Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக

இடம்: மேலப்பாளையம் ஜின்னா திடல்
நாள்: 29.12.2019

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடி, அமித் ஷா ஆகியோரைக் குறித்து சோலிய முடிச்சி விடுங்க என்று சர்ச்சைக்குரிய விதத்தில் SDPI கட்சி மாநாட்டில் கருத்துகளை பேசிய நெல்லை கண்ணன் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தர்ணா.

Bild

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

மோடி, அமித் ஷா ஆகியோரைக் குறித்து சோலிய முடிச்சி விடுங்க என்று சர்ச்சைக்குரிய விதத்தில் SDPI கட்சி மாநாட்டில் கருத்துகளை பேசிய நெல்லை கண்ணன் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தர்ணா.

Bild

ஆக... 12 பேர் மட்டும்தானா... போராடியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Nellai Kannan arrested for his comment on Amit Shah

மோடி, அமித் ஷா பற்றி சர்ச்சை பேச்சு.. நெல்லை கண்ணன் கைது.. பெரம்பலூர் விடுதியில் போலீஸ் அதிரடி

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த புகாரில் பிரபல தமிழ் அறிஞரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டம் ஒன்றில், சமீபத்தில், கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக ஆட்சேபிக்கதக்க கருத்தை பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரையும், ஒருமையில் விளித்து பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனரிடம் பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, நெல்லை கண்ணன் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரை கைது செய்ய காவல்துறை யோசித்து .

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று பெரும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர் தலைவர்கள் பங்கேற்றனர்.

விஷயம் பெரிதாகிக் கொண்டே போன நிலையில், காவல்துறை, நெல்லை கண்ணனை வலைவீசி தேடி வந்தது. அவர் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பெரம்பலூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் இன்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு நெல்லைக் கண்ணனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, ட்வீட் வெளியிட்ட எச்.ராஜா, நெல்லை கண்ணனுக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nellai-kannan-arrested-for-his-comment-on-amit-shah-372981.html

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2019 at 12:44 PM, விசுகு said:

 

தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக

இடம்: மேலப்பாளையம் ஜின்னா திடல்
நாள்: 29.12.2019

 

காணொளி எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்கடல் நெல்லை கண்ணன் கைது செய்யப்படும் காட்சி. பின்னால் இருந்து தாக்கும் காவிக்கும்பல்! இத்தனை கொடூரமாக எஸ்.வீ.சேகரைேயா எச்ச்.ராஜாவையோ கூட யாரும் கையாண்டதில்லை!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.

அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த நிலத்திற்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விடட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.

அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஸ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். எனது அடுத்த சந்ததிக்காக குரல் கொடுத்தேன். அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றேன். உன்னை கைது செய்யவேண்டும் என்கிறார்கள். சரி என்று சொல்பவர்களும் உள்ளார்கள் 😞 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.