Jump to content

கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்


Recommended Posts

கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரிகனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியேபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்யோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்

https://www.680news.com/2020/03/23/premier-ford-announces-the-shutdown-of-non-essential-services/

 

நாளாந்தம் பாவிக்கும் மருந்து, மாத்திரை, insulin போன்றவற்றை 3 வாரத்திற் தேவையானவற்றைஎடுத்து வையுங்கள்

உங்கள் குடும்ப வைத்தியருடைய தொலைபேசி எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் வழமையான மருந்தகத்தின் Pharmacy தொலைபேசி எண்ணை எழதி வையுங்கள்.

வீட்டிலே ஓய்வாக இருங்கள்

இந்த நாட்களும் கழிந்து போகும்

 

பெரும் குடிமக்களே! ஒன்ராரியோவில் மதுபானக் கடைகள் மூடப்படமாட்டா.. விற்பனைக்காக திறந்திருக்கும்.. எல்லாம்.. துட்டு.. மணி.. மணி.. 😂

 

லிபோனியாவில் ஆரம்பித்த முடக்கம் நியூயோர்க் இலினோய்ஸ் நியூஜேசி ஒகாயோ என நகர்ந்து தற்போது ஒன்ராரியோ கியூபெக் என வியாபித்துள்ளது..

Link to comment
Share on other sites

கனடாவில் கோவிட் வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்று இதுவரை 621 ஆக உயர்வு

இதற்கு முன்னர் கடந்த சனி எண்ணிக்கை 241

Link to comment
Share on other sites

அன்பான கனடியத் தமிழ் மக்களே,
 
உலகெங்கும் பரவிவரும் இந்த கோவிட்-19 என்ற நோய், கனடாவிலும் எல்லா இடங்களிலும் பெருகி வருகின்றது. உலகம் முன்னெப்போதும் சந்திக்காத காலத்தில் நாம் இருக்கிறோம். எம்மைச் சுற்றி மிகுதியான நிலையற்ற தன்மையும், கலக்கமும் நிலவுகின்றது. கனடியத் தமிழர் பேரவை எமது சமூக மக்களின் நலனில் மிகவும் அக்கறையாக உள்ளது. உங்களைப் போலவே நாமும் வரலாறு சந்தித்த பல தொற்று நோய்களைப் போல் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
 
எமது சமூகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் இந்த இடரிலிருந்து கூடிய வலுவுடன் மட்டுமல்லாது, கூடிய சமுதாய அக்கறையுடன் வெளிவரும் என்று திடமாக நம்புகிறோம்.
 
கனடிய அரசும், நாடளவில் இயங்கும் ஏனைய அரசுகளும், மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவ பல சிறப்பான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்கள். எமது சமூகத்துக்கு உதவும் வகையில் கனடியத் தமிழர் பேரவை, கனடிய அரசின் ஆதரவு நடவடிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சுருக்கமாகத் தரவுள்ளது.
 
இத்தகைய இக்கட்டான காலத்தில், எமது மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், வாணிப ஊழியர்களும், இன்றியமையாத கடமைகளை செய்யும் ஊழியர்களும், பல தொண்டர்களும் தன்னலமற்ற சேவைகளை வழங்கிவருகிறார்கள்; அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அதேவேளை, நாமும் கோவிட்-19 பரவுவதைக் குறைப்பதற்கும், விரைவில் இந்நிலையிலிருந்து வெளிவருவதற்கும் எமது பங்கை ஆற்றவேண்டும்.
 
