Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்தது யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள்!

Featured Replies

jaffna-uni.jpg

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம்மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றபோதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை ஐரோப்பியரின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை.

எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும் .

நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

உலக ஒழுங்கில் சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை அரசுகளிடம் இருந்து காப்பாற்ற பல சட்டங்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்துள்ளன. அதன் ஆரம்பமாக 1949ம் ஆண்டு ஜெனீவா தீர்மானம் 49 கொண்டு வரப்பட்டிருந்தது.

அதன் தொடர்சியாக பல்கன் குடியரசுகளை முன் நிறுத்தி 1992ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் 780 ஆவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் படி இனச் சுதந்திரமானது இனப்படுகொலையின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் என்பவை இனப்படுகொலையாகவே அமைந்து காணப்படுகின்றது இத்தகைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாகும்.” என தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சுதந்திர-தினத்தை-கரிநாளா/

  • தொடங்கியவர்

சுதந்திரம் கிடைத்தப் பின்னரான கடந்த 72 ஆண்டுகளை மீட்டிப்பார்க்க வேண்டும் – பிரதமர்

20170508-facebook-Mahinda-Rajapaksa-720x450.jpg

சுதந்திரம் கிடைத்தப் பின்னரான கடந்த 72 ஆண்டுகளை மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 72ஆவது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வப்போது ஏற்பட்ட கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை நாட்டில் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை நாட்டிற்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதே தமக்கு முன்பாக உள்ள சவால் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொன்னான யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை சுதந்திர தினத்தில் மகிழச்சியுடன் தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சுதந்திரம்-கிடைத்தப்-பின/

  • தொடங்கியவர்

கொடிய சாத்தானின் பிடியிலிருந்த போதும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த சீன ஜனாதிபதி

625.300.560.350.160.300.053.800.500.160.90.jpg

கொடிய சாத்தானாக உருமாறிய கொரோனா வைரஸின் பிடியில் இருக்கும் நிலையிலும், இலங்கையின் சுதந்திர தினத்திற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நல்லுறவிற்கு அதிக முக்கியத்துவமளிக்கும் அதேவேளை, இருநாடுகளினதும் பரஸ்பர அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு இலங்கையுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் விரும்புவதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்திருக்கும் வாழ்த்துக் கடிதத்திலேயே சீன ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தில் சீன அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஆதரவு என்பவற்றின் அடிப்படையில் மிகநீண்டகாலமாக நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. தற்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு புதிய பரிமாணமொன்றை எட்டியிருப்பதுடன், இருநாடுகளும் புதிய வாய்ப்புக்களையும் எதிர்கொண்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு நாம் அதிக முக்கியத்துவமளிக்கும் அதேவேளை, இருதரப்பினதும் பரஸ்பர அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு இலங்கையுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் விரும்புகின்றோம்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களை ஆழமாக்கல், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்தல், சீனா - இலங்கை ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பித்தல் ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

இலங்கை செழிப்படைவதற்கும், இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் எமது வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/136410?ref=imp-news

  • தொடங்கியவர்

அபிமானமிகு நாடாக முன்னோக்கிச் செல்ல சுதந்திர தினத்தன்று உறுதிபூண வேண்டும் – சஜித்

Sajith-Premadasa.jpg

அபிமானமிகு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு சுதந்திர தினமான இன்று உறுதிபூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வாழ் மக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளனர். அதற்கமைய சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயெ இவ்வாறு குறிப்பிட்டார்.

இன, மத, குல, சாதி பேதமின்றி ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தேசத்தில் கௌரவம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/அபிமானமிகு-நாடாக-முன்னோக/

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Uni-6-720x450.jpg

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு – யாழ். பல்கலையில் கறுப்பு கொடிகள்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாதாதையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன், அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறும் நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-Uni-2-384x288.jpg

Jaffna-Uni-1-384x288.jpg

Jaffna-Uni-3-384x288.jpg

http://athavannews.com/சுதந்திர-தின-கொண்டாட்டங்/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலையில் கறுப்பு கொடி – பாதுகாப்பு ஊழியர்கள் அகற்றினர்…

February 4, 2020

01918-4-800x379.jpg

யாழ்.பல்கலை வாயிலில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன பல்கலை கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்நிலையில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிஇருந்தனர். அத்துடன் இன்றைய தினம் போராட்டங்களையும் நடாத்தினர்.

