Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்களின் மனங்களை வென்றது போல் தமிழ் மக்களின் மனங்களையும் வெல்லவேண்டும் - யாழ்.இந்து சமயப் பேரவை

Featured Replies

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி தமிழ்மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என யாழ்.இந்து சமயப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது

indhu_samaya_peravai.jpg

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் இலட்சோப இலட்ச வாக்குகளைப் பெற்று இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை எமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் அமோக வாக்கினைச் செலுத்தி ஜனாதிபதியாக தெரிவு செய்து வரலாற்றில் அழியாத புகழை தாங்கள் பெற வழிசெய்துள்ளார்கள்.

எனினும் இத்தகைய சாதனை படைத்த தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது போனமை தாங்கள் தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இந்நாட்டில் தொடர்ந்து பேரை முடிவுக்குக் கொண்டுவந்த பெருமை தங்களுக்க உண்டு என்பதை யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. 

போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாங்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்து ஓர் தீர்வை முன்வைத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியாது போனமை துரதிஷ்டவசமானதே தாங்கள் தீர்வினை முன்வைக்காத காரணத்தினால் தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது அவர்கள் தமது உணர்வை வெளிப்படுத்தியருப்பதாகவே தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகின்றோம். 

ஆதலால் தாம் பதவி ஏற்றிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களின் நீண்டகாலப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி தமிழ்மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

தாங்கள் பதவிக்காலம் முடிந்த பின்னர் பின்வரும் ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் அணிதிரண்டு வாக்களிக்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தாங்கள் துணிந்து பயணிக்கவேண்டும் என மனதாரக்கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/69645

4 minutes ago, ampanai said:

சிங்கள மக்களின் மனங்களை வென்றது போல் தமிழ் மக்களின் மனங்களையும் வெல்லவேண்டும் - யாழ்.இந்து சமயப் பேரவை

தமிழரைக் கொன்று சிங்களவர் மனதில இடம் பிடிச்ச மாதிரி, சிங்களவரைக் கொன்று தமிழர் மனதில இடம் பிடிக்க வேணும் என்று சொல்லீனமோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காலத்திலும் இவர்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது. இவர்கள் எப்படி புகழ்ந்தாலும், சிங்களவனின் மனமும் மாறாது அதற்கு அவர்கள் தகுதி ஆனவர்களும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

மானங்கெட்டவர்கள் ******** சமயப்பெயரில் சங்கம் நடாத்தி தங்களது பெண்டில் பிள்ளைகளுக்கு ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். மாவையர் என்னவென்றால் இருதய சுத்தியுடன் வந்தால் பேசத்தயார் எனக்கூறுகிறார் இவர்கள் இப்படிக்கூறுகிறார்கள். தமிழர்களில் சில மலம் தின்னிகள் அவரை நேரடியாகவே ஆதரித்து வெடிகொழுத்துகினம். 

சிங்களவர் அவர்களது சிங்கள் இராசாவைத் தெரிவுசெய்திட்டினம் தமிழர்கள் அவருக்கு யார் அதிகமாகக் கூழைக்கும்பிடு போடுவது எனப் போட்டி போடுகினம்.

இதில் மாவையரோ சம்பந்தரோ சுமந்திரணோ சுரேசரோ கஜேந்திரகுமாரோ விக்கியரோ சித்தார்த்தணோ, இவர்களில் யாரும்  இந்தப்போர்க்குற்றவாளியை சிறையில் தள்ள  முதலில் நாம் ஒற்றுமைப்படவேண்டும் என எந்தவிதக் கரிசனையுமில்லாது நாங்களும் தலைவர்கள் எனத் திரிகிறார்கள்.

புலம்பெயர் தேசத்துப் புலிவால்கள் எனக்கூறிக்கொள்ளும் அனைத்துக்குழுக்களும் இப்போதாவது ஒற்றுமையாக வந்து மேற்கூறியவர்களை ஒரு ஒருமித்த அரசியல் செயல்திட்டத்தின் பின்னால் அணிதிரளவும் எனக்கூற நாதியில்லாது இருக்கிறார்கள்.

கடந்துபோன சிறீலங்காவுக்கான அதிபர்தேர்தலில் தமிழர்தரப்பு தங்களுக்கான ஒரு பொது வேட்பாளரைத் தெரிவுசெய்து சர்வதேச போர்க்குற்றவிசாரணையுடன் கூடிய தமிழர்கான விடுதலை எனும் அறைகூவலுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கொத்தா அப்போதும் வென்றிருப்பான் ஆனால் எமது வேண்டுகோள் எதுவென உலகுக்கு நாம் உரத்துக்கூறியிருக்க முடியும் அதாவது எமது தரப்பில் ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பாக கடந்துபோன சிறீலங்காவுக்கான அதிபர் தேர்தலை மாற்றியமைத்திருக்கக்கூடும். 

வடக்குக்கிழக்குத் தமிழரும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையும் சம்பந்தர் சுமந்திரன் மாவையரிடம் மூளையை அடகு வைத்துவிட்டு கொட்டாவி விடுகுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.