நாம் எமது சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். இது அனைவருக்குமே கடினமானது தான், ஆனாலும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறெந்த வழியுமில்லை. நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பயனுள்ள இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
 
உலக சுகாதார அமைப்பு
 
கனடிய அரசு
 
நாங்கள் எல்லோரும் ஒரே சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்நிலை உறுதியாக மாறும். தயவுசெய்து வீட்டில், பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
 
உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் பற்றிய வினாக்களோ, ஐயங்களோ இருப்பின் எம்மை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்: info@canadiantamilcongress.ca
 
 
இப்படிக்கு உண்மையுள்ள,
 
 
சிவன் இளங்கோ
தலைவர்
கனடியத் தமிழர் பேரவை

590471ca-f6ed-4d97-8227-d082e3b2ce4b.jpg

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

பெரும் குடிமக்களே! ஒன்ராரியோவில் மதுபானக் கடைகள் மூடப்படமாட்டா.. விற்பனைக்காக திறந்திருக்கும்.. எல்லாம்.. துட்டு.. மணி.. மணி.. 😂

மதுபான கடைகளை பூட்டினால் வேறு சிக்கல்கள் வரும் என்கிறது மாநில அரசு. ஆனால், என்ன மாதிரி சிக்கல்கள் என விளக்கம் தரவில்லை. 😉

Link to comment
Share on other sites

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

https://www.ontario.ca/page/how-your-organization-can-help-fight-coronavirus

 

வைத்தியசாலைக்கு செல்லாமல் உங்களுக்கு கோவிட்டின் தாக்கம் இருக்குமா இல்லையா என்பதை  சுய பரிசோதனை செய்யலாம் :

https://covid-19.ontario.ca/self-assessment/#q0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

மதுபான கடைகளை பூட்டினால் வேறு சிக்கல்கள் வரும் என்கிறது மாநில அரசு. ஆனால், என்ன மாதிரி சிக்கல்கள் என விளக்கம் தரவில்லை. 😉

குடிமகன்களுக்கு..... கைநடுக்கம் வந்திடும் என்று, மாநில அரசு பயப்பிடுது போலை.... 🤣

Link to comment
Share on other sites

கனடாவின் மூன்று நிலை அரசுகளின் கீழும் பல தனியார் நிறுவனங்கள் வருகின்றன. அதாவது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநகர சபைகள். தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆட்சி அலகும் பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் விடுத்து வருகின்றன. இது எனக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுவது சகஜமே. இங்கு மத்திய அரசின் கீழ் வருகின்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பட்டியல் வருமாறு

Banks
Marine shipping, ferry and port services
Air transportation, including airports, aerodromes and Airlines
Railway and road transportation that involves crossing provincial or international borders
Canals, pipelines, tunnels and bridges (crossing provincial borders)
Telephone, telegraph and cable systems
Radio and television broadcasting
grain elevators, feed and seed mills
uranium mining and processing
businesses dealing with the protection of fisheries as a natural resource
many First Nation activities

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'Ontario COVID-19 Update: March 20 Expanding screening and testing capacity Launched interactive of the self- elf-assessment tool Waiving the ree-month waiting period for OHIP coverage Covering the cost COVID-19 services for uninsured people who do not meet the criteria for coverage Measures to help contain spread of COVID-19 Only essential visitors allowed hospitals Helping students learn from the safety their own home with the new Learn at Home Portal Limiting the spread of COVID-19 in the correctional 8' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Ontario continues to take steps to expand screening and testing capacity, while increasing measures to help contain the spread of #COVID19. Here’s today’s update. Let's all continue doing our part to #FlattenTheCurve.

Link to comment
Share on other sites

இடர்கள் நிறைந்த நேரத்தில் எமது பிரதமரால் அறிவிக்கப்பட்ட வீபரங்களை தமிழ் மொழியில் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்

பாராளுமன்ற உறுப்பினர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு தெரிவிப்பு

ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கி அவ்கள் எமது ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்த தமிழாக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

கனேடியமத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக இணைக்கப்பட்டவை கீழே காணப்படுகின்றன

