Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடியாணை பெற்று ராஜிதவை கைது செய்ய ஆலோசணை

Featured Replies

பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக  சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/71728

 

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய,  ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர்  ஜெனரல்  திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.பி. நெலும்தெனிய இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனனள-அமசசர-ரஜதவ-கதசயயமற-படயண/175-242948

ராஜிதவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு வைத்தியசாலையில் அனுமதி?

Rajitha-Senarathna-1.jpg

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைவான் கடத்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ராஜிதவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 6ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொலை, வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய விவகாரத்தில் இருவரை சி.ஐ.டி. கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

அந்த விவகாரத்தில் கைதான இருவரும் அவர்கள் ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களை திருத்தி மீளக் கூற முற்பட்டால் உண்மையிலேயே வெள்ளை வானில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அச்சுறுத்தியதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. நீதிமன்றிற்கு அறிவித்தது.

இது குறித்த விசாரணைகளை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அசங்கவின் கீழ் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே ராஜித சேனாரட்ன தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மூன்று முன் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் அவை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜிதவை கைத செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கைது-உத்தரவு-ராஜிதவிற்க/

  • தொடங்கியவர்

" முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன".

அண்மையில் பி. சிதம்பரம் உட்பட, தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் அரசியல் சாசனத்தில் இது எழுதப்படாத விதி. 

  • தொடங்கியவர்

தலைமறைவாகினாரா ராஜித? ; தீவிர தேடுதலில் சி.ஐ.டி.யினர்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. 

rajitha.jpg

எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று ராஜித்த சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான  சி.ஐ.டி.யின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/71787

  • கருத்துக்கள உறவுகள்

ராஜித எங்கே? வலை வீசி தேடும் சீ.ஐ.டி

ராஜித எங்கே? வலை வீசி தேடும் சீ.ஐ.டி

வெள்ளை வான் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தங்கியிருக்கலாம் என நம்பப்படும் வீடுகளுக்கு சென்று பொலிஸார் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
கொழும்பிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லம் , களுத்துறை மற்றும் வாதுவை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று அவரை தேடியுள்ளனர்.
எவ்வாறாயினும் எந்த வீட்டிக்கும் அவர் வரவில்லையென வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் மேலும் பல இடங்களில் அவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் அவர் எங்கு தங்கியுள்ளார் என யாருக்கும் தெரியாதிருப்பதாகவும் அவரின் குடும்பத்தவர்களும் தெரியாது என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

 

http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/ராஜித-எங்கே-வலை-வீசி-தேடு/

  • தொடங்கியவர்

நீதிவானின் உத்தரவுக்கு எதிராக ராஜித மனுத் தாக்கல்!

தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன நீதிதமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

 

வெள்ளை வேன் விவகார ஊடகவியலாளர் சந்திப்பை மையப்படுத்தி குற்றப் புலனயவுத் திணைக்களம் தன்னைக் கைதுசெய்ய முன்னர்,  முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு  கோரி முன்னாள் அமைச்சரும்  ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில் அவரது முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டு, சட்ட மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தில் 25 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான்  ஆர்.பி. நெலும்தெனிய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். 

இதன் பின்னர் ராஜிதவை கைதுசெய்வதற்காக குற்றப்ப புலனாய்வுப் பிரிவினர் அவரது வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை.

இந் நிலையிலேயே இன்றைய தினம் ராஜித சேனாரத்ன தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி சட்டத்தரணியூடாக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/71810

பிடியாணையை இரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்தல் பத்திரம் சில மணி நேரங்களில் வாபஸ்!

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று நகர்த்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  

தன்னை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள  விசாரணைக்கு எடுக்குமாறு கோரி இந்த நகர்த்தல் பத்திரம் ராஜித்தவின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு  சில மணி நேரங்களில் மீளப் பெறப்பட்டது. 

இந்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் ராஜித்தவின் சட்டத்தரணிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் விளைவாகவும், ராஜித்தவை நீதிமன்றில் ஆஜர்செய்வது தொடர்பான உறுதியற்ற தன்மையும்  இந்த நகர்த்தல் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் ராஜிதவின் சட்டத்தரணிகள் குழாமின்  சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்வதற்கு சி.ஐ.டி  எனப்படும் குற்றப்புலனாய்வு  பிரிவினருடன்,எஸ்.டீ.எப் எனப்படும் விசேட அதிரடிப்படை களமிறங்கியுள்ளன.

அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மறைந்துள்ளதாக நம்பப்படும் இடங்களில் இன்று விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள்  அதிரடிபடை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம். ஆர்.லத்தீப்பின் நேரடி கண்காணிப்பில்  இடம்பெற்றதுடன் அதற்கான புலனாய்வு விசாரணை உதவிகளை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  நுவன் அசங்கவின்  வழிநடத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர்  ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழு  வழங்கியிருந்தது.

இந் நிலையில் ராஜித்த சேனாரத்னவின் கொழும்பில் உள்ள வீடு இன்று பிற்பகல் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சுமார் இரண்டரை மணிநேர  சோதனை நடவடிக்கைகள்  அப்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது ராஜித சேனாரத்னவை கைது செய்யவோ, அல்லது  அவர் இருக்கும் இடம்தொடர்பில்  தகவல் ஒன்றினை பெற்றுக் கொள்ளவோ சி. ஐ.டியினார் முடியாமல் போயுள்ளது. 

இதனை விட  ராஜித சேனாரத்னவிற்கு சொந்தமான பேருவளை ஹெட்டிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றும், புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. 

அங்கும் ராஜித சேனாரத்ன இருக்கவில்லை என  சி.ஐ.டி.யினர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71871

  • தொடங்கியவர்

ராஜித வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

rajitha.jpg

குற்றத்தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்த அவர் சற்றுமுன்னர் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/71881

  • கருத்துக்கள உறவுகள்

ராஜித்தவை கைது செய்யவில்லை; நீதிமன்றுக்கு அறிவிப்பு

image_66f2f86e4d.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (27) இதனை அறிவித்துள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (26) மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு  வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, ராஜித்த சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 24 ஆம் திகதி மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை என தகவல் வெளியானது.

அத்துடன், ராஜித சேனாரத்னவுக்கு சொந்தமான பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள வீட்டையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) மாலை சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது வீட்டிலிருந்த காவலாளியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீள அழைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில், மனுவொன்று நேற்று (26) தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரஜததவ-கத-சயயவலல-நதமனறகக-அறவபப/150-243077

ஏற்கனவே ஆளை உள்ள போட்டுட்டாங்களாம்!

  • தொடங்கியவர்

ராஜித்த சேனாரத்ன சி.ஐ.டி.யினரால் கைது!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியாசலையில் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு அனுதிக்கப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றினையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71918

ராஜித்த சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாத்னவை கண்காணிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் ஷலானி பெரேரா சற்று முன்னர் அங்கு சென்றுள்ளார்.

ராஜித்த சேனரத்னவுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது மேலதிக நீதிவானுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போதே மேற்கண்ட விடயங்களை கருத்திற் கொண்டு ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு நரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71932

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் வாயை திறக்கவே கூடாது 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.