Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவாரணம் வழங்க தனி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குங்கள் - மாவை வடக்கு ஆளுநருக்கு கடிதம்

Featured Replies

மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்வதற்கு தனியான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குங்கள் அத்துடன் உதவிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்துமாறும் கூட்டுறவு சங்கங்களை பலபப்படுத்தி பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு கட்டுப்பாட்டு விலைகளை வெளிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசின் பிரதமரால் கூட்டப்படும் கட்சித்தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் போன்று, வட மாகாணத்திலும் மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது பயனுள்ளதாயிருக்கும் வடக்கு மாகாணத்தில் வேலையற்றோர், நாளாந்தத் தொழிலாளர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள், போரின் காரணமாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பொதுவாக வாழ்வாதாரமற்றவர்கள், ஊட்டச்சத்தற்ற குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார் முதலான தொகுதியினருக்கு உணவோ, உணவைப் பெற உதவிகளோ வழங்கப்படாமை தொடர்பில் நடவடிக்கை வேண்டும், கடலுணவு மற்றும் வேளாண்மை உற்பத்திகள் சுகாதாரம் பேணல்; விற்பனைக்கான உறுதிப்பாடு வேண்டும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு ஏனைய மாவட்டங்களிலுள்ளவாறு குறைக்கப்பட வேண்டும், அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் கையிருப்பிலிருக்க வேண்டும்,

யாழ் மாவட்டத்திற்கு வெளியில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஏனைய தெற்கு மாவட்டங்களிலும் சாதாரணமாக 1 கிலோ அரிசி ரூபா 84.00 க்கு தாராளமாகக் கிடைக்கிறது. 50 கிலோ அரிசிப் பொதி ரூ 4500.00 க்கு கிடைக்கிறது. யாழ்ப்பாணத்தில் அரிசி கிலோ ரூ120.00 முதல் ரூ140.00வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் கிலோ நெல்; ரூ35.00 க்கு கொள்வனவு செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அரசினால் ரூ50.00க்குக் கொள்வனவு செய்யப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் நெல் கையிருப்பில் குறைந்துவிட்டது.

யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களுடன் பார்க்கும் பொழுது 1 கிலோ அரிசிக்கு ரூ30.00 முதல் ரூ50.00 வரை மேலதிகமாக பணம் வேண்டியுள்ளது. ஏனைய அத்தியாவசியப் பண்டங்களுக்கும் விலை அதிகரித்துள்ளது.

சாதாரண மக்களிடம் உணவுப் பொருள் வாங்கும் சக்தி முற்றாகவே இல்லை. பொருட்கள் இவர்களால் வாங்குவதும் இலகுவானதல்ல. இந் நிலமைகளைக் கருத்திற் கொண்டு முதலாவதாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப்பயன்பாடு உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு போதிய நிதி வசதி வழங்கப்பட வேண்டும். நெல் கொள்வனவு செய்வதற்கும் அரிசி விற்பனை செய்வதற்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

நாவற்குழி களஞ்சியம்; போல் மேலும் களஞ்சியங்கள் நிறுவப்பட வேண்டும்.நெல் சந்தைப்படுத்தும் சபையில்; மாவட்டந்தோறும் கையிலிருப்பிலிருக்கும் நெல் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கையிருப்பிலிருக்கும் நெல்லை இறுதியில் வழங்கலாம். அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் அரிசி, மா, சீனி வவுனியா, அநுராதபுரம், பொலனறுவை கிழக்கு மாவட்டங்கள் வரை யாழ்.கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யலாம். அத்தியாவசியக் பொருட்கள் கொள்வனவு, விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்;

கூட்டுறவுச் சங்கங்களுக்கு நெல் விற்பனை செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபைகளிடம் உத்தரவு கொடுக்க வேண்டும், கொரோனா வைரஸ் காலம் வரை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விற்பனை வரி நீக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் அந்த அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் பெற்ற கடனை தவணையாகத் திருப்பி செலுத்தலாம்.

