Jump to content

மரணம் வரையில் அதிகாரத்தில் இருக்க ராஜபக்ஷ ஆட்சி மீண்டும் முயற்சி: ஹர்ஷன ராஜகருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்து அதன் மூலம் மரணம் வரையில் அதிகாரத்தில் இருக்கலாம் என்ற தீர்மானத்தை எடுப்பதற்கே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பயன்படுத்தப்பட்டதேயன்றி மக்களின் சேவைகளுக்காக அல்ல.

அதே போன்ற முயற்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

images__2_.jpeg


அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல்கலைகழக மாணவர்களுக்கு புலமை பரிசில் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து தீர்வு தருவதைப் போன்று ஊடகங்களுக்கு முன்னாள் பாசாங்கு காண்பிக்கின்றனர். உண்மையில் அந்த மாணவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் திட்டமிட்டு அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டன. அவர்களது நோக்கம் நிறைவேறிய பின்னர் தற்போது அமைதியாக இருக்கின்றனர்.

வாக்களிக்கதாவர்களும் நாட்டில் மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்கு பதிலாக முன்னரைப் போன்று குடும்ப ஆட்சியும் சகோதர நியமனங்களுமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரச திணைக்களங்களுக்கும் குடும்ப நியமனங்களே வழங்கப்படுகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/73175

Link to comment
Share on other sites

இவர் சொல்வது உண்மையாக இருந்தாலும் மக்களுக்கு வேறு வழி இல்லை। உங்களுக்கு ஒரு சரியான தலைமை இல்லை। தவறு செய்தவர்களை தண்டிக்கவில்லை। களவு மோசடிகளில் கையும் களவுமாக பிடிப்படிடீர்கள்। இப்போது உங்களின் உரையாடலால் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்க்கும்போது எப்படி நீங்கள் சடடத்தை வளைத்து நல்லாட்சி செய்தீர்கள் என்று தெரிகிறது। இன்னும் என்னென்ன வெளி வருமோ தெரியாது। எனவே மக்களுக்கு வேறு வழி இப்போதைக்கு இல்லை। நீங்கள் உங்களை நேர்மையானவர்கள் என்று நிரூபிக்கும் வரையும்  இதே நிலைமைதான்। அதட்காக இந்த ஆட்சி நல்லாட்சியோ , ஊழலற்ற ஆட்சி என்றோ அர்த்தமல்ல।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.