Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பாக விரைவில் தீர்மானம் – சம்பந்தருக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan.jpg

இலங்கை தொடர்பாக விரைவில் தீர்மானம் – சம்பந்தருக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

மேலும் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகித்த இணைத்தலைமை நாடுகள் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிற்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதும் அவற்றினை நிறைவேற்ற தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும் போராட்டம் தமிழ் மக்களினுடையது எனவே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரபரவலாக்கம் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கம் கொடுத்த இந்த வாக்குறுதிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசாங்கம் இந்த வாக்குறுதிகளில் இருந்து விலகி செல்வதற்கு இன்னும் ஊக்கத்தினை கொடுப்பதாகவும் வலியுறுத்தினார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய இரா சம்பந்தன் விசேடமாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அப்படியானவர்கள் காணாமல் போயிருந்தால் அதற்க்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எமது மக்கள் இந்த உண்மையினை கண்டுகொள்வதற்காக ஏங்கி தவிக்கிறார்கள் என்றும் சர்வதேச சமூகம் ஐந்தே கருமத்தில் உறுதியாக செயற்பட்டு உண்மையினை கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த கருமங்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வாக்குறுதி அளித்தனர்.

http://athavannews.com/இலங்கை-தொடர்பாக-விரைவில்/

"மேலும் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும் போராட்டம் தமிழ் மக்களினுடையது எனவே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரபரவலாக்கம் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்."

(இராணுவ, பொருளாதார) பலம் பலவீனங்ககளை வைத்துத்தான் அரசியல்.

எமது அரசியல் தலைமைகள் இன்று பலமில்லாமல் ஒற்றுமையில்லாமல் உள்ளார்கள்.

இதில் ஐரோப்பிய யூனியன் எதையும் செய்ய முனைந்தாலும் நாமே அதை உடைத்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வாக்குறுதி ,நோர்வேயின் வாக்குறுதி இப்ப ஐரோப்பியாவின் வாக்குறுதி இப்படி எல்லோருடைய வாக்குறுதிகளை நம்பி தான் தமிழன் வாழவேண்டும்......அது சரி நம்பிக்கைதானே வாழ்க்கை....

அப்படியே உங்களுக்கும் வாக்குகளை தமிழர்கள் இந்த தடவை அழிப்பார்கள் என வாக்குறுதி வழங்குகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2020 at 5:04 AM, தமிழ் சிறி said:

அப்படியானவர்கள் காணாமல் போயிருந்தால் அதற்க்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இனப்படுகொலை குற்றச்சாட்டு விசாரணை போய்.. போர்க்குற்ற விசாரணை போய்.. இப்ப காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரிப்பு.

நல்ல சாணக்கியம்... சம்பந்தர். உங்களின் சாணக்கியம்.. உங்கள் சிங்கள எஜமானர்களை உச்சாரக் கொப்பில் வைக்கும். பொக்கட்டை நிரப்பிக் கொள்ளவும். 

 

On 2/13/2020 at 5:04 AM, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரபரவலாக்கம் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்.

 

இப்படி ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் சம்பந்தனிடம் எப்ப வைச்சவை.

தமிழ் மக்கள்.. 1978 இல் வைச்சது.. தனித் தமிழீழம். அதுக்கு தான் வாக்குப் போட்டவை.

1995 இல்.. 2002 இல் வாக்குப் போட்டவை.. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி..

அதன் பின்னர்.. சுயநிர்ண உரிமையுடன் கூடிய.. ஒரு தேசம்.. இரு அரசுகள்..

அதன் பின்னர்.. கூட்டாட்சி... ஹிந்திய மாநிலங்கள் அளவிலாவது அதிகாரப் பகிர்வு.

அதன் பின்னர் 13+

அதன் பின்னர்13

இப்ப....

இப்ப.. இவர் வைக்கிறார்.. ஒன்றுபட்ட இலங்கைக்குள்.. ஒற்றையாட்சிக்குள் தீர்வு. அதுதானே நடைமுறையில் இருக்கிறதே. பிறகென்ன தீர்வு... இப்படிக் கேட்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக நேரம் எடுக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சாகும் வரை சிங்கள எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து உழைப்பதை விடுத்து ஒன்றில் ஓய்வு பெற வேண்டும் இன்றேல்.. தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

40 minutes ago, nedukkalapoovan said:

சம்பந்தன் சாகும் வரை சிங்கள எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து உழைப்பதை விடுத்து ஒன்றில் ஓய்வு பெற வேண்டும் இன்றேல்.. தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நெடுக்ஸ், அவர் சாகும்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தே அப்படி நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்। சாகும்போதாவது நிம்மதியாக சக விடுங்க ஐயா। பாவம் மனுஷன்।

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இனப்படுகொலை குற்றச்சாட்டு விசாரணை போய்.. போர்க்குற்ற விசாரணை போய்.. இப்ப காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரிப்பு.

நல்ல சாணக்கியம்... சம்பந்தர். உங்களின் சாணக்கியம்.. உங்கள் சிங்கள எஜமானர்களை உச்சாரக் கொப்பில் வைக்கும். பொக்கட்டை நிரப்பிக் கொள்ளவும். 

 

இப்படி ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் சம்பந்தனிடம் எப்ப வைச்சவை.

தமிழ் மக்கள்.. 1978 இல் வைச்சது.. தனித் தமிழீழம். அதுக்கு தான் வாக்குப் போட்டவை.

1995 இல்.. 2002 இல் வாக்குப் போட்டவை.. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி..

அதன் பின்னர்.. சுயநிர்ண உரிமையுடன் கூடிய.. ஒரு தேசம்.. இரு அரசுகள்..

அதன் பின்னர்.. கூட்டாட்சி... ஹிந்திய மாநிலங்கள் அளவிலாவது அதிகாரப் பகிர்வு.

அதன் பின்னர் 13+

அதன் பின்னர்13

இப்ப....

இப்ப.. இவர் வைக்கிறார்.. ஒன்றுபட்ட இலங்கைக்குள்.. ஒற்றையாட்சிக்குள் தீர்வு. அதுதானே நடைமுறையில் இருக்கிறதே. பிறகென்ன தீர்வு... இப்படிக் கேட்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக நேரம் எடுக்காது. 

நெடுக்ஸ்... சம்பந்தன் சாணக்கியன்... என்று சொல்வதெல்லாம் வெற்று மாயை.
உண்மையில்.. சம்பந்தன் அரசியலில் தோல்வியுற்ற மனிதர்.
அவருக்கும்... அரசியலுக்கும் எந்த, சம்பந்தமும் இல்லை.
அவரின்... வாய் வீச்சை... நம்பி, ஏமாந்த தமிழர் தான்... பாவங்கள்.   😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.