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

• மக்களுக்கு விரைவாக உதவியை வழங்குவதற்கான அவசர சட்டமூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆந் திகதி அதிகாலை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் தற்போது செனட்சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், மார்ச் 18 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அவசர நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கனடியர்களுக்குத் தாமதமின்றி நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கூடியதாயிருக்கும்
• விண்ணப்ப நடைமுறையை எளிதாக்குவதற்கும், இலகுவாக நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்குமாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைக் (Canadian Emergency Response Benefit (CERB)) கனேடிய அரசு அறிவித்துள்ளது:
- கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அவசர பராமரிப்பு உதவி, அவசர ஆதரவுக் கொடுப்பனவு ஆகிய இரண்டுக்கும் பதிலாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canadian Emergency Response Benefit (CERB)) நடைமுறைப்படுத்தப்படும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறாகவும், நடைமுறையை எளிதாக்குவதற்காகவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
- கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவின் (Canadian Emergency Response Benefit (CERB)) மூலம், கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த பணியாளர்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 2,000 டொலர் வீதம் வழங்கப்படும். இதில் பின்வருவோரும் அடங்குகிறார்கள்:
கோவிட்-19 காரணமாக வேலை இழந்த முழு நேர அல்லது ஒப்பந்த அல்லது சுய தொழில்புரியும் பணியாளர்கள்,
நோயுற்ற அல்லது கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தலுக்கு (quarantine) உட்படுத்தப்பட்டுள்ள அல்லது கோவிட்-19 தொற்றிய யாரையாவது பராமரிக்கும் பணியாளர்கள்,
பிள்ளைகளைப் பராமரிப்பதற்காகச் சம்பளம் இன்றி வீட்டில் தங்கியிருப்போர்
வேலை இருந்தாலும், நெருக்கடி நிலையால் சம்பளம் வழங்கப்படாதிருப்போர்.

- கோவிட-19 காரணமாக வேலையில் பாதிப்பை எதிர்கொள்ளும், வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.
வேலைக்காப்புறுதி (EI) அல்லது வேலைக்காப்புறுதி சுகவீன கொடுப்பனவுக்கு (EI sick benefits) ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
தற்போது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவோர், அவர்களது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மூன்றாந் திகதிக்கு முன்பாக முடிவடைந்தால், அது முடிவடைந்ததும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.
கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (CERB) வழங்கப்படும் 16 வார காலத்தின் பின்னரும் வேலைவாய்ப்பு அற்றிருக்கும், வேலைக்காப்புறுதிக்குத் தகுதியான பணியாளர்கள், வழமையான வேலைகாப்புறுதிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையப் பக்கம் ஒன்றைக் கனடா வருமானவரி முகவரகம் (CRA) இயலுமான விரைவில் அமைக்கும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.

• கடந்த வாரத்தில் மட்டும் வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழமையான காலத்தில் சராசரியாக 27,000 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்படும். அதிகரித்த தேவையை எதிர்கொள்வதற்காக:
- அரச பணியாளர்கள் இரவு பகலாகப் பணிபுரிகிறார்கள்,
- மார்ச் 16 ஆந் திகதியில் இருந்து ஏற்கனவே 143,000 வேலைக்காப்புறுதி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன,
- அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள்; குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியிருப்பதால், வேறு திணைக்களங்களில் இருக்கும் பணியாளர்களையும் அரசு பயன்படுத்துகிறது,
- கடந்த பத்து நாட்களில் வேலைக்காப்புறுதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது,
- விண்ணப்ப நடைமுறையை வேகப்படுத்துவதற்காக, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான அதிகரித்த வல்லமையைக் கொண்டுள்ள கனடா வருமானவரி முகவரகம் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (CERB) விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளவுள்ளது.

