Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதி கோட்டபாய அவர்களை நோக்கி – வாழ்த்தும் கோரிக்கைகளும்!

Featured Replies

இலங்கையின் ஏழாவது சனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதும் தெற்கின் பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மக்களின் மனநிலையை காட்டும் இலங்கை சனாதிபதித் தேர்தல் 2019 வரைபடம், பல சேதிகளை சொல்லியுமுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளின் உதவியுடன் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றது. எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, இறுதியுத்த மீறல்கள் தொடர்பான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முதலியவை தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நிறைவு பெறாத நிலையே காணப்பட்டது.

எவ்வாறெனினும் வடக்கு கிழக்கு மக்கள் இம்முறையும் அதிகப்படியான வாக்களிப்பில் ஈடுபட்டதுடன் தமது முடிவிலும் ஒன்றுபட்டு காணப்படுகின்றனர். 2009 ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்கு தெளிவாக வழிகாட்டும் தலைமை ஒன்று காணப்படாத போதும்கூட, மக்கள் தம் முடிவில்  உள ரீதியான ஒற்றுமையில் தொடர்ந்தும் ஒன்றுபட்டே பயணிக்கின்றனர்.

தமிழ் மக்களின் இந்த முடிவையும், அவர்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் இலங்கையின் ஒவ்வொரு சனாதிபதியும் புரிந்துகொள்ளாமலே காலம் கடந்து வருகின்றது. இதுவே இலங்கையின் வரலாறாகவும் இனச் சிக்கலுக்கான காரணியாகவும் தொடர்கின்றது. தமிழ் மக்களின் வாக்குக் கைகொடுப்பினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனகூட இவ்வாறே தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.

ஈழத் தமிழ் மக்களை அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் ஏமாற்றுதல்களாலும் கடந்துவிடவே இலங்கையின் ஒவ்வொரு சனாதிபதியும் தீர்மானித்துப் பயணிக்கின்றனர். இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் நிராகரிக்கின்றார்கள் என்பதை இலங்கை சனாதிபதி ஒருவர் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டாலே இலங்கைப் பிரச்சினை தீரும்.

அத்தகையதொரு சந்தர்ப்பத்தை இலங்கையின் புதிய சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு வரலாறு வழங்கியுள்ளது. தமிழர்கள் இந்த தேர்தல் முடிவின் வாயிலாகவும்கூட தெளிவான கோரிக்கையை இலங்கை சனாதிபதியிடத்தில் விடுத்துள்ளனர். கடந்த 2005இல் புதிய சனாதிபதியாக பதவியேற்றவருக்கு ஒரு சந்தர்பத்தை தமிழர் தேசம் அன்று வழங்கியது. ஆனால் அந்த வாய்ப்பு தூக்கி வீசப்பட்டு, இலங்கையில் பாரியதொரு இன அழிப்பில் முடிந்தது வரலாறு. அது தொடர்பான வாதங்களும் பிரச்சினைகளும் இன்னமும் எரியும் நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு சவால் நிறைந்த ஒரு பயணத்தையே வரலாறு தொடக்கி விட்டுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்சியை தொடர இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும். கடந்த காலத்தில் நெகிழ்ச்சியாயிருந்த சர்வதேசத்தின் கரங்களும் இதனை வலியுறுத்தவே செய்யும்.

அத்துடன் 2009இல் இலங்கைத் தீவில் நடைபெற்ற போர், வரலாறு முழுவதும் தேர்தலையும் அரசியலையும் தீர்மானிக்கும் என்பதையே இந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் துணிந்து கூறியுள்ளனர். இதனை புதிய ஜனாதிபதியும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுவே தமக்கு வாக்களித்த பெரும்பான்மையின மக்களுக்கு மாத்திரமின்றி, அவருக்கு வாக்களிக்காதுவிட்ட சிறுபான்மையின மக்களுக்கும் அவர் சனாதிபதியாக இருக்கப் போகின்றாரா என்பதற்கு விடையளிக்கும் விடயமாகும்.

மக்களின் ஊடகங்கள் சனநாயகத் தீர்ப்புக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழலில், தமிழர்கள் சனநாயக ஆயுதம் கொண்டே போராட வேண்டிய நிலையில் உள்ளனர். அதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அத்துடன் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டு வாழும் தமிழ் மக்களின் சனநாயக வெளிப்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், தமிழ் மக்கள் உரிமையுடன் நிம்மதியாக வாழும் யுகம் திரும்ப வேண்டும் என்பதையும் மக்களின் ஊடகம் என்ற வகையில் வலியுறுத்துகிறது தமிழ்க்குரல்.

