Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து! வெளிவரும் உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து! வெளிவரும் உண்மைகள்

குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டீ சில்வா இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவிதந்துள்ளார்.

இலங்கையை தமது இராணுவ தளமாக செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டும் ஒன்றிணைந்தே இந்த சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் நாடகத்தை முன்னெடுத்துள்ளன என சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம், இலங்கையில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறினார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

அதற்கான இராணுவ மத்திய தளமாக இலங்கையை பயன்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். பல நாடுகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் இலங்கையில் காணப்படுவதால் அமெரிக்கா இவ்வாறான வேலைகளை செய்கிறது.

அதனை சாதிக்கவே அமெரிக்கா முயல்கிறது. எனவே இவ்வாறான அழுத்தங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொடுத்து வருகிறது. இந்த அரசாங்கத்தோடு விளையாட முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தோடு இவர்களுக்கு வேண்டிய மாதிரி விளையாடினார்கள்.

யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதனை நிரூபிக்க தேவையான ஆவணங்களை இவர்கள் சேமிக்கிறார்கள்.

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும்.

நிஷாந்த டீ சில்வா நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரை நாம் தேடுவதை நிறுத்தி எமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த வெள்ளை வான் சம்பவம் அரங்கேற்றப்பட்த்துள்ளது.

இதுவரை ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளையும் நாம் சமாளித்தோம்.

ஆனால் எமக்கு வரும் பாரிய சிக்கலானது இனிவரும் காலங்களில் நிஷாந்த டீ சில்வாவின் மூலமே வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/uk/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

 

2 hours ago, பெருமாள் said:

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும்.

தமராவில் கலந்திருக்கும் சிங்கள இரத்தம்,  சிங்களத்தைக் காப்பாற்றத் துடிக்கிறது.

தமராவில் கலந்திருக்கும் குணநாயகம் என்ற தமிழ் இரத்தம் அவரை உண்மை சொல்லவும் வைக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

நுணலும் தன் வாயால் கெடும் 

சுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு!

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தினை திசைதிருப்பும் நோக்கத்திலேயே தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என்று குறிப்பிட்ட ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம் அவ்வாறு திசைதிருப்பும் செயற்பாட்டில் அமெரிக்கா பின்னணியில் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

இந் நிலையில் தமரா குணநாயகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி டேவிட் ஜேமெக்குவயாரிடத்தில் வினவியது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மைப்பொறுத்தவரையில் இந்தவிடயத்துடன் அமெரிக்கா எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. 

சதி ஊகக் கருத்துக்களை உருவாக்குவதானது இந்த விடயத்தினை சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்ட வகையில் தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்றார்.

இதேவேளை ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது, சுவிஸ் தூரதர பெண் ஊழியர் கடத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக குறித்த உழியரிடத்தில் நமது நாட்டு விசாரணையாளர்களே கலந்துரையாடி விசாரணைகளை பெறவேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாது சுவிஸ் தூதரே கடத்தப்பட்ட பெண் ஊழியருடன் உரையாடுகின்றார். அது தவறான முன்னுதராணமாகும். அத்துடன் முறைப்பாடு இன்றி அவருடைய பெயர் வெளிப்படாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றனர். 

மேலும் கடத்தப்பட்டவர் எங்கிருக்கின்றார் என்றோ, பெயர் குறிப்பிடாதோ எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது. இது அவர்களின் நாடல்லவே. இந்த நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் சுவிஸ்தூதரக ஊழியரின் கடத்தல் சம்பந்தமாக சுவிஸ் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்கத்தின் வெளியீடுகள் எவையும் அங்கு உள்வாங்கப்படவில்லை. வெள்ளைவான் கலாசரத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷவே உள்ளார் என்றே சித்தரிக்கப்படுகின்றது. 

