Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரி உயிருடன் இருப்பதாக தகவல்

Featured Replies

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள செயற்பாட்டு பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க வழங்கிய சாட்சியத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

அவர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பிரதான அதிகாரியாவார். குறித்த தாக்குதலின் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்ற தமக்கு தற்கொலை குண்டை வெடிக்க வைத்த சந்தேகத்திற்குரியவரின் தலை பகுதி தேவாலயத்தின் கதிரையில் இருந்தமையை அவதானித்ததாக குறிப்பிட்டார்.

குண்டுதாரி, ஹஸ்துன் என அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

>இதற்கமைய 2019 ஆம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தாம் ஹஸ்துன் என்பவரின் பெற்றோர் வசித்த வாழைச்சேனை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றதாகவும், இதன்போது அவரின் தந்தை, தாய் மற்றும் சகோதரரின் மரபு அணு, தற்கொலை குண்டுதாரியின் தலை பகுதியின் மரபணு மாதிரியுடன் ஒத்திசைந்ததாக தமது விசாரணைகளில் தெரியவந்ததாக பிரதாக காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க, ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மொஹமட் முபாராக் என்பவர் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள டொன் டேவிட் மாவத்தையில் வாடகை அடிப்படையில் வீடொன்றை பெற்றுள்ளதாக காவல்துறை பரிசோதகர் சாட்சியளித்துள்ளார். ஹஸ்துடன் என்ற குண்டுதாரி அந்த வீட்டில் தங்கியிருந்தமையை தாம் சி.சி.டி.வி கமரா காட்சிகள் மூலம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/236467/தற்கொலை-குண்டுதாரி-உயிருடன்-இருப்பதாக-தகவல்

 

தாட்கொலையாளி இங்குள்ளாரா அல்லது வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளாரா என்று கண்டுபிடிப்பது அரசின் கடமை। அடுத்த ஈஸ்டர் சண்டே வரமுன்னேர் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது।

இவர்களுக்கு பண உதவி செய்த முகவர்கள் ரிசார்டின் தம்பியின் மக்கள் வாங்கி கணக்கிட்கு நூறு கோடி ரூபா அனுப்பியுள்ளதாக தகவலும் நேற்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது।

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

தாட்கொலையாளி இங்குள்ளாரா அல்லது வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளாரா என்று கண்டுபிடிப்பது அரசின் கடமை। அடுத்த ஈஸ்டர் சண்டே வரமுன்னேர் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது।

 

3 hours ago, ampanai said:

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

3 hours ago, ஏராளன் said:

 

 

நன்றி। அப்படி என்றால் இவர்களுடன் தொடர்ப்புடைய யாவரையும் கைது செய்திருப்பார்கள் எண்டு நம்பலாம்

  • தொடங்கியவர்
2 hours ago, Vankalayan said:

நன்றி। அப்படி என்றால் இவர்களுடன் தொடர்ப்புடைய யாவரையும் கைது செய்திருப்பார்கள் எண்டு நம்பலாம்

இவர்கள் அப்படி ஒருவர் உயிருடன் உள்ளார் என்று இப்பொழுது சொல்வதற்கு ஒரு அரசியல் தேவை இருக்கலாம். 

அதாவது, இந்த நபரை வைத்து வழக்கை திசை திருப்பும் நோக்கம் இருக்கலாம். இல்லை, யாராவது ஒரு புள்ளியை மாட்டும்/வெருட்டும் நோக்கம் இருக்கலாம்.  

4 hours ago, ampanai said:

அதாவது, இந்த நபரை வைத்து வழக்கை திசை திருப்பும் நோக்கம் இருக்கலாம். இல்லை, யாராவது ஒரு புள்ளியை மாட்டும்/வெருட்டும் நோக்கம் இருக்கலாம்.  

தற்போதைய அரசில் உள்ள முக்கியஸ்தர்களும் குண்டு வெடிப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பலத்த சந்தேகம் குண்டு வெடிச்ச தினத்தில இருந்து அடிபடுது. அதை மறைக்கிற முயற்சியா இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


சஹ்ரானும் உயிருடன் இருப்பதாக வெகு விரைவில் செய்தி வரலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.