Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தை செல்வா, தளபதி அமிர்... தீபாவளிச் சம்பந்தர் எனலாமா?

Featured Replies

எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.


தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது கேள்விக்குரியதே. 

இவை ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் முதுமையின் பாதிப்புகளைக் கடுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பதால்; அவரை உதாசீனம் செய்து கூட்டமைப்பை ஒரு கூத்தாடி அமைப்பாக மாற்றி, தமிழினத்தையே கேவலப்படுத்துகின்ற நடவடிக்கைகள் நடந்தாகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கூட்டமைப்பிடம் கையளித்திருப்பது சரியா? என்பதைத் தமிழ் மக்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இதை நாம் கூறுவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான காழ்ப்புணர்வன்று.

மாறாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் கொடுக்கக்கூடாது என்று தமிழ் மக்கள் கூற, இல்லை கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது கூட்டமைப்பின் தலைமை.

இதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு வழங்கும் போதெல்லாம் நிபந்தனை விதித்து தமிழ் அரசியல்கைதிகளை விடுவியுங்கள் என்றால், இல்லை நிபந் தனை விதிக்க முடியாது என்றார்கள். இன்று நிலைமை என்னவாயிற்று.

இந்த நிலைமை ஏற்படும் என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் அறிந்திருக்கையில், கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகள் மட்டும் அதை உணராமல் இருந்தது எதற்காக என்ற கேள்விக்குப் பதில் தரமுடியுமா?

ஒரு நாட்டின் அரசியல் மாற்றங்களை மதிப்பிட முடியாதவர்களைத் தமிழினம் தலைமை யாகக் கொள்ளுமாயின் அது இன்னமும் ஈனப்படுவதற்கேயன்றி வேறில்லை.
இறுதியாக அடுத்த தீபாவளிக்குத் தீர்வு என்று நான்கு தீபாவளிகள் உச்சரித்த இரா. சம்பந்தர் இனி என்ன சொல்லப் போகிறார்.

தீபாவளிக்குத் தீர்வு என்று அவர் அடிக்கடி கூறியதற்காக அவரை தீபாவளி சம்பந்தர் என்று அழைக்க முடியுமா என்ன?

ஆக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன் முதுமையை உணர்ந்து தக்க தலைவரை அறிமுகப்படுத்துவதே அவர் தமிழ் இனத்துக் குச் செய்யும் உதவியாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19875&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்


அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

 

அமிதாலிங்கம் ஏன்  இதட்குள் வருகிறார் ?  அதட்குள் "தளபதி " என அடைமொழி வேறா  ?? 

தளபதி என்றால் போர்க்களத்தில் (போராட்ட ) முன் நின்று வழிநடாத்தியல்லோ இருக்கவேண்டும்  ? 

பிறரின் ரத்தத்தில் தங்கள் நெற்றியில் திலகமிடுவதுதானா ஒரு தளபதியின் வீரம்  ? 

பிறரின் கையில் துப்பாக்கியை கொடுத்து அவனை தமக்காக பலிகொடுத்ததுதான் இந்த தளபதிகள் செய்தது.  

பிரபாகரன் பிறந்த மண்ணில்தான் இவர்களை போன்றவர்களும் பிறந்தார்கள். 

இதுதான் எமது அதிஸ்டமும் துரதிஸ்டமும்.

 

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

தீபாவளிக்குத் தீர்வு என்று அவர் அடிக்கடி கூறியதற்காக அவரை தீபாவளி சம்பந்தர் என்று அழைக்க முடியுமா என்ன?

தலைவனாக காட்டிக்கொள்வது இலகு.  

மக்கள் போற்றும்  தலைவனாவது  கடினம்  !

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

நல்லதொரு கட்டுரையை.... அமிர்தலிங்கத்தின்ரை, பெயரை போட்டு கெடுத்து விட்டார்கள். 
இதற்குள்... தள(ர்)பதி  என்று அடைமொழி கொடுத்ததை பார்க்க கடுப்பாக இருக்கு. 😣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:


அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

 

அமிதாலிங்கம் ஏன்  இதட்குள் வருகிறார் ?  அதட்குள் "தளபதி " என அடைமொழி வேறா  ?? 

தளபதி என்றால் போர்க்களத்தில் (போராட்ட ) முன் நின்று வழிநடாத்தியல்லோ இருக்கவேண்டும்  ? 

பிறரின் ரத்தத்தில் தங்கள் நெற்றியில் திலகமிடுவதுதானா ஒரு தளபதியின் வீரம்  ? 

பிறரின் கையில் துப்பாக்கியை கொடுத்து அவனை தமக்காக பலிகொடுத்ததுதான் இந்த தளபதிகள் செய்தது.  

பிரபாகரன் பிறந்த மண்ணில்தான் இவர்களை போன்றவர்களும் பிறந்தார்கள். 

இதுதான் எமது அதிஸ்டமும் துரதிஸ்டமும்.

 

மிகவும் சரியான  கருத்து, மகாராஜா. :)

  • கருத்துக்கள உறவுகள்

ரப்பர் ஷெல் அமிர்தலிங்கம்.. குடுகுடுப்பை சம்பந்தன்.. இவை தான் இவர்களுக்கான யதார்த்த அடைமொழிகளாக இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அரசியல் ' தளபதியாகவே ' அமிர் அன்றைய தமிழர்களால் பார்க்கப்பட்டார். உசுப்பல் பேச்சுக்களால் இளையவர்களை ஆயுதம் தூக்க வைத்தவர் என்றும் கூறப்படுவார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.