Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன?

Featured Replies

யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன?

யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா?

நன்றி

யாழ்ப்பாணம்னு எப்படி பேர் வந்ததுன்னு கூட இந்த அம்மணிதெரியாதா!!! க்கும்

யாழ்ப்பாணம்னு எப்படி பேர் வந்ததுன்னு கூட இந்த அம்மணிதெரியாதா!!! க்கும்

உங்க ஊர் சென்னைக்கு எப்படி சென்னை பெயர் வந்தது? எப்படி மெட்றாஸ் பெயர் வந்தது?

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம்னு எப்படி பேர் வந்ததுன்னு கூட இந்த அம்மணிதெரியாதா!!! க்கும்

தெறிந்தா நீங்க கொஞ்சம் சொல்லுங்கோ

:lol:

தெரிஞ்சா சொல்லும்,

தெரியாட்டி கம்மண்டு இரும்

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.

வேறு சிலர், நல்ல ஊர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள்.

தகவல்:விக்கிபீடியா

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஊர் சென்னைக்கு எப்படி சென்னை பெயர் வந்தது? எப்படி மெட்றாஸ் பெயர் வந்தது?

ஒரு இந்தியனைக் கேளுங்கள் சொல்லுவார்.இவரிடம் போய் இடக்குமடக்காக ஏதும் கேட்காதீர்கள்

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி தூயவன் அண்ணா

ஒரு இந்தியனைக் கேளுங்கள் சொல்லுவார்.இவரிடம் போய் இடக்குமடக்காக ஏதும் கேட்காதீர்கள்

ஓ அதுதானே இவருக்கு எப்படி தெரியப்போகிறது?

  • 2 weeks later...

ஒரு இந்தியனைக் கேளுங்கள் சொல்லுவார்.இவரிடம் போய் இடக்குமடக்காக ஏதும் கேட்காதீர்கள்

அப்ப இவரு கள்ள இந்தியனா.

இது இந்திய சட்டப்படி குற்றம், :lol:

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.

இப்படியேதான் நானும் கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.

நாங்கள் ஐந்தாம் வகுப்பில் படித்ததும் இதேதான்.

எல்லோருகும் வணக்கம் யாழ்பாணம் என்பது தமிழ் பெயரா அல்லது வெற்று மொழி பெயரா

  • 4 weeks later...

யாழ்ப்பாணம் என்பது தூய தமிழ்ப்பெயர் என்பதில் கூட யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

சென்னைக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்றால் ஆங்கிலேயர்க்கு அந்த இடத்தை வழங்கியவர் சென்னப்ப நாயக்கன் என்ற நிலக்கிழார் (அல்லது குறு நில மன்னன்???) எனவே அந்த நிலம் சென்னைப்பட்டணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது....

ஆங்கிலேயர் அதை மா நகரமாக உருவாக்கியதும் ஸ்பெயின் நாட்டு தலை நகரான மாட்ரிட் நினைவாக மட்ராஸ் என்று பெயர் சூட்டினர்

பாணன் என்பது தமிழில் கலைஞன் என்பதை குறிக்கும் சொல்.... யாழ் வாத்தியத்தில் வல்லமை பொருந்திய ஒருவருக்கு (யாழ்ப்பாணன்) ஒருவருக்கு கூழங்கை சக்கரவர்த்தி (சொத்தியான கைகளை உடையவராக இருந்தமையால் இந்த்ன பட்டபெயராம்) அல்லது ஆரிய சக்கரவர்த்தி என்பவரால் வழங்கப்பட்ட நகருக்கு பெயர் தான் யாழ்ப்பணம்.....! யாழ்ப்பண வரலாற்றை வையாபாடல் ,வைபவமாலை எனும் இரண்டு நூல்கல் விபரிக்கின்றன...! அதில் வைபவமாலை எனும் நூலை எழுதிய மயில்வாகனம் என்பவர்..... யாழ்ப்பாண இராட்ச்சியத்தின் ஆரம்பம் கிபி 13ம் 14ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்...!

ஆனால் வைபவமாலை எனும் நூல் யாழ்ப்பாணத்து வரலாற்றின் ஆரம்பம் கிமு 110ம் ஆண்டு என்கிறது...!

கூழங்கை சக்கரவர்த்தியே யாழ்ப்பாண இராட்ச்சியத்தின் முதல் மன்னாக சொல்லப் படுகின்றான்.... நல்லூர் நகரை அமைத்தவனும் இவனே....! ஆனால் சிங்கை நகரில் இருந்தே ஆட்சி செலுத்தினான் ( அனேக மாக தொண்டமனாக இருக்கலாம்) கலிங்க ஆரிய சக்கரவர்த்தி எனும் பெயரிலும் இவன் அழைக்கப்பட்டான்...!

14ம் நூற்றாண்டுவரை செண்பகப்பெருமாள் எனப்படும் சப்புமல்குமர யாழ்ப்பணத்தை கைப்பற்றும் வரை தொடர்ந்து தமிழர் இராட்ச்சியமாகத்தான் யாழ்ப்பாணம் விழங்கியது.... பின்னர் மீண்டும் சப்புமல்குமரவிடம் இருந்து தமிழர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி கொண்ண்டதாகவும் வரலாறு சொல்கிறது....!

யாழ்ப்பாணம் என்பது தூய தமிழ்ப்பெயர் என்பதில் கூட யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?சென்னைக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்றால் ஆங்கிலேயர்க்கு அந்த இடத்தை வழங்கியவர் சென்னப்ப நாயக்கன் என்ற நிலக்கிழார் (அல்லது குறு நில மன்னன்???) எனவே அந்த நிலம் சென்னைப்பட்டணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது....ஆங்கிலேயர் அதை மா நகரமாக உருவாக்கியதும் ஸ்பெயின் நாட்டு தலை நகரான மாட்ரிட் நினைவாக மட்ராஸ் என்று பெயர் சூட்டினர்

ஆங்கிலேயன் எதுக்காக ஸ்பானிசின் நகர் பெயர் சூட்ட வேண்டும்...??? ஆங்கிலத்தில் நகரத்தை Metro எண்று அழைப்பது வழக்கம்.... அது உருமாறி எம்மவர்கள் வாய்களில் தடுமாறி மெட்றா""ஸ்"" ஆனதுதான் உண்மையாக இருக்கும்....!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.