Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahindha-2.jpg

மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (சனிக்கிழமை) அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.

இதன்போது 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதில் உண்மை என்னவென்றால், அந்த சட்டத்தை மாகாணசபை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக கூற வேண்டுமாயின், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதேவேளை   எனது இந்த டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த  நவம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பின்போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுக்காக போடப்பட்ட அஸ்தி வாரம். இதனூடாக மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் பிரதமர் மோடி உடனான சந்திப்பு, மிகவும் பயன்மிக்க சந்திப்பாக அமைந்தது.இரு நாடுகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன.

நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மாகாணத்துக்கு-ஒதுக்கப்ப/

6 hours ago, தமிழ் சிறி said:

உதாரணமாக கூற வேண்டுமாயின், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

வட ஹிந்திய கயவர்களும் தமிழின விரோதிகளும் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் கூறுவதில், கூறும் பொய்களில் திருப்பதி கொள்ளலாம். 13வது சரத்தின் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்னவென்று சிறிது அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்.

உதாரணமாக,
வடமாகாணத்துக்குரிய நிதியத்தை அமைக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
வடமாகாணத்துக்குரிய காவல்துறையை உருவாக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை.
வடமாகாண காணிகளை முகாமைத்துவம்  செய்யும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
ஊழல் செய்ததாக கண்டறியப்பட்ட ஒருவரை இடைநிறுத்தும் / நீக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cv-wikky.jpg

நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி!

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

என்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது?

அதன்பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.

இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.

ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.

பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.

மூன்றாவதாக பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த இந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் இருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும்.

அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நான்-நிதியை-திருப்பி-அனு/

On 2/9/2020 at 7:30 PM, போல் said:


வடமாகாணத்துக்குரிய நிதியத்தை அமைக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
வடமாகாணத்துக்குரிய காவல்துறையை உருவாக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை.
வடமாகாண காணிகளை முகாமைத்துவம்  செய்யும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
ஊழல் செய்ததாக கண்டறியப்பட்ட ஒருவரை இடைநிறுத்தும் / நீக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,

 

இருக்கிற அதிகாரத்தையே பயன்படுத்த தெரியவில்லை। மாகாண சபையை நடத்த தெரியவில்லை। இது போதாது எண்டு வழக்குக்காக கோர்ட்டுக்கும் படி ஏறிக்கொண்டிருக்கிறார்। அப்பறம் எதுக்கு இல்லாத அதிகாரம் எல்லாம் அவருக்கு।

12 hours ago, Vankalayan said:

இருக்கிற அதிகாரத்தையே பயன்படுத்த தெரியவில்லை। மாகாண சபையை நடத்த தெரியவில்லை। இது போதாது எண்டு வழக்குக்காக கோர்ட்டுக்கும் படி ஏறிக்கொண்டிருக்கிறார்। அப்பறம் எதுக்கு இல்லாத அதிகாரம் எல்லாம் அவருக்கு।

உருப்படியான அதிகாரம் இன்றி, பதவிவெறி பிடித்த கூட்டமைப்பினரின் இழுபறிகளுக்கு மத்தியில், சுமந்திரன் சம்பந்தன் மாவை முதலிய சதிகாரர்கள் ரணில்-மைத்திரி-ஆளுநர்-செயலாளர் கும்பலுடன் இணைந்து விக்கியை செயற்படாது தடுக்க செய்த தொடர் சதிகளை, கூட இருந்த கயவர்களின் நம்பிக்கையில்லா பிரேரணை சாதிகளை, ................. வெற்றிகரமாக எதிர்கொண்டு மாகாணசபையை போதிய அரசியல் அனுபவமற்ற விக்னேஸ்வரன் 5 வருடம் தனது வலுவுக்கேற்ப வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.  

மேற்படி சதிகாரர்களும் அவர்களின் எடுபிடிகளும் அவிழ்த்துவிடும் பொய்களை உண்மையென ஒருசிலர் நம்புவதை உங்கள் பதிவின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

மேலும் சுமந்திரன் சம்பந்தன் மாவை முதலிய கூட்டமைப்பினர் பலர் தமிழின அழிப்புக்கு துணை போனதால் அவர்கள் மேல் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத எந்திரத்தின் வழிநடத்தலில் இயங்கும் நீதித்துறையில் வழக்குகள் இல்லை. விக்கினேஸ்வரன் சர்வதேசத்துக்கு உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியதால் ஊழல் பேர்வழிகள் சதிகாரர்கள் இணைந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத எந்திரத்தின் வழிநடத்தலில் இயங்கும் நீதித்துறையில் வழக்கில் சிக்க வைத்துள்ளார். இது விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் நன்மைக்காக உழைப்பவர் என்பதைத்தான் உணர்த்துகிறது. இது விக்கினேஸ்வரன் தமிழின அழிப்புக்கு துணை போகவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.

