Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்: மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்: மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை!

 

 

by : Litharsan

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இந்நிலையில் பதற்றநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் கைதுசெய்யப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதாக சந்தேகிக்கபட்டுள்ளது.

கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு அவர் வந்தநிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

கொழும்பில் உள்ள விடுதியில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் இதன்காரணமாக இவரின் நோய் குறித்து வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரிவில் முதல் நபராகவும் இவர் பதிவாகியுள்ளார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை மறித்து வைத்தியசாலையைச் சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக ஆறு பேரைக் கைதுசெய்துள்ளனர்.

தற்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினைச் சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

Batticalao-Teaching-Hospital-Area-People

http://athavannews.com/மட்டக்களப்பில்-ஒருவருக்/

 

இது ஒரு மூடத்தனமான செயல்। நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் வேறு எங்கு கொண்டு செல்வது। எல்லா இடங்களிலும் அரசாங்கம் இவரான வசதிகளை செய்து கொடுத்திருக்கும்போது இங்கு மட்டும் எப்படி மக்கள் போராட்டத்தில் ஈடு படலாம்।

நிச்சயமாக இந்த அரசு பார்த்துக்கொண்டிராது। மக்கள் சட்டத்தை கைலெடுத்தால் அரசு இராணுவத்தை இறக்கும்। எனவே மக்கள் உலகின், நாட்டின் நிலைமையை புரிந்துகொண்ட நடக்கவேண்டும்।

அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வைத்தியசாலையில் சேர்க்கவிடடாள் வேறு எந்த வைத்தியசாலையில் சேர்ப்பார்கள்। இவர்கள் கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்துவது நல்லது।

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

 

இது ஒரு மூடத்தனமான செயல்। நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் வேறு எங்கு கொண்டு செல்வது। எல்லா இடங்களிலும் அரசாங்கம் இவரான வசதிகளை செய்து கொடுத்திருக்கும்போது இங்கு மட்டும் எப்படி மக்கள் போராட்டத்தில் ஈடு படலாம்।

நிச்சயமாக இந்த அரசு பார்த்துக்கொண்டிராது। மக்கள் சட்டத்தை கைலெடுத்தால் அரசு இராணுவத்தை இறக்கும்। எனவே மக்கள் உலகின், நாட்டின் நிலைமையை புரிந்துகொண்ட நடக்கவேண்டும்।

அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வைத்தியசாலையில் சேர்க்கவிடடாள் வேறு எந்த வைத்தியசாலையில் சேர்ப்பார்கள்। இவர்கள் கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்துவது நல்லது।

உண்மை தான் ...சும்மா எதற்கெடுத்தாலும் தேவையில்லாத ஆர்ப்பாட்டம் ...கோத்தா ஏப்ரல் தேர்தல் முடியும் மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்...முடிந்ததும் நல்ல வெளுக்க போறார்🙃 ...இப்படி எதற்கெடுத்தாலும் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் தேவையான நேரம் செய்யும் முக்கிய ஆர்ப்பாட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.