Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

 

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான  பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும்  மார்ச்  கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரி­வித்தார்.

GL-peris.jpg

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசிய கட்­சியை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உதவி புரிந்த சர்­வ­தேச அமைப்­புக்கள், மேற்­கு­லக நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வித­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணை­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி வகித்த முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும், பாரா­ளு­மன்­றத்­திற்கும் அறி­விக்­காமல் பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு தான்­தோன்­றித்­த­ன­மாக இணக்கம் தெரி­வித்தார்.

ஜெனிவா   மனித உரிமை பேர­வையில்  இலங்கை அர­சாங்கம் பொறுப்பு கூறலை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை கிடை­யாது.  ஏனெனில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் சர்­வ­தே­சத்தில் எமது நாட்டு இறை­யாண்­மை­யினை காட்டிக் கொடுப்­ப­தா­கவே கரு­தப்­படும்.எமது நாட்­டுக்கு முற்­றிலும் மாறுப்­பட்ட வித­மா­கவே பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­றது.

பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  எவ்­வ­கையில் அழுத்­தங்­களை சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து பிர­யோ­கித்­தாலும் அது பய­ன­ளிக்­காது. எந்த உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்தும்  புதிய அர­சாங்கம் தோற்­று­விக்­கப்­ப­ட­வில்லை. என்­பதை அனை­வரும் புரிந்துக் கொள்ளல் அவ­சி­ய­மாகும்.

நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களில் இருந்து அர­சாங்கம் விலகிக் கொள்ளும்  நிலைப்­பாட்­டிலே அர­சாங்கம் உள்­ளது.  மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/70703

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

Edited by ragaa

இவர் ஒரு படித்த முடடாள். அரசாங்கம் நினைத்தவுடன் எல்லா தீர்மானங்கள்,  உடன்படிக்கைகள்  எல்லாவற்றையும் மீறலாம் எண்டு அரசுக்கு ஆலோசனை கூறுபவர்  இவர்தான். செய்ய முடியாது என்றில்லை. இருந்தாலும் இவர்கள் இதெட்கெல்லாம் பாரிய  விலை  கொடுக்க நேரிடும். உழைப்புக்காக வரும் அரசியல்வாதிகள் உழைத்து விட்டு போகிறார்கள். 

6 minutes ago, ragaa said:

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

சுமந்திரன் ஜி எல் பீரிஸைவிட சிறந்த அறிவாளியா? இல்லை சுமந்திரன் அந்தளவு உலக நாடுகளில் செல்வாக்கு மிக்கவரா? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பகுடிக்காக சொன்னேன்

8 minutes ago, ragaa said:

நான் பகுடிக்காக சொன்னேன்

இல்ல  அடிக்கடி எல்லோரும் சம், சும் எண்டு கனக்க எழுதுறார்கள். நான் நினைத்தேன் அவர்கள்தான் இந்த ஈழம் , சமஷடி கிடைக்காம தடை செய்கிறார்கள் எண்டும் அவர்கள் இல்லாவிடடாள் இதெல்லாம் எங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்குமெண்டு. வேற ஒன்னும் இல்லே அண்ணே.

"" மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்."" 

 

தலைமை  தாங்கும் பிரித்தானியாவும் அதன் ஊடாக அமெரிக்காவும் இந்தியாவும் தான் முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் சிங்களத்தை கொண்டுவர விரும்பினால் மட்டுமே அழுத்தங்களை பிரயோகிப்பார்கள். 

சீனாவும் பாகிஸ்தானும் சிங்களத்திற்கு தம்மாலான உதவிகளை செய்வார்கள். 

மேற்குலத்தை புறக்கணித்து சீனாவுடன் கைகோர்த்து பயணிக்க சிங்களம் முனைவதாக அதன் புதிய வெளிவிவகார கொள்கை இருக்கின்றது.

கொழும்பின் புதிய நில உருவாக்கம் அதில் சீன முதலீடுகள் என்பன புதுடெல்லி மற்றும் மேற்குலத்தை மறுத்து தம்மால் 'சுதந்திரமாக' பயணிக்க முடியும் என சிங்களம் நம்புவதாக காட்டுகின்றது.
 

On 12/9/2019 at 1:54 PM, ragaa said:

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் பொறுப்பை ஏற்றுள்ள போர்க்குற்றவாளிகள் தங்கள் இனவழிப்பு வேலைகட்கு சுமந்திரன் கடந்த 10வருடங்களாக உதவியதைப் போலவே தொடர்ந்தும் உதவுவாரா என்று அறிய அவரை தனியே அழைத்து சிலதரம் கதைத்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.