Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையா? தற்கொலையா?

Featured Replies

கொலையா? தற்கொலையா?

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர்.

அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள்.

தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது,

வூல்மர் ஆறு அடி ஒரு அங்குல உயரமுடையவர். 100 கிலோ கிராம் நிறை உடையவர். 50 வயது மதிக்கத்தக்க மனிதர்.

இப்படிப்பட்ட ஆஜானுபாகுவான மனிதரை ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்வது கடினம். கழுத்து எலும்பு முறிந்திருப்பதாக ஊடகங்கள் முதலில் கதைவிட்டன. கழுத்தை நெரித்துக் கொன்றால் கழுத்தில் காயங்கள் இருக்கும். ஆனால், கழுத்தில் ஏதும் காயங்கள் இல்லை என்று இந்தியாவிலிருந்து ஜமேக்காவில் பணி புரியும் சேஷையா எனும் மருத்துவர் கூறியிருக்கிறார். இவர் வூல்மரின் பிரேதப் பரிசோதனையின் பின் இதைக் கூறியிருக்கிறார்.

கழுத்து எலும்புகள் முறிந்தாலும் கூட அது தற்கொலையால் மட்டுமே வந்தது என்றும் கூற முடியாது.

அகோனைட் என்ற விஷத்தை அருந்தியதால்தான் இந்த மரணம் நடந்திருக்கலாம் என்று ஊர்ஜிதமாக ஜமேக்கா பொலிஸார் நம்புவதால் புலனாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அகோனைட் என்பது ஒருவகை மூலிகைச்செடியிலிருந்து கிடைக்கும் ஒரு வேதியல் பொருளாகும். இந்த மூலிகைச் செடி பாகிஸ்தானில் பரவலாக வளர்கிறது.

பாகிஸ்தானின் மிக முக்கிய நபர்கள் பலர். இதற்கு முன்பு இந்த விஷத்தை கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தானிய மற்றும் உலக ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன. ஆனால், இந்தக் கொலைகளைச் செய்த கொலையாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம் இந்த விஷத்தின் குணம் அப்படி.

இந்த அகோனைட் செடி வகையானது 250 இற்கும் மேற்பட்ட வகைகளில் வளர்கிறது. இது பூண்டு வகையான ஒரு செடியாகும். மண்ணில் மின்குமிழ் போன்ற ஒரு காயும், பிறகு அதிலிருந்து வேர், செடி, பூ என்று இந்தச் செடி இருக்கும். இந்தச் செடிக்கு மாங்உட் (MONKHOOD) அதாவது துறவிகளின் முக்காடு என்று செல்லப்பெயரும் உண்டு. இந்தச் செடியின் வேதிப் பொருளை அம்பில் தடவி ஓநாய்களைக் கொல்வதற்கு பயன்படுத்துவதால் இந்தச் செடியை வுல்ஃப்பேன் (WOLFBANE) என்றும் அழைப்பர்.

கிண்ண வடிவமான பூக்களை இந்தச் செடிகள் கொண்டிருப்பதால் இச்செடியை பட்டர் கப் (BUTTER CUP) குடும்ப வகை செடியைச் சேர்ந்தது என்றும் சொல்வர்.

நரம்புவலி, தலைவலிக்கு இந்தச் செடியின் சாறுகளைக் கொண்டு இன்னும் சீனா, செவ்விந்தியர்கள் போன்றே வைத்தியம் பார்க்கின்றனர்.

அதோடு இந்தச் சாறுகளைக் கொண்டு மூட்டுவீக்கம் (ARTHRITIS), கீழ்வாதம் (RHUEMATISM) போன்ற நோய்களுக்கும் இதை சிகிச்சையாக உலகம் பூராவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்காக வழங்கப்படும் ஒரு பொருளானது விஷமாக மாறுவதன் காரணமென்ன? அகோனைட் செடியின் வேர், இலை காம்புகளிலிருந்துதான் சிகிச்சைக்குத் தேவையான சாறுகள் எடுக்கப்படுவதுண்டு. இந்தச் சாற்றில் ஐந்தில் ஒரு கிராம் அளவை 60 சதவீத அற்கஹோலுடன் கலந்து சிகிச்சைக்கான மருந்தைத் தயாரிப்பர். இந்த அளவை மீறும்போது அந்தச் சாறு விஷமாகிறது.

அளவு மீறிய சாறான விஷத்தை அருந்தும்போது மூச்சுத் திணறலும் நாடி நிறுத்தமும் ஏற்படும். ஆனால், இந்த மூச்சுத் திணறல் விஷத்தால்தான் வந்ததா அல்லது வேறு காரணங்களால் வந்ததா என்று கண்டுபிடிக்க முடியாது. அதோடு சயனைட் மற்றும் மொர்குரி போன்ற விஷங்களைச் சாப்பிட்டு இறப்பவர்களை பிரேதப் பரிசோதனை செய்யும்போது அந்த விஷங்களை உடலிலிருந்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அகோனைட் விஷம் பிரேதப் பரிசோதனையில் தெரியாது. இதுவே மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. விஷமருந்து அறிஞர்களே வூல்மரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கை கழுவி விட்டனர்.

அகோனைட் விஷத்தைக் குடிப்பவர் சயனைட் குடித்த நபரைப்போல் உடனடியாக சாவதில்லை. ஆனால், அகோனைட் விஷத்தை குடித்தவர் ஒரு மணிநேரம் வரை சாதாரண மனிதர்கள் போலவே நடந்து கொள்வர். கடைசி நேரத்தில் மட்டுமே இந்த விஷம் நரம்புகளை இறுக்கி உடலுக்கு ஒட்சிசன் வருவதைத் தடை செய்யும்.