• இந்தப் புதிய அறிவிப்புகள் கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் அடங்குகின்றன. மாறிவரும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான புதிய திட்டங்களும், உதவிகளும் எதிர்வரும் நாட்களிலும், வாரங்களிலும் செயற்படுத்தப்படும்.
• இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஏதாவது உதவிகளைச் செய்ய முடியுமாவெனச் சிந்திக்குமாறு அனைத்துக் கனேடியர்களிடமும் பிரதம மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
• கோவிட்-19 இற்கான பரிசோதனை, பரிசோதனை முடிவுக்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், அனைவருக்கும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும், முதற்குடிகள் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகிய சமூகங்களுடனும் இணைந்து செயலாற்றி வருகிறது. அத்துடன், முகமூடிகள், சுவாச உதவிக் கருவிகள், தடுப்பு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் என்பவற்றைத் தயாரித்து விநியோகம் செய்வதற்காக நிறுவனங்களுடனும், ஆய்வுகூடங்களுடனும், விஞ்ஞான நிறுவனங்களுடனும் அரசு செயலாற்றி வருகிறது.
• கனடாவில் தற்போது நாளொன்றுக்குப் 10,000 பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் (Dr.Theresa Tam) வெளியிட்ட இந்தப் புள்ளிவிபரம், கனடாவின் பரிசோதனை வல்லமை குறுகிய காலத்தில் மாபெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
• இந்த நெருக்கடி தொடர்பாகக் கனடா எமது சர்வதேச பங்காளிகளுடனும் செயலாற்றி வருகிறது.
- மார்ச் 25 ஆந் திகதி பிரதம மந்திரி சில தலைவர்களுடன் உரையாடினார்:
செனெகலின் ஜனாதிபதி சோள் (Sall), ருவாண்டாவின் ஜனாதிபதி ககாமே (Kagame) ஆகியோருடனான உரையாடலின்போது, மக்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாயங்கள் குறித்தும், இந்த உலகளாவிய பெருந்தொற்று நோயால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்iபை எதிர்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.
எதியோப்பிய பிரதம மந்திரி அபிய் (Abiy), கென்ய ஜனாதிபதி கென்யாட்டா (Kenyatta) ஆகியோருடன், சர்வதேச ஒத்துழைப்புக் குறித்து அவர் ஆராய்ந்தார்.
- நாளை மார்ச் 26 ஆந் திகதி, கனடாவின் பதில் நடவடிக்கைகளை உலகளாவிய ரீதியில் மேலும் ஒருங்கிணைப்பது குறித்து ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார்.

• கனேடியர்களுக்கு உடனடிச் செய்திகளும், தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஊடகவியலாளர்கள் அவர்களது இன்றியமையாத பணியைத் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடனும் அவர்களுக்கு உதவியான புதிய நடவடிக்கைகளை அரசு அறிவிக்கவுள்ளது. கனேடிய பாரம்பரியம் தொடர்பான அமைச்சர் ஸ்ரீவென் கில்போ (Steven Guilbeault) பொதுச் சுகாதார விளம்பரங்களைக் கனேடிய ஊடகங்களில் வெளியிடுவதற்கு 30 மில்லியன் டொலரை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ள ஊடகங்கள் குறித்த சுதந்திர, பல்கலாச்சார, பல்லின ஆலோசனைச் சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியான ஊடக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய - தகுதிபெற்ற கனேடிய ஊடகவியல் அமைப்புக்கான (Qualified Canadian Journalism Organization - QCJO) தராதரங்களை இந்தச் சபை முடிவு செய்யும்

• அனைவரும் சமூக இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவதை மீண்டும் வலியுறுத்திய பிரதம மந்திரி, இந்த முக்கியமான நேரத்தில் கனேடியர்களுக்கு உதவிபுரிவதற்காகக் கடுமையாக உழைக்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும், அரச பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

