Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா இனவாத கருத்துகளைக் கூறி ஒரு சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

81610430_2721790841240564_5218856955128315904_n.jpg?_nc_cat=111&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQmAz7vbJAKPvCCpy71PBYPgocEsuNJCDeQ3n8pIzV32b4XfF3sqnjPdZTZflRaVr9E&_nc_ht=scontent-lax3-2.xx&_nc_tp=12&oh=549309f2b88b72bbc98d8ab4c98ee671&oe=5EA2B0CA

நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்­லிம்­களில் கடந்­த­கா­லத்தில் சுமார் 200 க்குட்­பட்ட முஸ்­லிம்­களே

தீவி­ர­வா­தி­க­ளென்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தீவி­ர­வா­திகள் போன்று கரு­து­வதும், முஸ்­லிம்கள் புல­னாய்வுப் பிரிவின் உயர்­ப­த­வியில் இருக்­கக்­கூ­டாது என்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும், அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

 
புல­னாய்வுப் பிரிவின் முக்­கிய பத­வியில் முஸ்லிம் ஒரு­வரை நிய­மித்­துள்­ள­மைக்கு பாரா­ளு­மன்­றத்தில் தனது உரை­யின்­போது சரத் பொன்சேகா எதிர்ப்பு வெளி­யிட்­டமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு கருத்து வெளி­யிட்டார்.
 
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 
 
முஸ்லிம் சமூகம் தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துகள் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது 90 வீத­மான முஸ்­லிம்கள் அவரை ஆத­ரித்து வாக்­க­ளித்­தார்கள். அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக பத­வியில் இருந்த காலத்தில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­ப­தற்­கான அவ­ரது நகர்­வு­களில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் தமிழ் மொழி மூல­மான உரை­யா­டல்­களை ஒட்­டுக்­கேட்­ப­தற்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பொலி­ஸாரும், உளவுப் பிரிவு அதி­கா­ரி­களும் பெரிதும் உத­வி­யி­ருக்­கி­றார்கள்.
 
யுத்­தத்தை முடிப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் பக்­க­ப­ல­மாக இருந்­துள்­ளன என்­பதை சரத் பொன்­சேகா போன்­ற­வர்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது.
 
200 முஸ்­லிம்கள் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­மைக்கு முழு முஸ்லிம் சமூ­கமும் பொறுப்­பா­ன­தல்ல. இவ்­வா­றான நிலையில் நாட்டில் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் செயற்­பட்ட முஸ்­லிம்­களை, அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய முஸ்­லிம்­களை குற்றம் சுமத்­து­வதும் அவர்கள் பாது­காப்பு பிரிவில் உயர்­ப­த­வியில் இருக்­கக்­கூ­டாது எனத் தெரி­விப்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.
 
யுத்த காலத்தில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்த வர­லாறு உள்­ளது. அவர்கள் பலரைக் காட்­டிக்­கொ­டுத்த சம்­ப­வங்­களும் உள்ளன. அச்சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த மக்களும் அவர்களைச் சந்தேகித்ததில்லை. 
 
முதற்தடவையாக சரத் பொன்சேகாவே இவ்வாறு இனவாத கருத்துகளைக் கூறி ஒரு சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.
 
Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
  • கருத்துக்கள உறவுகள்

`இலங்கையின் புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியரா?`: சரத் பொன்சேகா ஆட்சேபம்

உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டுப் போர்க் காலத்தின் இறுதிக் காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் தமிழ் புலனாய்வு அதிகாரியொருவரை நியமித்திருந்தால் தமிழ் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியுமா என அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவிற்கும், அரச புலனாய்வு பிரிவிற்கும் தனக்கு நெருக்கமான அதிகாரிகளையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக சரத் பொன்சேகா குற்றச்சாட்டினார்.

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத பின்னணியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரே செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இடம்பிடிக்காமை பாரிய பிரச்சினை என சரத் பொன்சேகா கூறுகின்றார்.

ராணுவத்தில் இருந்தபோது பொன்சேகா.படத்தின் காப்புரிமை Getty Images Image caption சரத் பொன்சேகா - ராணுவத்தில் இருந்தபோது.

இந்த நிலையில், இன்று வீரர்களை போன்றும், பௌத்தர்களை போன்றும் பேசுபவர்கள், பிரபாகரன் இருந்த காலப் பகுதியில் வெளியில் கூட வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வருவதாக சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வாறு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், முதலில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், புலனாய்வுத்துறைக்கு தகுதியானவர்களை நியமிப்பதாக கூறி இருவரை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இவ்வாறு நியமிக்கப்பட்ட இருவரும் குறித்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வாறு புலனாய்வு பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு பேரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் பயங்கரவாதம் காணப்பட்ட காலப் பகுதியில், தமிழ் புலனாய்வு அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், முஸ்லிம் அதிகாரியொருவர் அரச புலனாய்வு பிரிவிற்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட முடியாது என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பொறுப்பான அதிகாரிகளை சரியான பதவிகளுக்கு அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என ஒன்று இல்லை - ரிஷாட் பதியூதீன்

''இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்" என நிரந்தரமாக முத்திரை குத்தப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ரிஷாட் பதியுதீன்படத்தின் காப்புரிமை ரஞ்சன் அருண்பிரசாத் Image caption ரிஷாட் பதியுதீன்

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற ஒன்று கிடையாது எனவும், இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவனோ ஒருவன் செய்த குற்றத்துக்காக இஸ்லாமியர்களை குற்றம் சொல்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றத்தை செய்தவர்களை தாம் முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளதாகவும், அவர்களை முழுமையாக இல்லாதொழிக்க தாம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலனாய்வுப் பிரிவிற்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தவறு என்ற விதத்தில் சரத் பொன்சேகா கருத்தை வெளியிட்டதை ரிஷாட் பதியூதீன் இதன்போது நினைவூட்டினார்.

சஹ்ரான் என்ற ஒரு நபர் செய்த குற்றத்திற்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற இவ்வாறான சிந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நாடு பிளவுப்படக்கூடாது எனவும், பயங்கரவாதம் தலைத்தூக்க கூடாது எனவும், நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-51049916

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, colomban said:

அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக பத­வியில் இருந்த காலத்தில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­ப­தற்­கான அவ­ரது நகர்­வு­களில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் தமிழ் மொழி மூல­மான உரை­யா­டல்­களை ஒட்­டுக்­கேட்­ப­தற்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பொலி­ஸாரும், உளவுப் பிரிவு அதி­கா­ரி­களும் பெரிதும் உத­வி­யி­ருக்­கி­றார்கள்.

 அப்போ சந்தோசமாக விதைத்ததை இப்ப கவலையோடு அறுங்கள்.  எல்லோர்க்கும் உதுதானப்பு நடக்கும் சம்பந்தப்பட்டவர்கள் தயாராய் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 அப்போ சந்தோசமாக விதைத்ததை இப்ப கவலையோடு அறுங்கள்.  எல்லோர்க்கும் உதுதானப்பு நடக்கும் சம்பந்தப்பட்டவர்கள் தயாராய் இருப்பது நல்லது.

அல்லா கொடுத்ததையே இல்லாமல் செய்யும் இவர்களுக்கு இதொன்றும் பெரிய விடயமல்ல. 😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.