Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு

Featured Replies

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.


modi4_0.jpg


அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில்,

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது.

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

ஏப்ரல் 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்.

அது மாத்திரமன்றி டோர்ச் லைட் அல்லது தொலைபேசி மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்குமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தியாவில் இதுவரை 2,567 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 72 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79199

  • தொடங்கியவர்
49 minutes ago, ampanai said:

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

இறையியல் என்பதும் ஒரு ஆயுதம், அதை மோடி என்றுமே கையாளுவதில் கில்லாடி. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ampanai said:

இறையியல் என்பதும் ஒரு ஆயுதம், அதை மோடி என்றுமே கையாளுவதில் கில்லாடி. 

மனிதன் உருவாக்கிய இந்த ஆயுதத்தை வைத்து மதவாதிகள் அரசியல்வாதிகள் மதமாற்றிகள் எப்படி எல்லாம் பயன் அடைகிறார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மனிதன் உருவாக்கிய இந்த ஆயுதத்தை வைத்து மதவாதிகள் அரசியல்வாதிகள் மதமாற்றிகள் எப்படி எல்லாம் பயன் அடைகிறார்கள் 😂

மனிதன் இறைவனை உருவாக்கினான் என்றால் மனிதனை யார் உருவாக்கியது? இயற்கை என்று சொல்லி தப்பிக்க கூடாது!!

  • தொடங்கியவர்
4 minutes ago, Eppothum Thamizhan said:

மனிதன் இறைவனை உருவாக்கினான் என்றால் மனிதனை யார் உருவாக்கியது? இயற்கை என்று சொல்லி தப்பிக்க கூடாது!!

மோடிதான் !

இல்லாவிட்டால், இப்படி சொல்வாரா எவ்வாறு வைரஸை அழிக்கலாம் என்று :' ஏப்ரல் 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்.' 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு...  வேலைக்கு போகமுடியாததால்,
கையில் காசு இல்லாமல், உணவுப் பொருளை வாங்க இயலாமல்....
வறிய குடும்பத்தை சேர்ந்த  பெற்றோரின் ஆறு வயது மகன்...
நான்கு நாள் சாப்பிடாமல்... இறந்து விட்டான். 

பட்டினியால் இறக்கப் போகும் ஏழை மக்களுக்கு ஒரு, மாற்று வழியையும் காட்டாமல்...
மோடி, வாயால்... வடை சுடுவதில்,  கவனம் செலுத்துவது அழகல்ல.

இதே போக்கில் போனால்...  கொரோனாவை விட, பட்டினிச்  சாவு அதிகரிக்கும்.

  • தொடங்கியவர்
3 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்பு...  வேலைக்கு போகமுடியாததால்,
கையில் காசு இல்லாமல், உணவுப் பொருளை வாங்க இயலாமல்....
வறிய குடும்பத்தை சேர்ந்த  பெற்றோரின் ஆறு வயது மகன்...
நான்கு நாள் சாப்பிடாமல்... இறந்து விட்டான். 

பட்டினியால் இறக்கப் போகும் ஏழை மக்களுக்கு ஒரு, மாற்று வழியையும் காட்டாமல்...
மோடி, வாயால்... வடை சுடுவதில்,  கவனம் செலுத்துவது அழகல்ல.

இதே போக்கில் போனால்...  கொரோனாவை விட, பட்டினிச்  சாவு அதிகரிக்கும்.

இந்தியாவில் உள்ள வசதி படைத்த மக்கள் பல நூறு மில்லியன்கள். 

இவர்கள் தான் முன்வரவேண்டும்... பட்டினி ச்சாவை தடுக்க.   

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் இல்லாத நாடு வேண்டுமென்றால் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.....காடு அழகாய் இருப்பதற்கு காரணம் அங்கு வலிமை குன்றிய விலங்குகள் வாழ்வதில்லை.வாழ முடிவதில்லை.....இந்த விடயத்தில் பல நாடுகளுக்கு கொரோனா ஒரு ஆயுதம்/கவசம்....தக்கன இதையும் கடந்து பிழைக்கும்.....! 

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.