Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன்

 

      by : Litharsan

R.Saanakkiyan.jpg

தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரைநீக்க விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “அமரர்.கணேசலிங்கம் ஐயா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அத்துடன், பட்டிருப்புத் தொகுதி மக்கள் மட்டுமன்றி முழு மாவட்டத்திற்குமே சிறந்த அபிவிருத்திப் பணியினை மேற்கொண்டமையும் அனைவரும் அறிந்த விடயம்.

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்திருந்தாலும் பின்னர் அக்கட்சியினுடைய கொள்கையில் வெறுப்புற்று தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்திற்கொண்டு தமிழரசுக் கட்சியில் இணைந்து பயணித்தவர்.

அதுபோலவே, எனது அரசியல் பிரவேசம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக அறிமுகமாகியிருந்தாலும் அக்கட்சியில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது என அறிந்து பின்னர் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

2015இற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் நட்டாற்றில் துடுப்பிழந்த படகைப் போல் பயணித்து கொண்டிருக்கும் பட்டிருப்புத் தொகுதி மக்களுக்காக நான் தமிழரசுக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

கணேசலிங்கம் ஐயாவின் அரசியற் பிரவேசமும் எனது அரசியற் பிரவேசமும் சுதந்திரக் கட்சியூடாக இருந்தாலும் எனது அரசியற் பின்ணணி தமிழரசு கட்சியாகும். குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட தவறின் காரணமாக மன வேதனையடைகின்றேன். பட்டிருப்புத் தொகுதி மக்கள் மட்டுமன்றி முழு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக பலதரப்பட்ட உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/செய்த-தவறுக்கு-வருந்துகி/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன்

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள்.இருந்தபோதும் தமிழருக்காகவும் தமிழர் நலனுக்காகவும் 
தாம் சார்ந்த கட்சியின் கொள்கைக்யாகவும் தம்மை அர்பணிப்பதாக கூறி பின்பு தமது சொந்த நலனுக்காக கட்சி தாவியவர்கள் பலரை நாம் கண்டோம்.இருந்த போதும் தமது தவறுகளை நினைத்து மனம் வருந்திய சாணக்கியன் போன்ற இளைய படித்த சகல அரசியல் ஆளுமையும் கொண்ட இளம் தலை முறையினருக்கு தமிழ் அரசு கட்சி இடம் கொடுக்க வேண்டும்.இவர்கள் மூலம் தமிழருக்கான ஓர் நிரந்தர முழுமையான அரசியல் தீர்வை சர்வதேச ஆதரவோடும் இலங்கை அரசோடும் சேர்ந்து உழைக்க வேண்டும்.சாணக்கியன் இறுதி வரை கட்சியின் கொள்கையோடும் தமிழர் நலன் கருதியும் உழைப்பார் என கடைசி வரை நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... தமிழரசு கட்சியில் இருந்து,
கிழட்டு நரிகளும், பின் கதவால் வந்தவர்களும், 
சிங்கள அரசுக்கு... முட்டுக்கு கொடுப்பவர்களும்... விரட்டி அடிக்கப்பட  வேண்டும்.

இப்போதுள்ள... தமிழரசு கட்சி,  தமிழரை காட்டிக் கொடுக்கும்,
சோரம் போன கட்சி. 

On 2/7/2020 at 5:01 PM, nunavilan said:

செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன்

நாற்காலிக்காக அலையும் ஒருவர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.