9 hours ago, போல் said:

உருப்படியான அதிகாரம் இன்றி, பதவிவெறி பிடித்த கூட்டமைப்பினரின் இழுபறிகளுக்கு மத்தியில், சுமந்திரன் சம்பந்தன் மாவை முதலிய சதிகாரர்கள் ரணில்-மைத்திரி-ஆளுநர்-செயலாளர் கும்பலுடன் இணைந்து விக்கியை செயற்படாது தடுக்க செய்த தொடர் சதிகளை, கூட இருந்த கயவர்களின் நம்பிக்கையில்லா பிரேரணை சாதிகளை, ................. வெற்றிகரமாக எதிர்கொண்டு மாகாணசபையை போதிய அரசியல் அனுபவமற்ற விக்னேஸ்வரன் 5 வருடம் தனது வலுவுக்கேற்ப வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.  

மேற்படி சதிகாரர்களும் அவர்களின் எடுபிடிகளும் அவிழ்த்துவிடும் பொய்களை உண்மையென ஒருசிலர் நம்புவதை உங்கள் பதிவின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

மேலும் சுமந்திரன் சம்பந்தன் மாவை முதலிய கூட்டமைப்பினர் பலர் தமிழின அழிப்புக்கு துணை போனதால் அவர்கள் மேல் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத எந்திரத்தின் வழிநடத்தலில் இயங்கும் நீதித்துறையில் வழக்குகள் இல்லை. விக்கினேஸ்வரன் சர்வதேசத்துக்கு உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியதால் ஊழல் பேர்வழிகள் சதிகாரர்கள் இணைந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத எந்திரத்தின் வழிநடத்தலில் இயங்கும் நீதித்துறையில் வழக்கில் சிக்க வைத்துள்ளார். இது விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் நன்மைக்காக உழைப்பவர் என்பதைத்தான் உணர்த்துகிறது. இது விக்கினேஸ்வரன் தமிழின அழிப்புக்கு துணை போகவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.

 எவர் எதை எழுதினாலும் இங்கு மேலதிகமாக ஒன்றும் நடக்கப்போவதில்லை। ஒருவருக்கு அவரின் நிர்வாகத் திறமையை பொறுத்து அவருடைய நடவடிக்கை அமையும்। இலங்கை அரசு எல்லாவற்றையும் அள்ளிக்கொடுத்து விட்ட்து என்று சொல்லவில்லை। இருந்தாலும் கொடுத்ததையாவது சரியாக செய்ய வேண்டும்। அதை விடுத்து இன்னும் தா இன்னும் தா எண்டு கேட்டுக்கொண்டிருக்க முடியாது। இவர் ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர்। ஒரு அமைச்சரை சட்டப்படி இவரு நீக்கவேண்டுமென்று தெரியாதவர்। இப்போது நீதிமன்றம் ஏறித்திருக்கிறார்। நீங்கள் என்னதான் சம், சம், மாம் என எழுதினாலும் இதுதான் உண்மை

On 2/9/2020 at 7:30 PM, போல் said:

வட ஹிந்திய கயவர்களும் தமிழின விரோதிகளும் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் கூறுவதில், கூறும் பொய்களில் திருப்பதி கொள்ளலாம். 13வது சரத்தின் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்னவென்று சிறிது அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்.

உதாரணமாக,
வடமாகாணத்துக்குரிய நிதியத்தை அமைக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
வடமாகாணத்துக்குரிய காவல்துறையை உருவாக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை.
வடமாகாண காணிகளை முகாமைத்துவம்  செய்யும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,
ஊழல் செய்ததாக கண்டறியப்பட்ட ஒருவரை இடைநிறுத்தும் / நீக்கும் சட்டவலு வட மாகாணசபைக்கு இல்லை,

10 வருஷத்துக்கு மேலா  திட்டமிட்ட தமிழின படுகொலைகளுக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்ககளுக்கு இது போன்ற உண்மைகள் சுட்டுப்போட்டாலும் தெரிய வராது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.