Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்தில், கொரோனா தாக்கி மரணம் - மற்றுமொருவருக்கு தொற்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார்.
 
இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொண்டபோது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.
 
அதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் இன்று -25- மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும் வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
 
குறித்த நபரான லோகநாதன் அவர்களின் குடும்பத்தினர் புங்குடுதீவில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரின் சகோதரி ஒருவர் பேர்ண் பகுதியிலும் , மருமகள் உறவுமுறையில் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.
 
லோகநாதன் நீரிழிவு நோயாளி எனவும் அவர் ஒரு சுவிஸ் உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
லோகநாதனுக்கு அந்நாட்டு மொழிப்பிரச்சினை உள்ளமையால் அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும்போது யாருடைய உதவியையும் நாடாது வைத்தியசாலைக்கும் தொடர்புகொள்ள முடியாமல் தவித்திருக்கலாம் என அப்பிரதேசவாசி மேலும் தெரிவித்திருந்தார்.
 
மேலும் அக் குடியிருப்புத் தொகுதியில் அறையில் தங்கியிருக்கும் மற்றொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் ஒரு யாழ்ப்பாணத்து தமிழர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. TW News
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:
இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொண்டபோது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.
 
அதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் இன்று -25- மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும் வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துத்துவது தான் சுவிஸ் மருத்துவமா?😪

சீனாவிலேயே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்👍

இலங்கையில் இன்னும் வந்த நோயால் இறக்கவில்லை என கூறப்பப்டும் நிலையில், புலம்பெயர் தேசங்களில் இறந்துள்ளார்கள் என்பது கவலை தருகின்றது. 

காரணம், இவர்களுக்கு வேறு ஏதும் சிக்கல் தரும் வருத்தம் இருந்ததா? இல்லை வேறு ஏதும் காரணமா ?  ( மொழி, துவேசம், ...) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் கொரோனாவுக்கு மரணமானவரின், உறவினர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

 

பிரான்சில் கொரோனா வைரசின் கோரத்திற்கு பலியானவர்களின் இறுதி நிகழ்வினை நடத்துவதற்கு பிரான்சு அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நிகழ்விற்கு 45 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்ட அதேவேளை இறுதி நிகழ்வில் மிக நெருங்கிய உற்ற உறவுகள் சிலரே கலந்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
எமக்கு நடந்த இந்தக் கொடுமை உங்களுக்கும் ஏற்படக்கூடாது எனவே அனைவரும் அரசின் சட்டங்களுக்கு மதிப்பளித்து முடிந்தளவிற்கு வீட்டில் இருக்குமாறு ஒரு வேண்டுகோளாக குறித்த உறவினர் கேட்டுக்கொண்டார்.
 
இதேவேளை பிரான்சில் கொரோனா வைரசினால் கடந்த 24.03.2020 செவ்வாய்க்கிழமை சாவடைந்த பொன்னன் குலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு குறித்து அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
 
அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விபரம் வருமாறு:-
 
எனது கணவரும் /எங்களுடைய பாசமிகு தந்தையுமான பொன்னன் குலசிங்கம் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு கடந்த 24.03.2020 அன்று மரணித்துவிட்டார்.
 
அவரது இறுதி நிகழ்வுகள் 31.03.2020 செவ்வாய்கிழமையன்று இடம்‌பெறவுள்ளது.
 
துரதிஷ்டவசமாக பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச ஒழுங்கு விதிகளின்படி, எல்‌‌லோரும் ஒன்று கூடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
 
என்னுடைய கணவர்/ எங்களுடைய தந்தை, எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி மற்றவர்களுக்கு உதவி புரிந்து வந்தவர்.
 
எங்களை மீளா துயரில் ஆழ்த்துவது என்னவென்றால், அவரது அன்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரது இறுதிநிழ்வில் ஒன்று கூடி,அவரை வழியனுப்பி வைக்க முடியாதுள்ளது தான்.
 
அவரை அறிந்தவர்கள், அவரது எழிமையையும், அவருடைய அன்பையும் ஆழமாக அறிந்திருப்பர்.
 
பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச விதிகள் விலக்கப்படும் போது (அரச விதிகளின் அடிப்படையிலான) சுகாதாரப் பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் அவரது பிறந்த நாளுக்கு அடுத்த நாளான 12.09.2020 சனிக்கிழமை நாம் ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்ய எத்தனித்திருக்கிறோம்.
 
இந்த நேரத்தில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட இரங்கல் தகவல்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 
90717181_3046171722081776_8619349324066717696_n.jpg
 

கொரோனா வைரஸ் தாக்கத்தால், மேலுமொரு இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார். பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சி, பரந்தனை சேர்ந்தவரே உயரிழந்துள்ளார்.

 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.