Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த

இந்தியாவுக்கு  நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

EQO8vbOX0AkYGJ6.jpg

EQPGUo0UUAANgSn.jpg

நேற்று டெல்லியை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை  இந்திய மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றுள்ளார்.

EQL-TdMVAAANka5.jpg

EQL-TdOUwAEL4hn.jpg

டெல்லியை சென்றடைந்த  சென்றடைந்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.

EQOmOmaU4AIxSji.jpg

EQO2oUNVUAAJk9J.png

இந்நிலையில், வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/75181

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் குழுமம் இனி சீனா போகும் ஆரவார நிகழ்ச்சிகளைக் காண்பதெப்போது????🤔 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

மகிந்தர் குழுமம் இனி சீனா போகும் ஆரவார நிகழ்ச்சிகளைக் காண்பதெப்போது????🤔 

சீனப் பிரதமரே தற்காப்பு தேடி ஒழித்துவிட்டதாக செய்திகள் வருகின்றனவே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

சீனப் பிரதமரே தற்காப்பு தேடி ஒழித்துவிட்டதாக செய்திகள் வருகின்றனவே.

ஈழப்போர் நடந்தபோது மகிந்தருக்குத் தனியாகப் பதுங்குகுழி அமைத்துக் கொடுத்ததுபோல் கொடுத்திருப்பார்களோ.. 🤔

கொலைகாரர்களின் சந்திப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு வெளிநாடுகள் தலையிட முடியாது

images-6.jpg?resize=257%2C196

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை அரசு ஒருபோதும் அடிபணியாது.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் இன மோதலுக்கு வழிவகுக்கக்கூடியதாக இருக்கின்றன. எனவே, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

அவர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது, ‘இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடு. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்’ என்று மஹிந்தவிடம் மோடி தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று மாலை கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ச அரசு முடிவுக்கொண்டு வந்த பின்னர் இங்குள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இனத்தவர்களும் நீதியுடனும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும்தான் வாழ்கின்றார்கள். இதை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைவிடுத்து இலங்கை விவகாரத்தில் வெளிநாடுகள் அநாவசியமாகத் தலையிட்டு இங்கு மீண்டும் இனமோதலை ஏற்படுத்த வழிவகுக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://puthusudar.lk/2020/02/12/இலங்கையின்-உள்நாட்டு-பிர/

டிஸ்கி 

roflphotos-dot-com-photo-comments-201711 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.