வூல்மர் கொலை முயற்சிக்கு உள்ளானால் ஃபோன் செய்யவோ, பக்கத்து ஆட்களைக் கூப்பிடவோ முயற்சிக்காதது இதனால்தான். கடைசி நிமிடத்தில் மாத்திரம் வாந்தி வரும். பிறகு மரணம்தான். கடைசி நிமிடத்தில் நெஞ்சு விரிவடைந்து இருதயத் துடிப்பு சடாரென நின்றுவிடுவதால்தான் இந்த மரணம் நிகழ்கிறது.

அகோனை சாற்றில் மூன்று விதமான வேதியல் பொருட்கள் உள்ளன.

1. அககோனிபைன் (ACONIPINE)

2. பென்சகோனைன் (BENZACONINE)

3. அகோனின் (ACONINE)

இந்த அகோனைட் விஷத்தைச் சாப்பிட்டவர்களுக்கு விஷ முறிவுக்கான மருந்துகளும் உண்டு. அவையாவன:

அட்ரோபைன் (ATROPINE)

டிஜிடலைன் (DIGITALINE)

அத்தோடு விஷ முறிவாக அற்கஹோலும் கொடுக்கலாம்.

வூல்மர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத, மருத்துவ கையாலாகாத தனத்தைக் கண்டு மருத்துவ உலகினரே ஆச்சரியப்பட்டுக் கிடக்கின்றனர்.

அகோனைட் விஷத்தை யாராவது வூல்மருக்குக் கொடுத்தனரா அல்லது வூல்மரே அளவுக்கு மிஞ்சிய அல்கனைட் விஷத்தை அருந்தினாரா என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

வூல்மர் தங்கியிருந்த ஹோட்டலில் 24 மணிநேரமும் ஓடக்கூடிய கமரா ஒன்று இருந்தது. இந்த கமராவும் ஹோட்டல் விறாந்தைகளில் யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதை மட்டுமே பதிவு செய்யும். ஹோட்டல் அறைகளில் யார் வந்தார்கள் யார் சென்றார்கள் என்பதை இந்த கமரா பதிவு செய்யாது.

வூல்மரின் மரணத்துக்கான கடைசித் துருப்பாக இந்த வீடியோ கமரா மட்டுமே ஜமேக்கா பொலிஸாரிடம் உள்ளது.

மருத்துவ உலகம் கைவிட்டதை கமரா வெளிச்சம்போட்டுக் காட்டுமா என்பதையே வூல்மரின் ஆவி நம்பியுள்ளது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா கதை விடுறீங்கள்? ஏற்கனவே இந்த கொலைவழக்கில ஒரு முக்கிய கிரிக்கெட் பெரும்புள்ளி சம்மந்தப்பட்டுள்ளார் என்று பொலிசே சொல்லி இருக்கு. இப்ப என்னடா என்டா இப்படி ஒரு கதை வருகுது.

வீடியோக் கமராவிலிருந்து படத்தை பார்ப்பதற்குள் வூல்மரின் ஆவி சாந்தியடைந்துவிடும்.

கொலையாளி யார் என அறிய முன் நாங்கள் போய்விடுவோம்..

என்னய்யா கதை விடுறீங்கள்? ஏற்கனவே இந்த கொலைவழக்கில ஒரு முக்கிய கிரிக்கெட் பெரும்புள்ளி சம்மந்தப்பட்டுள்ளார் என்று பொலிசே சொல்லி இருக்கு. இப்ப என்னடா என்டா இப்படி ஒரு கதை வருகுது.

இந்தை கேசை எடுத்தது நாம தான் தலை

:unsure:

  • தொடங்கியவர்

இந்தை கேசை எடுத்தது நாம தான் தலை

:unsure:

அதுதான் இந்த இழு இழுக்குது

அதுதான் இந்த இழு இழுக்குது

எப்படியாவது கண்டுபிடித்துவிடுவோம்

:unsure:

இந்தை கேசை எடுத்தது நாம தான் தலை

:unsure:

யார் சார்பா கேஷ் எடுதிருகிங்க கொலைகாரன் சார்பாவா இல்லை கொலை செய்யப்பட்டவர் சார்பாவா சொல்லவே இல்லை, கொலை செய்யப்பட்டவர் சார்பானா கண்டிப்பா கொலைகாரன் தப்பிசுடுவான் .

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது கண்டுபிடித்துவிடுவோம்

:unsure:

அது ரெம்ப சுலபம் ஜமுனா!! முதல்ல எப்படியாவது மாட்டை பிடித்துக் கட்டுங்கோ. கண்டு காலடியில வந்து நிக்கும். :):lol:

யார் சார்பா கேஷ் எடுதிருகிங்க கொலைகாரன் சார்பாவா இல்லை கொலை செய்யப்பட்டவர் சார்பாவா சொல்லவே இல்லை, கொலை செய்யப்பட்டவர் சார்பானா கண்டிப்பா கொலைகாரன் தப்பிசுடுவான் .

கொலை செயப்படவன் சாரிபில் அதுவும் எங்கள் அண்ணன் 007 எடுத்துள்ளார் பிறகு என்ன

:unsure:

அது ரெம்ப சுலபம் ஜமுனா!! முதல்ல எப்படியாவது மாட்டை பிடித்துக் கட்டுங்கோ. கண்டு காலடியில வந்து நிக்கும். :lol::lol:

மாட்டுக்கு இந்த கேசுக்கும் என்ன சம்மந்தம் பெரியப்பா

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.