• மருத்துவ தனிமைப்படுத்தல் சட்டம் ( Quarantine Act ) இன்று நள்ளிரவு முதல் (12:00am March 26th, 2020) நடைமுறைப்படுத்தப்படுமெனச் சமஷ்டி சுகாதார அமைச்சர் பட்டி ஹய்டு (Patty Hajdu) அறிவித்துள்ளார். இதன்படி, கனடாவிற்குள் வரும் அனைவரும் கனடாவை வந்தடைந்ததில் இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்படுகிறது.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்ட பயணிகள், 14 நாட்களுக்குப் பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள் உட்பட்ட எந்தத் தேவைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. நோய் அறிகுறிகளைக் கொண்டிருப்போர், தொலைபேசி மூலம் அவர்களது உள்ளுர் பொதுச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரவேண்டும்.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுதல், தனிமைப்படுத்திக் கொள்ளல் என்பன தொடர்பான விதிகள் பின்பற்றப்படாவிட்டால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படுமெனக் கனேடிய அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்:
டொறீன் சவுந்தரநாயகம்
Gary.Anandasangaree.C1A@parl.gc.ca
416 559 1749

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சனிபுறோக் மருத்துவமைனக்கு சென்று வருவது வழமை ..அந்த வகையில் இன்றும் போய் வந்தேன்..ஒரு குறிப்பிட்ட யூனிற்குள் சென்ற போது அங்கு நின்ற வைத்தியர் சிவரோடு சாய்ந்து நின்று மேலே பார்த்துத்த வாறு நின்றார்..இது எங்கே போய் முடியப் போகிறதோ என்ற எண்ணப்பாடு போலும்...இப்படியாகத் தான் வைத்திய  வட்டாரங்களின் நடை முறை இருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

எனது (இந்திய) நண்பர் ஒருவர். முதன்மை வெளி மக்கள் வைத்தியர் (Chief emergency medical doctor) , வீட்டிற்கு வருவதில்லை. இரண்டு மகன்களை ஒருதடவை மட்டுமே வந்து பார்த்துள்ளார், கடந்த ஒரு மாதத்தில். 

அவர், தற்பொழுது உயிலை இலத்திரினியல் ஊடாக எழுதி உள்ளார். 

Link to comment
Share on other sites

 
Every Canadian who earned at least $5000 in the past year (regardless of eligibility for EI) and who has lost their income due to Covid-19 will soon be eligible for $500/week through the Canada Emergency Response Benefit. Sign up through your My CRA account

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்.

ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்.

ஏப்ரல் 6ஆம் திகதி, திங்களன்று, ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள், திரு. மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) மற்றும் திரு. நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) ஆகியோருடன் இணைந்து 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' எனும் முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் முயற்சியினூடாக ஸ்காபரோவிலுள்ள தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் 180 முதியோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கினர்.

'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' என்ற முயற்சி முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் வகையில் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் விதத்தில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விஜய் தணிகாசலம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததையிட்டு இவர் இம்முயற்சியினை ஆரம்பித்து வைத்தார்.

"முதியோர் குடியிருப்பில் வாழும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து 120 முதியோர் இல்லங்களுக்குத் தேவையான பால், பாண், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட உணவுகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையிட்டு நான் எனது நண்பர்களுடனும் எனது பகுதியிலுள்ள வணிகர்களுடனும் கலந்துரையாடினேன். இத்தருணத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் முழுக் குடியிருப்புகளுக்குமான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் தாமே வழங்க முன்வந்த மனோ சுப்பிரமணியம் அவர்களையும் நவநீதன் கந்தசாமி அவர்களையும் நான் பாராட்டுகிறேன். இக்கட்டான இச்சூழ்நிலையில் ஒருவரையொருவர் பராமரிக்கும் ஒன்ராறியோவின் மாண்புக்கு இவர்கள் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்" என சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.

"இக்கட்டான இவ்வேளையில் நாம் ஒரே சமுகமாக இணைந்து எமது முதியவர்களுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாதது. மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசிய உடனேயே முதியோருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகவே அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிவகைகளையும் மேற்கொண்டோம்" என மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) தெரிவித்தார்.

இதுபற்றி நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, "எம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பராமரிப்பதும் அவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையாகும். சூழ்நிலைக்கேற்ப எமது முதியோர்கள் தம்மைத் தனிமைப்படுத்தும் சரியான முடிவை மேற்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தம்மையும் தம்மைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பது முக்கியமானதாகும்" என்றார்.