யாழ்.மாவட்டத்தில் வடபகுதியில் அரிசி குத்தும் ஆலைகள் கூட்டுறவுச் சங்கங்களிடம் சிலவே உள்ளன நவீன பொறிமுறையுடனான நெல், அரிசி குத்தும் ஆலைகள் மாவட்டத்தில் நிறுவ நடவடிக்கை எடுப்பதும் அவசியம். இவ்விடயத்தில் மத்திய அரசு மாகாணத்திற்கு நிதியும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

போர்க்காலத்தில் கூட்டுறவுச் சங்கங்களும் ஊழியர்களும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் போர்க்காலத்தில் சம்பளம் இல்லாமலே அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் செயல்பட்டன. இந் நடவடிக்கைகளுக்காக ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட மாகாண நிர்வாகம், அரச அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள், மருத்துவ மற்றும் அத்தியாவசியத்துறைப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய நிர்வாகப் பொறிமுறை நிறுவப்படுவது தேவையாகின்ற.என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/79537

22 minutes ago, ampanai said:

சம்பளம் இல்லாமலே அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் செயல்பட்டன

மாவை இந்த ஊழியர்களின் வருமானத்தை அடகு வைச்சு அரசியல் செய்றார்.

அந்தாள் கொமிசன் இல்லாமல் ஒண்டும் பண்ண மாட்டாரே புலம்பெயரந்த மக்களின் உலர்உணவு பொதிகளிலேயே தங்கள் விளம்பரங்களை சத்தமில்லாது ஆதரவாளர்களை கொண்டு குறுக்கால சால் விடவும் செய்தவர்கள் உண்டே

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மார்த்தாண்டன் said:

அந்தாள் கொமிசன் இல்லாமல் ஒண்டும் பண்ண மாட்டாரே புலம்பெயரந்த மக்களின் உலர்உணவு பொதிகளிலேயே தங்கள் விளம்பரங்களை சத்தமில்லாது ஆதரவாளர்களை கொண்டு குறுக்கால சால் விடவும் செய்தவர்கள் உண்டே

கட்டமைப்பு இல்லாவிட்டால் கூட்டமைப்புக்கு வருமானம் இல்லை..வோட்டும் வராது ..அதாலை கட்டமைப்பு வேண்டும்...கூட்டமைப்புத்தான் அவர்களை நியமிக்கவேண்டும்...இல்லையெனில் தீர்வை அடைவது சிரமம்..

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

கட்டமைப்பு இல்லாவிட்டால் கூட்டமைப்புக்கு வருமானம் இல்லை..வோட்டும் வராது ..அதாலை கட்டமைப்பு வேண்டும்...கூட்டமைப்புத்தான் அவர்களை நியமிக்கவேண்டும்...இல்லையெனில் தீர்வை அடைவது சிரமம்..

 

ஏற்கனவே கொடிக்கணக்கிலை பதுக்கியது காணாதாம் இவர்களுக்கு .

5 hours ago, மார்த்தாண்டன் said:

அந்தாள் கொமிசன் இல்லாமல் ஒண்டும் பண்ண மாட்டாரே புலம்பெயரந்த மக்களின் உலர்உணவு பொதிகளிலேயே தங்கள் விளம்பரங்களை சத்தமில்லாது ஆதரவாளர்களை கொண்டு குறுக்கால சால் விடவும் செய்தவர்கள் உண்டே

 தந்த சரீரத்தை  தூக்கி நிக்கவே  காசு கேட்க்கும் ஆள் மாவையர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே கொடிக்கணக்கிலை பதுக்கியது காணாதாம் இவர்களுக்கு .

 தந்த சரீரத்தை  தூக்கி நிக்கவே  காசு கேட்க்கும் ஆள் மாவையர் .

image_d2271090b1.jpg

 கூத்தைப்பு கட்ட துரைக்கு கட்டமைப்பு கேக்குது😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.