– தமிழ்க்குரல் ஆசிரியர்பீடம்

http://thamilkural.net/?p=9777

4 hours ago, கலையழகன் said:

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு சவால் நிறைந்த ஒரு பயணத்தையே வரலாறு தொடக்கி விட்டுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்சியை தொடர இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும். கடந்த காலத்தில் நெகிழ்ச்சியாயிருந்த சர்வதேசத்தின் கரங்களும் இதனை வலியுறுத்தவே செய்யும்.

அவ்வாறு செய்தால் இந்த நாடு மீண்டும் அபிவிருத்தி, சுபீட்ஷம், ஒற்றுமை கண்டு மீண்டும் ஆசியாவின் ஒரு முன்னேற்றகரமான நாடாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்து விட்டது சைக்கிளில் இருந்து கூத்தமைப்பு தொடங்கி மகிந்தவின் அல்லக்கை சிவாஜிலிங்கம் வரை பணம் பெட்டி பெட்டியாய் இரு பெரும் கட்சிகளிடமும் வாங்கி குவித்து விட்டனர் வழக்கம் போல் அங்குள்ள மக்கள்  மக்கள் அடுத்து என்ன என்று சோலியை பார்க்க கிளம்பி விடுவார்கள் தமிழர்  தீர்வு மட்டும் கானல்நீர் ஆகிடும் . தீர்வு தமிழருக்கு கிடைத்தால் பெட்டி எப்படி வேண்டுவதாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கோத்தவை நிராகரிக்க..

தமிழ் அரசியல் கட்சிகளும்.. சில தமிழர் அமைப்புக்களும்.. கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்லுகின்றன.

உண்மையில்.. இது கோத்தா மீதான பயத்திலாக இருக்கலாம்... அல்லது பண பக்தியாக இருக்கலாம்.

மக்கள் கோத்தாவின் அகோரத்தாண்டவத்தையே கண்டுவிட்டதால்.. கோத்தாவின் வரவை இட்டு அஞ்சியதில்லை.

ஆனால்.. தமிழ் அரசியல் வாதிகளும்.. சில தமிழர் அமைப்புக்களும்.. சில தமிழ் தனிநபர்களும்..  தங்கள் பொக்கட்டை நிரப்ப.. தங்களின் எதிர்காலம் தப்ப.. தேர்தலுக்கு முன் கோத்தாவை தூற்றியவர்களும்.. இப்பொழுது வாழ்த்துகிறார்கள்.

யதார்த்தத்தில்.. கோத்தா.. தமிழ் மக்களின் வாக்குகளையே நிராகரித்த ஒருவர். தமிழ் மக்கள் மீது இனவாதப் பார்வை செலுத்திய ஒருவர். ஏன் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஒரு இனப்படுகொலையாளன். தமிழ் மக்கள் மீது சாட்சியமற்ற ஒரு போரைத்திணித்து.. தமிழ் மக்களை அழித்த ஒரு போர்க்குற்றவாளி. 

அவருக்கு தமிழ் மக்கள் தெளிவாகத் தம் எதிர்ப்பை பதிந்த பின்னும்.. உந்த தமிழ் அரசியல்  மற்றும் பிற தமிழ் அல்லக்கைகள் மட்டும் எதற்கு வாழ்த்த வேண்டும்.

கோத்தா மன்னிப்புக்கு இடமளிக்கப்பட முடியாத ஒரு போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளன்.

அதற்கான தண்டனையை அவர் பெறுவதே.. நீதி தர்மமாகும். அதைச் செய்ய வக்கில்லாத சம் சும் மாவை கும்பல்.. தமிழரசுக் கட்சி சார்ப்பில் தேர்தலுக்கு முன் கோத்தாவின் வெற்றி குறித்து இகழ்ந்துவிட்டு.. இன்று.. வெற்றி பெற்ற பின்.. அறிக்கை விட்டு வாழ்த்துவது கேவலமாகும். அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

இவர்கள் வாழ்த்தித்தான் கோத்தா சிங்கள சனாதிபதியாகனுன்னு ஒன்றும் கிடையாது. 

மொத்தத்தில்.. வட கிழக்கு தமிழ் மக்கள் அரசியல்வாதிகளை விட தெளிவாக இருக்கிறார்கள்.. அரசியலில் மற்றும் சிங்கள அரசியல் வாதிகள் தொடர்பில். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.