இந்நிலையில் யாழ்.பல்கலை கழகத்தினுள் இன்றைய தினம் காலை முதல் மாணவர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வளாக வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவர்களால் பல்கலை வளாகத்தின் வாயில் கதவுக்கு அருகில் கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன கட்டப்பட்டிருந்தன. அவற்றை சிறிது நேரத்தில் பல்கலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அகற்றி விட்டனர்.

01918-2-800x379.jpg

 

http://globaltamilnews.net/2020/136727/

கலைப்பீடம் ......மற்றைய பீடங்கள் எல்லாம் எங்கே .....????

10 hours ago, கிருபன் said:

யாழ்.பல்கலை கழகத்தினுள் இன்றைய தினம் காலை முதல் மாணவர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வளாக வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவர்களால் பல்கலை வளாகத்தின் வாயில் கதவுக்கு அருகில் கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகள் என்பன கட்டப்பட்டிருந்தன. அவற்றை சிறிது நேரத்தில் பல்கலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அகற்றி விட்டனர்.

ஈழத்து தமிழர்களுக்கு அவர்கள் நாட்டில் கொஞ்சமும் சுதந்திரம் இல்லை, சொறிலங்கா சிங்கள அரசு ஓர் அராஜக அரசு என்று தங்கட நடவடிக்கை மூலம் பகிரங்கமாக அறிவித்த யாழ் பல்கலைக்கழ நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.

அதோட எதிர் கருத்துக்களையும் கேட்பேன் என்று சொன்ன கோத்தபாய பச்சை பொய் சொல்றார் என்று வெளிப்படுத்தி அவர் முகத்தில கரியை பூசிய யாழ் பல்கலைக்கழ நிர்வாகத்தின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

On 2/4/2020 at 3:42 PM, Dash said:

கலைப்பீடம் ......மற்றைய பீடங்கள் எல்லாம் எங்கே .....????

ஏனைய பீடங்களும் கலைப்பீடத்தின் பின்னணியில் உள்ளன. 

ஜனாதிபதியின் பேச்சு வேறு, செயல் வேறு – சுதந்திர தின உரை குறித்து மனோ கருத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று கோலாகலமாக இடம்பெற்றன. இதன்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து ஆதவன் செய்தி சேவை முன்னாள் அமைச்சர் மனோவிடம் தொடர்புகொண்டு வினவியது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் கூறுகிறார்.

எனினும் தேசிய தினத்தில், நாம் கொண்டு வந்த தமிழில் தேசிய கீதம் பாடும் வழமையை மாற்றி தடை செய்திருக்கிறார்.

அதாவது, தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு தடை செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

பேசும்போது, தான் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என கூறுகிறார். ஆனால் நடைமுறையில் சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு, சிங்கள, பௌத்த நாடு என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், மிஸ்டர் பிரசிடென்ட்! நீங்கள் தடை செய்யுங்கள் ஆனால், ஏன் ‘எல்லோருக்கும் ஜனாதிபதி’ என்ற ‘பில்ட்-அப்’..?

எனவே முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார். இதை தமிழ் தலைமைகள் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூற மாட்டார்களா என்றே தமிழ் மக்கள் எண்ணுகின்றனர். தமிழ் மக்களின் மனசாட்சியாகவே நான் இங்கு எதிரொலிக்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்பத்தகத்திலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதியின்-பேச்சு-வேறு/

On 2/5/2020 at 1:08 AM, Rajesh said:

ஈழத்து தமிழர்களுக்கு அவர்கள் நாட்டில் கொஞ்சமும் சுதந்திரம் இல்லை, சொறிலங்கா சிங்கள அரசு ஓர் அராஜக அரசு என்று தங்கட நடவடிக்கை மூலம் பகிரங்கமாக அறிவித்த யாழ் பல்கலைக்கழ நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.

அதோட எதிர் கருத்துக்களையும் கேட்பேன் என்று சொன்ன கோத்தபாய பச்சை பொய் சொல்றார் என்று வெளிப்படுத்தி அவர் முகத்தில கரியை பூசிய யாழ் பல்கலைக்கழ நிர்வாகத்தின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

யாழ் பல்கலை நிர்வாகத்தை தூக்க போறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.