"வாரந்தோறும் முதியோர் குடியிருப்பில் உள்ள வயதானவர்களுக்குமான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை தன்னார்வலர்கள் வழங்கவுள்ளனர். இதன்போது, இவர்கள் உடல் ரீதியான சமுக இடைவெளி விதிகளைப் பேணுவதுடன், தொற்றுநோய் பரவல் தடுப்பு வழிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடிப்பர். கருணை மட்டுமே நாம் இத்தருணத்தில் பிறரிடம் பரப்பவேண்டியதொன்றாகும்" என மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

நெருக்கடியான இவ்வேளையில், உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ மளிகைப் பொருட்கள், மருந்துகள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படின், ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு vijay.thanigasalam@pc.ola.org என்ற மின்னஞ்சலில் அல்லது (416) 283-8448 என்ற எண்ணில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தகவலையும் பதிவுசெய்யுங்கள்.

நன்றி

விஜய் தணிகாசலம்
ஸ்காபரோ - றூஜ் பார்க்கிற்கான மாநில சட்டமன்ற உறுப்பினர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் மேஜை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார், காலணிகள், சூட் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராடடப படவேண்டிய விடயம்.      நன்றி

Link to comment
Share on other sites

For a long time, the messaging from Canadian health officials was that the novel coronavirus outbreak risk for Canadians was low and that efforts would be concentrated on containing the spread. Government officials were also guided by advice from the World Health Organization, which had initially discouraged travel restrictions, border closures and the wearing of masks, positions that were later criticized as the spread became increasingly dire in many countries.

As the tally of cases grew in Canada, an increasing number involved travel to and from the United States, where the current number of identified cases alone is fast approaching half a million.

