Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன்பிடியில் ஈடுபட்ட எம்மை இராணுவத்தின் மூலம் தடுத்துள்ளனர் - முல்லைத்தீவு மீனவர்கள் குற்றச்சாட்டு

Featured Replies

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

mullaitheewu.jpg


குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

IMG_4221.jpg


இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த தனியார் நிறுவன அதிகாரி பிரதேச இராணுவ அதிகாரிக்கு அழைப்பு மேற்கொண்டு தமது நிறுவனம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியை மேற்கொள்வதை தடுக்குமாறு கூறி அருகில் இருந்த இராணுவ முகாம் படையினரை ஏவி தம்மை தடுத்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர் .

இந்த நிலைமையை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் தொழில் செய்வதற்கான அனுமதி பத்திரம் போன்றவற்றை பார்வையிட்டு தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர்.

IMG_1669.jpg


ஏற்கனவே இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை குறித்த தனியார் நிறுவனம் தமது பணி ஆட்களை ஏவி தாக்குதலை மேற்கொண்டு மீன்பிடியை தடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் கரையோரங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த நிறுவனம் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களை புகைப்படம் எடுப்பதும் இராணுவத்தை ஏவி கலைப்பதும் குறித்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீனவர்களின் உறவினர்களான பெண்களிடம் கடற்தொழில் எமது பகுதி அமைந்துள்ள கடற்கைரையில் உங்கள் உறவினர்கள் மேற்கொண்டால் உங்களை பணியை விட்டு நிறுத்துவோம் என எச்சரிப்பதாகவும் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையை காரணம் காட்டி வேலை வேண்டும் என்றால் கடற்தொழிலை செய்வதை இப்பகுதியில் நிறுத்துமாறு குறித்த தனியார் நிறுவனம் சண்டித்தனம் செய்வது ஆண்டாண்டு காலமாக மீன்பிடியையே வாழ்வாதாரமாக கொண்ட எம்மை அடக்கும் செயல் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

IMG_1654.jpg


தாம் தொடர்ந்தும் இப்பகுதியில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட இந்த பணபலம் படைத்த தனியார் நிறுவனத்தின் அடாவடியை நிறுத்தி தருமாறு மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/78654

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

https://www.thaarakam.com/news/119340

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

13 hours ago, ampanai said:

கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

பாரம்பரியமா மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலில், கடற்கரையில் இடங்களை அந்த மீனவர் அனுமதியின்றி  எவனும் உரிமை கொண்டாட முடியாது.

குகதாசன் போல சில கனடா பேர்வழிகள் காசை காட்டி சுயலாபங்களுக்காக தமிழனை அழிப்பதில் சொறிலங்கா போர்குற்றவாளிகளுடன் கைகோத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

இந்தக் கண்டிக்கத்தக்க அடாவடியை அந்தப் பகுதியின் அரசியல்வாதிகள் கூட வேடிக்கைபார்க்கிறார்களா?  கடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை யாருமே உரிமைகொண்டாட முடியாது என்றதொரு விதியும் உள்ளதல்லவா? எனவே இது குறித்துக் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை உதாசீனம் செய்வதால் எழுந்துள்ள நிலைமையே இதுவாகும். 

புலம்பெயர்ந்தோர் தமது பணபலத்தால் செய்யும் தீமைகளை நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

தமிழரிடையே ஓர் உயரிய பண்பாடுள்ளது அதாவது தாங்கள் செய்யும் உதவிகளைப் படம்போட்டுக் காட்டுவதில்லை. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவண்ணம் கொடுப்பது.

தமிழர்கள் நிலத்தில் இருந்தாலென்ன, புலத்தில் இருந்தாலென்ன இந்த மரபைப் புறந்தள்ளுவதில்லை.

புறந்தள்ளி வாழ்வதோடு உபத்திரவம் கொடுத்து வாழ்பவர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது, இவர்கள் ஒரு தமிழ் தாய்குப் பிறந்திருந்தாலும், தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.