தில் கிழக்கில் தமிழ் பெண்களை மானபங்கம் செய்து , வாலிபர்களை கடத்தி கொலை செய்தவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது அமைச்சர்கள் , ஆளுநர்கள் , அரச திணைக்கள தலைவர்களாக இருக்கிறார்கள். கிழட்டு தமிழ் தலைமைகள் தெரிந்து தெரியாயது போல இருக்கிறார்கள். எல்லாவற்றிட்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு தூங்கிவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

3 minutes ago, Vankalayan said:

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ரிசார்ட் , ஹிஸ்புல்லா எல்லோருமே ஜிஹாதில் இருந்தவர்கள்தான். இவர்கள்தான் யுத்த காலத்தில் கிழக்கில் தமிழ் பெண்களை மானபங்கம் செய்து , வாலிபர்களை கடத்தி கொலை செய்தவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது அமைச்சர்கள் , ஆளுநர்கள் , அரச திணைக்கள தலைவர்களாக இருக்கிறார்கள். கிழட்டு தமிழ் தலைமைகள் தெரிந்து தெரியாயது போல இருக்கிறார்கள். எல்லாவற்றிட்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு தூங்கிவிடுவார்கள். 

சிங்களவனுக்கும் நல்லா தெரியும்.
ஆனா அவங்களும் பேசாமதானே இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.