Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவுசெய்து சாகவிடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-E6-C8512-7-A3-E-49-C9-8422-DE4-DA2-C32
Alfred Schnurreக்கு
92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.

தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப்  பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு  முரணான சட்டம்தான் அமுலில் இருக்கிறது. ஆனால் அயல்நாடான சுவிற்சலாந்தில் அது சாத்தியமாகிறது

2015இல்கருணைக் கொலையை அனுமதியுங்கள்என்று மக்கள் மத்தியில் எழுந்த அலையை யேர்மனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி அரசியல்வாதிகள்  தோற்கடித்து விட்டார்கள்.

“இன்னும் எவ்வளவு காலம் நான் சாவதற்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் விரைவில் அது நடக்கும். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கான முடிவை எடுக்க உரிமை இருக்கிறது. அது அவர்களது சாவுக்கும் பொருந்த வேண்டும். சட்டங்களும், அரசியல்வாதிகளும் மற்றவர்கள் வாழ்க்கைக்குள் உள் நுளைவது சரியானதல்லஎன்று தனது வாழ்வை நிறைவு செய்யும் நிலையில் Alfred தெரிவிக்கிறார்

8641-B517-531-E-4316-8-E73-2-CC6-BBFA017

யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை  இன்று (26.02.2020) அறிவித்திருக்கிறது

கருணைக்கொலைக்கு ஆதரவாக பலர் தாக்குதல் செய்த கோரிக்கைகளை ஆராய்ந்த மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், “இந்த பொதுத் தடையிலிருந்து நாம் விலகிச் செல்வது நல்லது. ஒருவர் வாழும் போது எடுக்கும் தீர்மானங்களுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதுபோல் இறப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் உரிமையும் இருக்க வேண்டும்என்று  அது அறிவித்திருக்கிறது. அதாவது யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், கருணைக்கொலையை ஏற்று தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

ஆனால் இந்த முடிவு மிகவும் எளிதானது அல்ல.

யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதானவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் இந்த முடிவு ஒரு அபாயகரமான வழியைக் காட்டிவிடும்

வாழ்க்கையில் சாதாரண விரக்தியில் உள்ளவர்களும் இந்த கருணைக் கொலை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள்

மருத்துவர்களும், சில உதவி அமைப்பினரும் இதை ஒரு வர்த்தகமாகவே ஆக்கிவிடுவார்கள்” 

“மரணத்துக்கான முடிவை மனிதன் எடுக்க முடியாது” என்று பல காரணங்களை  அரசியல் கட்சிகள், கிருஸ்தவ தேவாலயங்கள்,மதகுருக்கள் முன்வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Kavi arunasalam said:

மரணத்துக்கான முடிவை மனிதன் எடுக்க முடியாது” என்று பல காரணங்களை  அரசியல் கட்சிகள், கிருஸ்தவ தேவாலயங்கள்,மதகுருக்கள் முன்வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.

 

முதலில் மதப்போரால் இறப்பதையும்,அரசியல் போரால் மரணிப்பதையும்  இவர்கள் தடுத்து நிறுத்தட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதானவர்களுக்கும் 

இது தவறு.ஒருவருக்கு சுகயீனம் அதனால் மிகவும் கஸ்டப்படுகிறார் என்றால் அவரை கருணைக்கொலைக்கு அனுமதிக்கலாம்.

மற்றும்படி வாழ இயலாமல் ஏதோ விரக்தியில் சாகப் போகிறேன் என்றால் அதை அனுமதிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

ஒவ்வொருவரும் அந்தந்த நிலைக்கு தள்ளுப்படும் போதுதான் அதைப்பற்றிய தெளிவு வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவரும் அந்தந்த நிலைக்கு தள்ளுப்படும் போதுதான் அதைப்பற்றிய தெளிவு வரும்.

இளங்கன்று பயமறியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

தனிமையோடு போராடுவதும் அடுத்தவரின் உதவி இல்லாமல் வாழ்வதென்பதும் முதுமையில் அவ்வளவு இலகு இல்லை சகோதரி.அன்பே சிவம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

இஞ்சை ஜேர்மனியிலை களவாய் செய்தவங்கள்.இரண்டு மூண்டு இடத்திலை பிடிபட்டு போச்சுது.

எங்கடை ஊரிலை உந்த கோதாரிவிழுந்த சட்டம் கிட்டம் ஒண்டுமில்லை.ஆக்களின்ரை உதவியும் தேவையில்லை.
இருக்கவே இருக்கு பொலிடோல்.தண்டவாளம்.கிணறு.கயிறு. :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

கேள்வியும் கேட்டு பதிலையும் தந்திருக்கிறீர்கள் மருதங்கேணி. இந்த விடயம் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ காப்புறுதி அதற்கான பொறுப்பை ஏற்கும்.

14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

இதுவும் நீண்ட காலமாக யேர்மனியில் பேசப்படும் (இருக்கிற) பிரச்சனைதான் சகோதரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.