Residents in both countries together made more than 65 million cross-border trips in 2017, according to Statistics Canada; the level of movement between the two countries made containment impossible without drastic measures. The 8,891 kilometre-long border was closedto non-essential travelby March 20.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 04  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his].   எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.   “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :   “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].   இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.   எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன.   நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை.   ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் 'திருமணம்' என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.   மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம்.   இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood].   பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்.   அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று   "same-sex marriages" / Part 04     [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     With the introduction of agricultural civilisation, Such as Sumeria, the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability, in other words the primary purpose of the marriage is to ensure that the man’s children are biologically his. So, While sexuality in ancient Babylon was actually extremely liberal, that was only for single persons, and marriage was rigidly stiff and controlled, as a societal function.   `Sumerian love songs’ also attests to the commonality of deep romantic attachment between couples. In The Epic of Gilgamesh (dates back to Ancient Sumer), one of the first surviving written works of the human race itself, the main character can be quoted as saying:   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   This line from The Epic of Gilgamesh paints a clearer picture of what the Babylonians thought of love. But love in Ancient Mesopotamia wasn’t at all that different from what it is today, also, as so writes a poet nearly 5,000 years ago:   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   Again during the third Tamil Sangam. We found marriage as a System in the ancient Tamil Grammar Book, Tholkappiyam, written by Tholkappiar, around 700 BC. Here he say "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் யர் யாத்தனர் கரணம் என்ப (1091)", meaning: He states that the society was being ruined by indiscriminate copulation, involving Lies, frauds. Hence the learned organised the system of marriage.   The historian Bertman writes, Among both the Sumerians and the Babylonians marriage was fundamentally an arrangement designed to assure and perpetuate an orderly society. Its prime intent was not only companionship but procreation; not only personal happiness in the present but communal continuity for the future. So marriage, as man & woman come together to form a family, is part of the culture more than 5000 years. Above all, Sumerians [ancestors of Tamils ?] were the first inventor of marriage system, as other first inventions such as writings,The Wheel, plow, sailboat, Agriculture and Irrigation.   A large and growing body of scientific evidence indicates that the intact, married family is best for children. If we were asked to design a system for making sure that children's basic needs were met, we would probably come up with something quite similar to the two-parent ideal. Such a design, in theory, would not only ensure that children had access to the time and money of two adults, it also would provide a system of checks and balances that promoted quality parenting.   The fact that both parents have a biological connection to the child would increase the likelihood that the parents would identify with the child and be willing to sacrifice for that child, and it would reduce the likelihood that either parent would abuse the child.   Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction and that society organised around the family to survive and for society to survive. It created a recognition of the idea of couples committing for life and raising children together and sharing the struggles of survival.   In general, these social rules had more benefits to society and helped our cultures and species survive. However in the last 100 years, the human race has dramatically changed. No longer we are tribes of hunter-gatherers or agriculturally based communities. We are a society of high technology. Now have telephones, radio, TV, airplanes, trains, cars, advanced medicine, genetic engineering, the Internet, birth control, abortion, cloning, test tube babies, and other things that affect society in general. We live twice as long as people did 200 years ago. In many significant ways, we are not really the same species of human as we were then.   Yes, genetically we are almost identical compared to 200 years ago, but with our new technologies, and the resulting cultural changes, there are a lot of significant differences. And those differences have made changes that directly affect marriage. For example, "till death do us part" is a lot longer commitment than it used to be. Also there is nothing that restricts individuals from committing to each other and deciding between themselves, that they are a couple, and that they intend to share their lives together. This includes people of the same sex as well as marriages between more than two people. These personal commitments are between individuals and we have freedom to choose whom we live with and whom we commit to without the State or society interfering in our personal lives.   Having said all this, my personal belief is that the title of marriage, and the word marriage, refers to the union of one man and one woman and that the word properly belongs to the heterosexual community. I base this on the biological fact of sexual reproduction and thousands of years of tradition and the biological family as the basis for my opinion.   If we open up the definition of marriage to include same sex union, then why limit it to two people? Why not three, four, or five people. Why not let people marry their pets? After all, your cat is much more likely to make a life long commitment to you than a human will and can be trusted to be more loyal and respectful of the relationship. Whatever two women / men choose to do in their private lives is nobody’s business but their own. Married love is not the same as the love between parent and child, or the love and affection between brother and sister, or other deep and lasting friendships. Sexual intercourse — not simply sexual stimulation — remains an essential element of marriage.   Where sexual intercourse is not possible in principle, marriage cannot exist. Same-sex partnerships, like friendships, can be deep and lasting, but they cannot be marriages because they lack the capacity for conjugal union. We see this truth clearly in the very etymology of the word marriage.   The word "MARRY" is from Latin maritus (married), from Indo-European “root” mari (young woman). French word for “mother” is mere or Matri [matrimony=matri+mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood.].   The natural outcome of conjugal relations is that the woman becomes a mother, thus the connection between the words “conjugal” and “marriage.”   That is why we have no problem with civil partnerships, a new institution with a new purpose for same sex couples and any others.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Ended         
    • முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும்  மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................   ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்   வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................    
    • வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி. 
    • இருக்க‌லாம் அண்ணா ஆனால் சோச‌ல் மீடியாக்க‌ளில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தொட்டு த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் ஜ‌யா நெடுமாற‌னையும் அண்ண‌ன் திருமாள‌வ‌னையும் த‌டிச்ச வார்த்தையில் எழுதுகின‌ம் க‌ருணாநிதி குடும்ப‌த்தோட‌ சேர்ந்தாப் பிற‌க்கு திருமாள‌வ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்று நான் சொல்லி தெரிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை உங்க‌ளுக்கே அவ‌ரை ப‌ற்றி தெரியும் ஈழ‌த்தை அழித்த‌ காங்ர‌ஸ் கூட‌ ஒரு போதும் கூட்ட‌னி கிடையாது என்று சொல்லி விட்டு  இப்ப‌ செய்யும் செய‌ல்க‌ளை  பார்த்து ப‌ல‌ர் கோவ‌ப் ப‌டுகின‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................................
    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 03  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல்   (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman)   போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும்.   எனவே தான் என்னைப் பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை.   ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது.   இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம்.   உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது.   தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும்.   அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல.   என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன்'   விலங்கு உலகில் ஆவணப்படுத்தப் பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?.   மனித ஓரினச் சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology].   உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.   மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.].   அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.].   இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார்.   உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி 04 தொடரும்   "same-sex marriages" / Part 03   [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     If you look objectively at marriage customs throughout history it is clear that the common themes   (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and the marriage being between a man and a woman) are related to reproductive objectives (establishing paternity and the support of children by both parents)   That is why I have no problem with civil partnerships (a new institution with a new purpose), but resist the institution of  “same sex marriage” as a product of wooly thinking, for the simple reason that neither the male nor female body was created by nature to have sex with a same sex partner – if we had been created to do so – we would all be hermaphrodites!   Recent research has found that homosexual behaviour in animals may be much more common than previously thought. Although Darwin’s theory of natural selection predicts an evolutionary disadvantage for animals that fail to pass along their traits through reproduction with the opposite sex. National Geographic somewhat favours that homosexual behaviour occurs in animals although their article leaves the question open.   In addition, every cattle farmer is familiar with the phenomenon of "bulling", cows mounting other cows; in fact, this is one of the standard signs farmers look for when determining that a cow is coming into estrus. However, it does not follow that the cows involved are showing anything analogous to human lesbian orientation. It is worthy of note, however, that some species -- for example, New Mexico Whiptail lizards--exhibit apparently homosexual behaviour. However, these lizards exhibit parthenogenesis, in which there are no males in the species. Pseudo-copulation does occur, with one lizard (higher in progesterone) taking on the "male" role, while the other takes on the "female" role. Most zoologists would prefer to say that they are showing ‘same-sex attraction or behavior’, rather than label them with our words of ‘gay’.   scientists say we should be wary of referring to animals when considering what's acceptable in human society. "There is...documented proof of cannibalism and rape in the animal kingdom, but that doesn’t make it right for humans." While some animals (like the lion) eat their young, neither supporters or opponents of "gay rights" have used this as an argument in favour of infanticide or cannibalism?   Robin Dunbar is a professor of evolutionary psychology at the University of Liverpool, England, says the bonobo's [a chimpanzee with a black face and black hair, found in the rain forests of the Democratic Republic of Congo (Zaire), believed to be the closest living relative of humans] use of homosexual activity for social bonding is a possible example, adding, "One of the main arguments for human homosexual behaviour is that it helps bond male groups together, particularly where a group of individuals are dependent on each other, as they might be in hunting or warfare.   For instance, the Spartans, in ancient Greece, encouraged homosexuality among their elite troops. "They had the not unreasonable belief that individuals would stick by and make all efforts to rescue other individuals if they had a lover relationship," Another suggestion is that homosexuality is a developmental phase people go through.   Off the back of this, there's the possibility you can get individuals locked into this phase for the rest of their lives as a result of the social environment they grow up in. "But he adds that homosexuality doesn't necessarily have to have a function. It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight. In other words, if the urge to have sex is strong enough it may spill over into non-reproductive sex, as suggested by the actions of the bonobos and macaques. However, as Dunbar admits, there's a long way to go before the causes of homosexuality in humans are fully understood.   As per history, The Sumerians were the first civilisation who initiate the first union between a man and a woman in Mesopotamia around 2350 BC and Studies revealed that marriage didn’t exist before this. The usual practice, before this, was that the men in a certain tribe had access to the women they like. When children are born, they belonged to the whole community. This is associated with the perception that humans want sexual variety.   However, things have changed when sexual morality was developed and has since influenced the social life of the people. The earliest marriage was believed to be ‘group marriage’. The union was basically between groups of men and women, and there exists shared sexual relations. The group marriage allowed polyandry, and this existed in Ceylon, India, and Tibet many years ago.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Part 04 will follow     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.