ஆகவே அவ்வாறான கதையொன்றை மீண்டும் உருவாக்குவதற்கே முயற்சிக்கப்படுகின்றது. ஓரவரை கடத்தும் குற்றச்செயலை புரிவதென்றால் வெள்ளைவானைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லையே கறுப்பு, சிவப்பு நிறத்திலான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியுமல்லவா? சுவிஸ் தூதரகத்தின் அறிக்கையிலும் வெள்ளை வேன் என்று கூறப்பட்டிருக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டள்ள நிலையில் ராஜித சேனாரத்ன மட்டுமே வெள்ளை வான் என்று கூறுகின்றார். அவருக்கு எவ்வாறு அந்த விடயம் தெரிந்துள்ளது. அப்படியென்றால் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது என்றார்.

அத்துடன், நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுவிஸ் தூதரகம் உரிய விசா நடைமுறையை பின்பற்றியுள்ளதா என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமரா, சனிக்கிழமையே விசா அனுமதி பெற்று மறுதினமான ஞாயிற்றுக்கிழமையே அவர் வெளியேறிவிட்டார். 

சதாரணமாக சுற்றுலா விசா பெறுவது என்றால் கூட எமக்கு ஆகக்குறைந்தது இருவாரங்கள் தேவைப்படும். வுங்கிக்கணக்கில் நிலுவை காண்பித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. அவ்வாறிருக்க ஒரேநாளில் நிஷாந்தவுக்கு விசா கிடைத்தமையானது ஆச்சரியமான விடயமாகும். அவ்வாறு அவசரமாக விசா வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

பலத்த சவாலுக்கு மத்தியில் நிஷாந்த சில்வாவை இந்த நாட்டிலிருந்து அனுப்புவதற்கு சுவிஸ் தூதரத்திற்குள்ள தேவைப்பாடு தொடர்பில் குறிப்பட்ட அவர், இந்த விடயத்தில் அமெரிக்காவும் பின்னணியில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது

இராணுவத்தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது. ஏமது நாட்டிலிருந்து இந்தியா, சீனா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். ஏன் தாக்குதல்களை கூட நடத்தலாம்.

ரஷ்யாவையும் கட்டுப்படுத்தலாம். ஆதனைவிடவும் அமெரிக்காவிடத்தில் விண்வெளியில் முகாம் அமைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் உள்ளது.

அதற்குரிய கனிமங்கள் எமது நாட்டின் பூமிக்கடியிலும், கரையோரத்திலும் காணப்படுகின்றது. அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவனது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிப்பதற்கு முனைகின்றது. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கத்தினால் அளிக்க முடியாது என்ற மனநிலை காணப்படுகின்றது.

ஆகவே தான் சுவிஸ் போன்ற நடுநிலை நாடுகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா செயற்பட விளைகின்றது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிஷாந்த சில்வாவின் வெளியேற்றம், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் ஆகியவை தொடர்பில் இராதந்திரி என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்ட தமரா, போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் நாம் மனித கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. 

ஆதற்கான சாட்சி ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் சேகரித்து வருகின்றார்கள். நிஷாந்த சில்வாவிடத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டமையால் மூலோபய ஆவணங்கள் அனைத்தும் அவரிடத்தில் உள்ளன. ஆதனைவிடவும் அவர் 1500இற்கும் மேற்பட்ட கைரேகை அடையாளங்களையும் விசாரணைகளின்போது பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆவர் எடுத்துச் சென்ற ஆவணங்களை எதிர்வரும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆகவே இந்த விடயங்களிலிருந்து எம்மை திசை திருப்பும் முகமாகவே ஊழியர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர் கடத்தல் விவகாரம் இடம்பெற்றதும் பாரதூரமான விடமான நிஷாந்த சில்வாவில் வெளியேற்ற நிகழ்விலிருந்து நாம் திசைதிருப்ப பட்டுள்ளோம். 

ஆகவே ஊழியர் விடயத்தினை விடவும் நிஷாந்த சில்வாவினால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71064

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.