Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!

 

 

by : Benitlas

ZvpsvChR.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் பங்கேற்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறாத நிலையில், ஐந்து வருடங்களின் பின்பு இன்று இந்தப் போட்டி இடம்பெறுகின்றது.

http://athavannews.com/முதலில்-துடுப்பெடுத்தா-8/

அவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் சதம் மற்றும் வலுவான இணைப்பாட்டம் காரணமாக இக்கட்டான நிலையிலிருந்து மீண்டெழுந்த இலங்கை அணி 345 ஓட்டங்களை குவித்துள்ளது.

ERsyWblWsAgsA_H.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அடணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழஙக்கியது. அதன் காரணமாக இலங்கை  அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடன் ஷெல்டன் கோட்ரிலின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய குசல் பெரேராவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளரான ஷெய் ஹோப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை  அணி 2.3 ஓவர்களுக்கு 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றது.

எனினும் 3 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் இணைப்பாட்டமானது அணியை சிறந்த நிலைக்கு கொண்டு சென்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியினரின் பந்து வீச்சுகளை இவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு அனைத்து திசைகளிலும் அடித்தாட இலங்கை அணியானது 2 விக்கெட்டுகளுடன் 15 ஓவர்கள் முடிவில் 76 ஓட்டங்களையும், 26.2 ஓவர்கள் முடிவில் 150 ஓட்டங்களையும் பெற்றது.

36.3 ஆவது ஓவரில் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்களில் தனது இணடாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுணையில் அவருக்கு தோள் கொடுத்து ஆடி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 38 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார்.

ERsesxmXYAMKmA5.jpg

 

ERsgL-iWkAE8SlO.jpg

தொடர்ந்தும் இவர்கள் ஆடுகளத்தில் நிலைத்து நின்றாட இலங்கை அணியானது 40 ஓவர்கள் நிறைவில் 246 ஓட்டங்களை பெற்றது.

எனினும் இதன் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கிய குசல் மெண்டீஸ் 40.2 ஆவது ஓவரில் மொத்தமாக 119 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மெத்தியூஸ் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவிஷ்க பெர்னாண்டோவும் மொத்தமாக 123 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் அல்சாரி ஜோசபின் பந்து வீச்சில் கீமோ போலிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்ப மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனர்.

இதனால் இலங்கை அணி 43 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றது.

இந்த 345 ஓட்டங்கள் பெறுவதற்கு 33 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.  அதன்படி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் பெறப்பட்ட அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை இதுதான்.

இதனால் இது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கு முன் இங்கிலாந்து பெற்ற 333 ஓட்டங்கள்தான் சிக்ஸர் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கோர்ட்ரல் 4 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/76568

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 161 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற  மேற்கிந்திய தீவுகளின் அணியின் தலைவர் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்ணவும் குசால் பெரேராவும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்ததால் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டது.

எனினும் குசல் மென்டிஸ் அவிஸ்க பெர்ணான்டோ இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக விளையாடிதுடன் இருவரும் சதங்களை பெற்றதுடன் மூன்றாவது விக்கெட்டிற்காக 239 ஓட்டங்களை பெற்றனர்.

srilanka_win_1.jpg

அவிஸ்க பெர்ணான்டோ 127 ஓட்டங்களை பெற்ற அதேவேளை மென்டிஸ் 119 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 345 ஓட்டங்களை பெற்றது.

பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது விக்கெட்டிற்காக 64 ஓட்டங்களை பெற்றபோதிலும்  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 39 ஓவர்களில் 184 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியயை சந்தித்தது.

 

srilanka_win_2.jpg

மேற்கிந்திய அணியின் சார்பில் மீண்டும் ஹோப் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களை பெற்ற அதேவேளை கை அணியின் வனிந்து ஹசரங்கவும் சந்தகனும் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் இரண்டில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

https://www.virakesari.lk/article/76583

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.