Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்

Featured Replies

  • தொடங்கியவர்

சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் ; கோரிக்கையை நிராகரித்த நீதிவான்

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கட்மையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியரின் வெளிநாட்டு பயணத் தடையானது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரை விஷேட மானசீக வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன விஷேட உத்தரவொன்றினைப் பிறப்பித்தார்.

குறித்த பெண்ணின்  மன நிலை  தொடர்பில் பரிசோதனை ஒன்று முன்னெடுப்பது அவசியம் என  பெண் சட்ட வைத்தி அதிகாரி  மன்றுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே , கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  

இதேவேளை, மேற்படி பெண் அதிகாரி சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை சி.ஐ.டி.யினர்  சுவிட்சர்லாந்து தூதுவரின் இல்லத்துக்கு வருகை தந்து பதிவு செய்ய உத்தரவிடுமாறு அப் பெண்ணின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்வைத்த கோரிக்கையையும் நீதிவானால் நிரகாரிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/70940

On 12/9/2019 at 10:41 PM, ampanai said:

இலங்கையின் நீதி, நீதிமன்றம், நீதிபதிகள் மீது சுவிஸ் அரசு (வேறு வழியில்லாத காரணத்தால் )  நம்பிக்கை  வைத்துள்ளதாக தெரிகின்றது.

 

பெயரை பகிரங்கப்படுத்தி விட்டார்கள். சுவிஸ் அரசு அவரின் குடும்ப உறவுகளையும் பொறுப்பெடுக்கவேண்டும்.

Sriyalatha Perera ஒரு சிங்கள பெண் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். ஆரம்பத்தில் தமிழ் பெண் என்றுதான் கருதி இருந்தார்கள். இல்லாவிடடாள் இந்த காவிகளே முன்னின்று பல போராட்டங்களை கொண்டு சென்றிருப்பார்கள்.

இருந்தாலும் இந்த கடத்தல் விவகாரம் நாட்டுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணியுள்ளதால் இதட்கு ஒரு முடிவை காண போராடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎12‎/‎2019 at 2:54 AM, கற்பகதரு said:

முதலில், இது கோத்தாவின் கட்டளையின் கீழ் நடந்ததாக இருக்காது. அவர் ஜனாதிபதியான பின், உண்மையில் நாட்டை சிறப்பான முறையில் ஆட்சி செய்ய விரும்புவதை பேச்சிலும், செயலிலும் காட்டி இருக்கிறார்.

இரகசிய பிரிவு தாமாக, தன்னிச்சையாக செயற்பட்டு இருக்க கூடூம். அவர்களுக்கு தேவையானது தகவல்களே அன்றி இவரின் கொலையல்ல. ஆகவே, பயமுறுத்திவிட்டு விட்டுவிட்டார்கள். 

அரசின் கவனத்துக்கு வந்த பின்னர், அரசு சி.ஐ.டி.யை வைத்து அனைத்தையும் பொய்யாக்க முயல்கிறது.

அவவின் கடத்தல் நாடகத்திற்கு பின்னால் யூ என்பி தான் இருக்குது .. அவ சுவிஸ் எம்பசியிக்கு தெரியாமல் இதில் ஈடு.பட்டு இருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் அவசரப்பட்டு இதில் இறங்கி இருப்பார்கள் ...இப்ப அவவை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று கதைக்கினம்.
அல்லது மற்றவர்கள் சொல்வது மாதிரி சுவிஸ் எம்பசிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம். 
ஏதாவது ஒன்றிற்காக கோத்தாவை அடி பணிய அல்லது திசை திருப்ப இப்படி செய்திருக்கலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவவின் கடத்தல் நாடகத்திற்கு பின்னால் யூ என்பி தான் இருக்குது .. அவ சுவிஸ் எம்பசியிக்கு தெரியாமல் இதில் ஈடு.பட்டு இருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் அவசரப்பட்டு இதில் இறங்கி இருப்பார்கள் ...இப்ப அவவை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று கதைக்கினம்.
அல்லது மற்றவர்கள் சொல்வது மாதிரி சுவிஸ் எம்பசிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம். 
ஏதாவது ஒன்றிற்காக கோத்தாவை அடி பணிய அல்லது திசை திருப்ப இப்படி செய்திருக்கலாம் 
 

இன்னொரு கோணமும் இருக்கிறது:

பாதாள உலகத்தை வைத்து வேறு பின்னணி (யு.என்.பி. யும் சம்பத்தப்பட்டு இருக்கலாம்.) இவவை உண்மையில் கடத்தி இருக்க கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இன்னொரு கோணமும் இருக்கிறது:

பாதாள உலகத்தை வைத்து வேறு பின்னணி (யு.என்.பி. யும் சம்பத்தப்பட்டு இருக்கலாம்.) இவவை உண்மையில் கடத்தி இருக்க கூடும். 

இருக்கலாம் 
 

  • தொடங்கியவர்

’சுவிஸ் தூதரக சம்பவம் நடைபெறாத ஒன்று'

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என்பது, விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அலைபேசி தரவுகளின் ஊடாகவும் அவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றிருக்கவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனது ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்று கோரிக்கை விடுக்கும் பொறுப்பு குறித்த  தூதரகத்துக்கு இருந்தது. பிரதமர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியரின் ஒத்துழைப்பு தேவை” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-சமபவம-நடபறத-ஒனற/150-242521

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.